நண்பர் மகளுடன் முன்னனி நடிகர் தனி குடித்தனம்.. மகளை மீட்க நடிகரின் மனைவியிடம் கதறி அழுத அந்த நண்பர்.

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் என சுமார் 20 படங்கள் வரை நடித்த இந்த நடிகரை ஆரம்ப கட்டத்தில் நடித்திருந்தாலும், இந்த நடிகர் யார் என்று மக்களுக்கு தெரியாது. தமிழ் சினிமாவில் சைக்கோ இயக்குனர் என்று அழைக்கப்படும் அந்த இயக்குனரின் முதல் படத்தில் நடித்த இந்த நடிகர் நடித்து, அந்த ஒரே படத்தில் தனக்கென ஒரு நடிகருக்கான அங்கீகாரத்தையும் பெற்றார்.

இதன் பின்பு தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை அமைத்து முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்தார். கடந்த பத்து வருடங்களாக இந்த நடிகர் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவி வரும் நிலையில். அடுத்தடுத்து இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் படங்களின் மீது, மிக பெரிய நம்பிக்கையில் இருந்து வரும் இந்த நடிகர் பற்றிய தகவல் ஒன்று வெளியாகிறது.

இந்த நடிகரின் நண்பர் வீட்டில் அனைவரிடமும் சகஜமாக பழகி வந்துள்ளார், அந்த நடிகரின் நண்பரும் தனது குடும்ப உறுப்பினர்களை நண்பனின் மேல் இருந்த நம்பிக்கையில் நெருங்கி பழகுவதற்கு அனுமதித்துள்ளார்கள். ஆனால் அந்த நண்பரின் மகள் இந்த நடிகரின் மீது காதல் வயப்பட்டுள்ளார்.ஒரு கட்டத்தில் நடிகரும் அவருடைய நண்பரின் மகளின் நெருக்கம் அதிகரித்துள்ளது.

ஒரு கட்டத்தில் அந்த நண்பரின் மகளுடன் தனி குடித்தனம் நடத்த ஆரம்பித்து விட்டார் அந்த நடிகர். இதனைத் தொடர்ந்து அந்த நடிகரின் நண்பர் நேரடியாக நடிகரின் மனைவியிடம் நடந்த விஷயத்தை தெரிவித்து, உங்கள் கணவருக்கு திருமணம் முடிந்த ஒரு பெண் இருக்கிறார். திருமண வயதில் ஒரு ஆண் இருக்கின்றார். இந்த வயதில் நான் அவரை என் குடும்ப உறுப்பினரிடம் நம்பி பழக விட்டதற்கு தற்பொழுது என் மகளிடம் தனி குடுத்தனம் நடத்தி வருகிறார்.

அவரிடம் இருந்து என் மகளை மீட்க நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும் என கதறி அழுதுள்ளார் அந்த நண்பர். இதனைத் தொடர்ந்து அந்த நடிகரின் மனைவி நடிகரை கடுமையாக கண்டித்த போது, அதற்கு அந்த நடிகர் நானாக விரும்பி போகவில்லை, அந்தப் பெண் தான் என்னை விரும்பி வந்துள்ளார், என் மீது எந்த தவறும் இல்லை என தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் பல பிரச்சினைகளுக்கு பின்பு அந்த நடிகரிடம் இருந்து அந்த நண்பர் தன்னுடைய மகளை மீட்டு உள்ளார்.

இதன் பின்பு அந்த நடிகரின் மனைவி அந்த நடிகரின் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அதில் உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் எனது கணவரை பழக விடாதீர்கள் என்று செய்தி அனுப்பி நடந்த விஷயத்தை தெரிவித்துள்ளார் அந்த நடிகரின் மனைவி என கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு நடந்ததாக கூறப்படுகிறது.

என் வீட்டு பக்கமே வர கூடாது என விரட்டியடிப்பு… வடிவேலு – சுந்தர் சி இடையில் நடந்தது என்ன தெரியுமா.?