ஸ்கூல் பீஸ் கட்ட பணம் இல்லை…கதறி அழுத தாய்… கடவுளாக உருவெடுத்த kpy பாலா..

0
Follow on Google News

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. பாலா நடிகர் மட்டுமில்லாமல், சமூக அக்கறை கொண்ட நபரும் ஆவார். இவர் தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன் பகுதியில் உள்ள சிறியவர்களை படிக்க வைப்பதுடன், ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவ செலவிற்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்தும் வருகிறார்.

சமீபத்தில் கூட இவர் தன்னுடைய பிறந்த நாளை ஒட்டி முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்தார். இவருக்கு சின்னத்திரை மூலமாகவும் சினிமா மூலமாகவும் அவர் செய்யும் சமூக சேவை மூலமாகவும் எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். முதியோர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்தி குடுப்பது வெண்டிலேட்டர் உட்பட உயிர்காக்கும் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, மருத்துவ தேவைக்காக மக்கள் பயன்படுத்த ஆட்டோ வழங்குவது என பல சமூக சேவைகளை செய்துவருகிறார் பாலா.

பாலா சிறந்த நடிகர், காமெடியன் என்பதை தாண்டி, மனிதநேயம் மிக்கவர் என்பதை சமீப காலமாக நிரூபித்து வருகிறார். சம்பாதிக்கும் பணத்தை தன்னுடைய குடும்பத்திற்கு சேர்த்து வைப்பவர்கள் மத்தியில், தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை, ஏழை எளிய மக்களுக்கு செலவழித்து வருகிறார். இதுவரை மலை கிராம மக்களுக்கு உதவும் நோக்கிலும், ஆதரவற்றோருக்கு உதவும் நோக்கிலும், ஆம்புலன்ஸ், ஆட்டோ போன்றவற்றை வாங்கி கொடுத்துள்ள பாலா, மழை வெள்ளம் சென்னை பகுதியை சூழ்ந்த போது , தன் கையில் இருந்த மொத்த பணத்தையும், ஏழை எளிய மக்களுக்கு கொடுத்தார்.

KPY பாலா தான் செய்து வரும் தொடர் உதவிகளால் மக்களிடம் பெரும் பாராட்டுக்களை பெற்று வருகிறார். பொது மக்களிடமிருந்து அவருக்கு பல கோரிக்கைகளும் குவிந்து வருகின்றது. இந்த நிலையில் தான் திருவண்ணாமலை மாவட்டம் இரும்பேடு அரசினர் மேனிலைப்பள்ளியில், பல காலமாக மாணவர்கள் கழிப்பறை வசதி இன்றி அவதிப்படுவதாகவும், அதை நிறைவேற்றி தர வேண்டுமென்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

KPY பாலா இந்த கழிப்பறை வசதியை மேம்படுத்த உடனடியாக 5 லட்சம் முன்பணம் அளித்தார், மேலும் இந்த கழிப்பறை வசதியை தன்னால் முழுமையாக செய்து தர முடியாதென்பதால், நடிகர் ராகவா லாரன்ஸ் மாஸ்டரை அணுகியுள்ளார். உடனடியாக உதவ வந்த ராகவா லாரன்ஸ் மாஸ்டர், பாலாவை பாராட்டியதுடன், வெகு உற்சாகமாக உதவிப்பணிகளை தானும் இணைந்து செய்து தருகிறேன் என வாக்குறுதி அளித்தார்.

இப்படியான நிலையில் பாலாவுடன் நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் இணைந்து கஷ்டப்படும் மக்களுக்கு உதவி வருகிறார்கள். இப்படி பல உதவிகளை செய்து வரும் பாலாவை சிலர் குட்டி ராகவா லாரன்ஸ் என்று கூட அழைத்து வந்தனர். பாலாவை போல பல உதவிகளை செய்து வருபவர் ராகவா லாரன்ஸ். சொல்லப்போனால் பாலாவிற்கு முன்பே பல ஆண்டுகளாக உதவிகளை செய்து வருகிறார் லாரன்ஸ்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு விருது விழாவில் கூட பாலாவை பாராட்டி இருந்தார் லாரன்ஸ். இதனிடையே சமீபத்தில் புரட்சி கலைஞர் விருது பெற்ற பாலா, அந்த விருதை எடுத்துக்கொண்டு கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு பெண் தனது மகனின், படிப்பு செலவுக்கு பணம் இல்லை என்று சொல்ல, உடனடியாக பாலா தனது கையில் இருந்த பணம் முழுவதையும் அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் கண்ணீர்மல்க பாலாவுக்கு நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பாலாவின் செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here