முன்னனி நடிகையுடன் ஒரே வீட்டில் ஜெய் அஜால் குஜால்.. யார் அந்த நடிகை தெரியுமா.?

0
Follow on Google News

சுப்பிரமணியபுரம் படத்தில் ஹீரோவாக அறிமுகமான ஜெய் சினிமாவில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை என்றாலும், அவருக்கென்ன ஒரு ஸ்டைலில் சில படங்களின் நடித்து அவருக்கான இடத்தை தக்க வைத்து வருகின்றார். சுப்பிரமணியபுரம், சென்னை 28, போன்ற சூப்பர் ஹிட் படங்களில் ஜெய் நடித்திருந்தாலும் அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்களின் கதை தேர்வுகளில் கோட்டை விட்டுவிட்டார் ஜெய் என்கின்ற விமர்சனமும் உண்டு.

இந்த நிலையில் நடிகை அஞ்சலியுடன் கிசுகிசுக்கப்பட்ட ஜெய், இருவரும் ஒரே அப்பார்ட்மெண்டில் வாழ்ந்து வந்த நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர், இந்த நிலையில் சமீபத்தில் வெப் சீரியஸ் ஒன்றில் நடிகை வாணி போஜன் உடன் ஜோடியாக நடித்த ஜெய், தற்பொழுது அவருடன் நெருங்கி பழகி வருகிறார், வாணி போஜன் இருக்கும் இடங்களில் எல்லாம் கூடவே ஜெய் இருந்து வருகிறார்.

இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில். வாணி போஜனுக்கு கதை சொல்ல வரும் இயக்குனர்கள் கூடவே ஜெய் இருப்பதால் தயக்கம் காட்டிவிட்டு அடுத்த முறை வருவதாக கதை சொல்லாமல் திரும்பி செல்வதாக கூறப்படுகிறது. மேலும் வாணி போஜன் உடன் ஜெய் அமர்ந்து கொண்டு அவரும் வாணி போஜன் நடிக்கும் படத்தின் கதையை கேட்டு வருகிறார்.

ஏற்கனவே நடிகை அஞ்சலியுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை ஜெய் வாழ்ந்த போது. அஞ்சலி இருக்கும் இடமெல்லாம் சென்றுள்ளார். ஒருமுறை அஞ்சலி படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது இயக்குனர் அஞ்சலியை கடுமையாக பேச ஜெய் கோபப்பட்டு இயக்குனரை அடித்து விட்டதாக கூட தகவல் வெளியானது.இதனால் அஞ்சலி மார்க்கெட் மிக பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

பின்பு ஜெய் மது அருந்துவது அதிகமானதால் அடிக்கடி அஞ்சலி – ஜெய் இடையே ஏற்பட்ட மோதல் இருவரும் நிரந்தரமாக பிரிந்தனர். ஆனால் தற்பொழுது ஜெய் மது அருந்தும் பழக்கத்தை கைவிட்டுவிட்டதாக கூறப்படும் நிலையில், வாணி போஜன் உடன் ஒன்றாக சுற்றி வரும் ஜெய் அவர் கலந்து கொள்ளும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று விடுவதாக கூறப்படுகிறது.

இதனால் வாணி போஜன் புதிய படத்தில் ஒப்பந்தமானால், ஜெய் படப்பிடிப்பில் வந்து அமர்ந்து கொண்டு ஏற்கனவே அஞ்சலி விவகாரத்தில் இயக்குனர் உடன் சண்டையிட்டது போன்று, கடும் டார்ச்சர் செய்வார், என்பதால் வாணி போஜனை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய இயக்குனர்கள் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

என் வீட்டு பக்கமே வர கூடாது என விரட்டியடிப்பு… வடிவேலு – சுந்தர் சி இடையில் நடந்தது என்ன தெரியுமா.?