பக்கத்து வீட்டு பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை…தர்ம அடி வாங்கிய ஜேம்ஸ் வசந்த்..!மனைவி வெளியிட்ட பகீர் தகவல்..

0
Follow on Google News

இயக்குனர் சசிகுமார் நடித்து இயக்கிய சுபராமணியபுரம் படத்தின் இசை அமைத்ததின் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த், சுப்ரமணியபுரம் படத்தின் இசை அமைப்பாளராக வாய்ப்பு கிடைக்கும் முன் கிருஸ்துவ மதம் சார்ந்த ஆல்பம் தயாரித்து வெளியிட்டு வந்தவர் சுமார் இது போன்று 400க்கு மேற்பட்ட ஆல்பம் வெளியிட்டுள்ளார், இசை கற்று கொடுக்கும் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

சும்பரமணியபுரம் படத்திற்கு பின்பு அவர் இசையில் வெளியான படங்களில் அமைந்த பாடல்கள் ஏதும் சொல்லும்படி இல்லை,இதனால் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வேலையை செய்து வருகிறார், மேலும் தொடர்ந்து அரசியல் விமர்சனங்களை தெரிவித்து சர்ச்சையில் சிக்கி வருகின்றவர் ஜேம்ஸ் வசந்த், சமீபத்தில் இளையராஜா குறித்து அவர் முன் வைத்த விமர்சனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பல பெண்களுடன் ஜேம்ஸ் வசந்தன் தொடர்பு இருப்பது குறித்து அவரது மனைவி மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததை சுட்டி காட்டி, நீங்க யோக்கியன் வேஷம் போட வேண்டாம் என ஜேம்ஸ் வசந்தனுக்கு பதிலடி கொடுத்து வரும் சம்பவம் தற்போது பொது தளத்தில் அரங்கேறியுள்ளது. 2014ம் ஆண்டு பல பெண்களுடன் ஜேம்ஸ் வசந்தன் தொடர்பு வைத்திருப்பதாக அவரது மனைவி சுகந்தி கொட்டிவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அப்போது ஜேம்ஸ் வசந்த் மனைவி கொடுத்த புகார் மனுவில் தெரிவித்ததாவது. ஜேம்ஸ் வசந்தனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததால் தங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. விஜிபி பிரசாத் தாஸின் முன்னாள் மனைவி ஹேமலதாவும் ஜேம்ஸ் வசந்தனும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.. முதல் மனைவி உயிருடன் இருக்கையில் விவாகரத்து வாங்காமல் எப்படி இன்னொரு பெண்ணை மனைவி ஆக்கிக் கொள்ளலாம் எனவே சட்டநடவடிக்கை எடுக்கும்படி சுகந்தி புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் நடத்த சில மாதங்களுக்கு முன்பு 2013ம் ஆண்டு செக்ஸ் குற்றச்சாட்டில் ஜேம்ஸ் வசந்தன் கைது செய்யப்பட்டார். பக்கத்து வீட்டு பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக,சென்னை பாலவாக்கத்தை சேர்ந்தவர் ராதாதேவிபிரசாத் நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில் பக்கத்து வீட்டு பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஜேம்ஸ் வசந்தனை போலீசார் கைது செய்யபட்டர்.

பக்கத்துக்கு வீட்டு பெண்ணுக்கு ஜேம்ஸ் வசந்த் செக்ஸ் தொல்லை கொடுத்தது குறித்து விசாரித்ததில், ஜேம்ஸ் வசந்த் பக்கத்து வீட்டு பெண்ணுடன் தகாத முறையில் நடக்க முயற்சி செய்ததாகவும், ஒரு கட்டத்தில் அந்த பெண்ணுக்கு செஸ் தொல்லை கொடுக்க முயன்ற பொது, அந்த பெண்ணிடம் தர்மஅடி வாங்கியதாக கூறப்படுகிறது. இதன் பின் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு ஜேம்ஸ் வசந்த் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.