டெல்லியில் இருந்து இறங்கிய ஸ்பெஷல் டீம்… கடும் பீதியில் சிவகுமார் குடும்பம்… பினாமி சிக்கியது எப்படி.?

0
Follow on Google News

கடந்த இரண்டு நாட்களாக தமிழக சினிமா துறையினர் கதி கலங்கும் வகையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பிரபல சினிமா பைனான்சியர் அன்பு செழியன் உட்பட பல தயாரிப்பாளர்கள் குறிவைத்து வருமானவரித்துறையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர. பல முக்கிய ஆவணங்கள் வருமானவரித்துறையினர் கையில் சிக்கி உள்ளதை அடிப்படையாக வைத்து இந்த வேட்டை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

பல முன்னணி தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இதில் நடிகர் சிவகுமார் குடும்பத்தின் நெருங்கிய உறவினரான தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு க்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர. எஸ்.ஆர்.பிரபு தொடர்ந்து நடிகர் சூர்யா மற்றும் அவருடைய தம்பி கார்த்திக் ஆகியோர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்களை தயாரித்தவர்.

இவர் சிவகுமார் குடும்பத்தின் பினாமி என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. 2020 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் சினிமா பைனாசியார் அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடத்திய பின்பு பெரும்பாலான தயாரிப்பாளர்கள் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக உரையாடலை பாதுகாப்பு நலன் கருதி வாட்சப்பில் பேசி வந்துள்ளார்கள்.

ஆனால் வாட்ஸ் அப் உரையாடலையும் வருமானவரித்துறையினர் ட்ரேஸ் செய்து. அந்த உரையாடலில் சிக்கியுள்ளார் பணம் பரிவர்த்தனை தொடர்பான பேச்சுக்களை, தற்பொழுது வருமான வரித்துறை சோதனையில் சிக்கியுள்ள தயாரிப்பாளர்களுக்கு போட்டு காண்பித்து, இது நீங்கள் தானே, இது உங்கள் குரல் தானே என கேள்வி மேல் கேள்வி கேட்டு தப்பிக்க முடியாதபடி விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

நடிகர் சிவக்குமார் குடும்பத்தின் நெருக்கிய உறவினரும், சிவகுமார் குடும்பத்தின் பினாமி என்று சினிமா வட்டாரதத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசிய வாட்ஸ் அப் கால்களும் வருமான வரித்துறை அதிகாரிகளால் ட்ரேஸ் செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதில் நடிகர் கார்த்திக், சூர்யா ஆகியோரிடம் பணம் பரிவர்த்தனை குறித்து பேசிய சில முக்கிய உரையாடல்கள் சிக்கியிருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் தற்பொழுது வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளவர்கள், டெல்லியில் இருந்து வந்துள்ள ஸ்பெஷல் டீம் என்பதால், அவர்கள் கடமையில் தீவிரமாக இருப்பதாகவும், மேலும் அவர்கள் கையில் இருக்கும் ஆதரங்களை காண்பித்து விசாரணையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு தப்பிக்கவே முடியாமல், உண்மையை ஒப்பு கொண்டே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியுள்ளவர்.

இந்நிலையில் எஸ்.ஆர்.பிரபுவிடம் நடத்து வரும் சோதனையில், அவருடைய நெருங்கிய உருவினர்களான சிவகுமார் குடும்பத்தினர் சிக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், எந்த நேரமும் நடிங்கர் சூர்யா – ஜோதிகாவுக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனம் மற்றும் சிவகுமார் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தலாம் என்பதால். கடும் பீதியில் சிவகுமார் குடும்பம் இருப்பதாக கூறப்படுகிறது.

ஒரே ஒரு பாடல் மொத்த படமும் குளோஸ்…லைக்கா திவால் தான்… யாரை ஏமாற்றுகிறார் மணிரத்தினம்..!