விஜய் உடன் நடிக்க adjustment செய்ய வேண்டும்… தனக்கு நடந்ததை கண்ணீருடன் பகிர்ந்த பிரபல நடிகை.

0
Follow on Google News

சினிமாவில் மிகப்பெரிய ஹீரோவாக, ஹீரோயின் ஆக அல்லது காமெடியனாக வலம் வர வேண்டும் என்று ஏராளமான கனவுகளுடனும் ஆசைகளுடனும் பலர் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். அப்படி வாய்ப்பு தேடுபவர்களுக்கு சினிமாவில் எளிதில் வாய்ப்பு கிடைத்து விடுவது இல்லை. ஒருவர் சினிமாவில் கால் தடம் பதிப்பதற்கு முன்னதாக ஏராளமான அவமானங்களையும் பிரச்சனைகளையும் சர்ச்சைகளையும் சந்திக்க வேண்டியது இருக்கிறது.

குறிப்பாக அட்ஜஸ்ட்மென்ட் என்பது சினிமா கனவோடு இருப்பவர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. எத்தனை சிரமங்களையும் தாண்டி எத்தனையோ ஹீரோ ஹீரோயின்கள் மற்றும் துணை நடிகர்கள் சினிமாவில் சாதித்திருக்கிறார்கள். சினிமாவில் வாய்ப்பு கேட்டு வருபவர்களிடம் நடிக்க தெரியுமா என்று கேட்பதை விட இயக்குனர்கள் தயாரிப்பாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய முடியுமா என்று கேட்கும் நிலை தான் பெரும்பாலும் சினிமாவில் அதிகம் இருக்கிறது.

இது போன்ற பிரச்சனை சினிமாவில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் இருக்கிறது என்றாலும், சினிமாவில் பிரதானமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை அட்ஜஸ்ட்மென்ட் கொடுத்து சில நடிகைகள் ஓபன் ஆக பேசி இருக்கின்றனர். அந்த வகையில் பாலாம்பிகா என்ற நடிகை ஷகிலா எடுத்த பேட்டியில் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி வெளிப்படையாக பேசியிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தவர் நடிகை பாலாம்பிகா. இவர் சீரியல்களிலும் நடித்துள்ளார். இவருடைய தந்தையை பழம்பெரும் இயக்குனர் கோபாலகிருஷ்ணனிடம் உதவியாளராக பணிபுரிந்தவர்.
இதனால் அவருடைய தந்தை தனது மகளையும் சினிமாவையும் நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு மகள் பாலாம்பிகா விற்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

அதன்படி சினிமாவில் களம் இறங்கிய பாலாம்பிகா, தம்பிக்கு ஒரு பாட்டு என்ற படத்தில் முரளிக்கு ஜோடியாக நடித்துள்ளார். அந்தப் படத்தை தொடர்ந்து பல படங்களிலும் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததாம். இருப்பினும் பாலாம்பிகா வின் தந்தை மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.
அதாவது 90களில் ஆரம்பத்தில் வளர்ந்து வரும் நடிகர்களாக இந்த விஜய் மற்றும் பிரசாந்துடன் ஜோடியாக நடிப்பதற்கு பாலாம்பிகா விற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஆனால் அவர்களின் படத்தில் நடிக்க வேண்டும் என்றால் பாலாம்பிகை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்கள். இதனாலேயே பாலாம்பிகா வின் தந்தை அந்தப் பட வாய்ப்புகளை நிராகரித்து விட்டாராம். ஒருவேளை அன்று விஜயுடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிடாமல் இருந்தால், இன்று என்னுடைய ரேஞ்ச் வேற மாதிரி இருந்திருக்கும். எல்லாத்துக்கும் காரணம் என் அப்பா தான் என்று பாலாம்பிகா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நடிகை பாலாம்பிகை இவ்வாறு வேதனையுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, குறிப்பிட்டு பேசிய சகிலா, “ஒருவேளை அன்று அட்ஜஸ்ட்மென்ட் செய்திருக்கலாம் என்று நினைக்கிறாயா” என்று கேள்வி எழுப்பினார். “என்ன சொல்வதென்று தெரியவில்லை..எல்லாரும் தான் சினிமாவில் நடிக்கிறார்கள் ஆனால் என் தந்தை வேண்டாம் என்று கூறிவிட்டார்” என்று பாலாம்பிகா பதிலளித்துள்ளார். சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பாலாம்பிகை கூறிய தகவல்கள் ரசிகர்களிடையே பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here