சூர்யா பெயரை கேட்டதும் டென்ஷனான சந்தானம்… இவர்களுக்குள் என்ன பகை தெரியுமா.?

0
Follow on Google News

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காமெடியனாக பிரபலமாகி மக்கள் மத்தியில் இடம் பிடித்து, காமெடி நடிகராக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த சந்தானம் தற்போது ஹீரோவாக பல படங்கள் நடித்து வந்து கொண்டிருக்கிறார். இவருடன் இணைந்து நடித்த அணைத்து நடிகர்களுடன் நல்ல நட்பில் இருந்து வரும் சந்தானம். நடிகர் சூர்யா மற்றும் அவருடைய தம்பி கார்த்தியுடன் மட்டும் பகையுடன் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

சந்தானம் காமெடி நடிகராக பிசியாக நடித்த காலத்தில் பல படங்கள் இவருடைய காமெடிக்காக வெற்றி பெற்றது, படத்தின் ஹீரோ சந்தனமா அல்லது இந்த படத்தின் ஹீரோவாக என்று படம் பார்த்தவர்கள் கேட்கும் அளவுக்கு காமெடியில் பின்னி பெடல் எடுத்திருப்பார் சந்தானம். இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான சிவ மனசுல சக்தி, பாஸ் என்கின்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்கள் சந்தானம் காமெடிக்காகவே வெற்றி பெற்றது.

இதனால் ராஜேஷ் இயக்கத்தில் வெளியாகும் அணைத்து படங்களிலும் சந்தானத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கதை இருக்கும். இந்த நிலையில் ராஜேஷ் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் உருவான ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தின் போது கார்த்தியை படப்பிடிப்பு தளத்தில் சந்தானம் கலாய்ப்பதை பொறுத்து கொள்ள முடியமால் கார்த்திக் – சந்தானம் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து சந்தானத்துக்கு பதில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க வேண்டும் என இயக்குனர் ராஜேஷிடம் கார்த்திக் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு திட்டவட்டமாக ராஜேஷ் மறுத்துவிட்டார். இதன் பின்பு வேறு வழி இன்றி இந்த படத்தில் கார்த்திக் நடித்துக் கொடுத்தார். இதன் பின்பு கார்த்திக் மீண்டும் சந்தானத்துடன் இணைந்து நடிக்கவில்லை.

இதே போன்று நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவு படுத்துவது போல் உள்ளது என, அந்த சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில் அதே சமூகத்தைச் சேர்ந்த சந்தானம், இந்த விவகாரத்தில் சூர்யாவுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தது சூர்யா மற்றும் கார்த்திக் ஆகியோருடன் பகையுடன் தான் சந்தானம் இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் குளு குளு படத்தை பார்க்க சத்தியம் தியேட்டரில் வந்தார் சந்தானம். அப்போது அவரிடம் பத்திரிக்கையாளர் ஒருவர். நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது பற்றி கேள்வி எழுப்பினார். உடனே டென்ஷனான சந்தானம், குளுகுளு படத்தை பற்றி மட்டும் கேளுங்கள், இதைப் பற்றி எல்லாம் எனக்கு பேச நேரமில்லை என்று தெரிவித்துவிட்டு கோபத்துடன் அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார்.

லெஜெண்ட் சரவணன் திமிர் பேச்சு… அமிதாப்பச்சன், ரஜினியை பற்றி என்ன சொன்னார் தெரியுமா.?