கதை கூட கேட்பதில்லை… வடிவேலு போன்று முதலில் அதை தான் கேட்கிறார் யோகிபாபு.. எதை தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் மிகப்பெரிய உச்சத்தில் இருந்தவர் நடிகர் வடிவேலு, முதலில் வடிவேல் கால்ஷீட் வாங்கிட்டு வாங்க, பின்பு ஹீரோவிடம் கால்ஷீட் வாங்கலாம் என்கின்ற நிலை தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இருந்தது. வடிவேலு எந்த அளவுக்கு உச்சத்தில் இருந்தாரோ, அதே அளவு அவரிடம் ஆணவமும் திமிரும் இருந்தது என்கிற குற்றசாட்டும் இருந்தது.

மிக பெரிய உச்சத்தில் இருந்த வடிவேலு ஒரு கட்டத்தில், இயக்குனர்கள் சொல்வது போல் நடிக்காமல், வசனம் மற்றும் காட்சிகளில் அந்த படத்தின் இயக்குனர் விருப்பம் இல்லாமல் சில மாற்றங்கள் கொண்டு வருவது. இப்படி தொடர்ந்து, அவர் நடிக்கும் படங்களில் இடையூறாக இருந்து வந்த காரணத்தினால் பல இயக்குனர்களுக்கும் வடிவேலுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனைகளாக உருவெடுத்தது.

அதேபோன்று முன்னணி நடிகர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்தது. மேலும் முதலில் கால்ஷீட் கேட்டு கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் படத்தின் கதை, எந்த மாதிரியான கேரக்டர் என்று எதுவுமே வடிவேலு கேட்பதில்லை.இது தான் என்னுடைய சம்பளம் உங்களுக்கு ஓகேவா, ஓகே என்றால் அதிகபட்சம் என்னால் இத்தனை நாட்கள் தான் கால்சீட் தரமுடியும் என்பாராம் வடிவேலு.

ஆனால் கடைசிவரை கதை எதுவுமே கேட்பதில்லை வடிவேலு, இது போன்ற நடவடிக்கை தான், சினிமாவில் அவரை காணாமல் போகச் செய்து விட்டது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்பொழுது தமிழில் டாப் 1 காமெடி நடிகராக இருக்கிறார் யோகி பாபு, வருடத்துக்கு சுமார் 30 படங்கள் வரை நடிக்கும் யோகிபாபு, பிசி நடிகராக இருந்து வருகிறார்.

யோகி பாபுவை சந்தித்து கதை சொல்ல போகும் இயக்குனர்களிடம், கதை மற்றும் படம் குறித்து எந்த ஒரு விஷயத்தையும் கேட்பதில்லை, இந்த படத்தில் நடிக்க 2 கோடி சம்பளம், அதிகபட்சம் 20 நாள் கால்ஷீட், உங்களுக்கு ஓகேவா என ஒரே கேள்வியில் அவர்களை திருப்பி அனுப்பி விடுவதாக கூறப்படுகிறது. இதனால் கதை சொல்ல போகும் இயக்குனர்கள் வருத்தத்துடன் திரும்பி வருகின்றனர்.

இது போல் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கமால் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தொடர்ந்து யோகி பாபு நடித்து வருவது, மேலும் கதை சொல்லும் இயக்குனரிடம் மரியாதை இல்லாமல் யோகி பாபு நடந்து கொண்டால், வடிவேலு போன்று சினிமாவில் காணாமல் போய் விடுவார் என எச்சரிக்கின்றனர் சினிமா துறையினர்.

ஒரே ஒரு பாடல் மொத்த படமும் குளோஸ்…லைக்கா திவால் தான்… யாரை ஏமாற்றுகிறார் மணிரத்தினம்..!