சொல்லி அடித்தது போல் சூர்யா முகத்தில் கரியை பூசிய ஹரி… வருத்தத்தில் சூர்யா… என்ன நடந்தது தெரியுமா.?

2
Follow on Google News

குடும்பங்கள் கொண்டாடும் வகையில் திரைப்படங்களை எடுத்து, தனக்கென ஒரு ரசிகர்களை உருவாக்கியவர் இயக்குனர் ஹரி. இவருடைய முதல் படம் நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான தமிழ் சூப்பர் ஹிட் ஆனது. நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான இரண்டாவது படம் சாமி மெகா ஹிட் கொடுத்து, இயக்குனர் ஹரியை மிக பெரிய உச்சத்தில் அமரவைத்தது, இப்படி தொடர்ந்து மாஸ் படங்களை கொடுத்து இவர் படத்தில் நடிக்கும் ஹீரோக்களை மாஸ் ஹீரோவாக பிரதிபலிக்க செய்தார் ஹாரி.

ஹரி இயக்கத்தில் 2013ம் ஆண்டு வெளியான சிங்கம் 2 படத்திற்கு பின்பு அவர் இயக்கத்தில் வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை இதனால் சினிமாவில் மிக பெரிய சரிவை சந்தித்து இருந்த ஹரி, மீண்டும் ரீ – என்ட்ரி கொடுக்க ஒரு ஹிட் படம் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார் ஹரி. கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் 3 எதிர்ப்பார்த்த வெற்றியை தரவில்லை, அதனை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் வெளியான சாமி 2 படுதோல்வியை தழுவியது.

இந்நிலையில் தற்பொழுது வெளியாகி திரையரங்கில் ஓடி கொண்டிருக்கும் படம் யானை, இந்த படம் இயக்குனர் ஹரிக்கு சினிமாவில் வாழ்வா.? சாவா.? என அவருடைய சினிமா எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் படமாக கருதப்பட்டது. ஹரி மைத்துனர் நடிகர் அருண் விஜய், நடிகை பிரியா பவானி சங்கர் என பல சினிமா நட்சத்திரங்கள் நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளியாகியுள்ள யானை படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்கில் ஓடி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான சாமி 2 தோல்விக்கு பின்பு, தன்னை மீண்டும் சினிமாவில் நிலைநிறுத்தி கொள்ள அடுத்த படம் பிரமாண்டமாக எடுக்க வேண்டும் என திட்டமிட்டு நடிகர் சூர்யாவை சந்தித்து படத்தின் கதையை தெரிவித்துள்ளார். சூர்யாவுடன் இனைந்து 5 படங்கள் பணியாற்றியுள்ள ஹரிக்கும் சூர்யாவுக்கும் நெருக்கிய நட்பு உண்டு அதன் அடிப்படையில் சூர்யாவுக்காக கதையை தயார் செய்தார் ஹரி.

கதையை ஓகே செய்தார் சூர்யா. இதனை தொடர்ந்து ஹரி – சூர்யா கூட்டணியின் புதிய படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியானது, படத்திற்கு அருவா என பெயரிடப்பட்டது. சூர்யா நடித்த சூரரை போற்று படம் முடிந்த உடன் ஹரி இயக்கும் அருவா படத்தில் சூர்யா இணைவதாக இருந்தது. ஆனால் ஹரியை காக்க வைத்து விட்டு ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் என அடுத்தடுத்து சூர்யா வேறு படங்களில் கமிட்டாகி கொண்டே இருந்தார்.

இதனை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் கடைசியாக வெளியான சாமி 2 படம் தோல்வி அடைந்துள்ளதால், ஹரி இயக்கத்தில் சூர்யா தயக்கம் காட்டுவதாக இயக்குனர் ஹரிக்கு தகவல் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து செம்ம டென்ஷனான ஹரி, அவர் என்னய்யா எனக்கு வாய்ப்பு கொடுப்பது, இதே கதையில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்து, அந்த படத்தை மிக பெரிய ஹிட் அடிக்க வைத்து சூர்யா முகத்தில் கரியை பூசாமல் விடமாட்டேன் என ஹரி தனக்கு நெருக்கமான சினிமா துறையினரிடம் தெரிவித்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் ஹரி சொல்லி அடித்தது போன்று, சூர்யா முகத்தில் கரியை பூசியது போன்று, அவருடைய மைத்துனர் வைத்து சூர்யாவுக்காக தயார் செய்த கதையை, படத்தின் தலைப்பை மட்டும் மாற்றிவிட்டு வெற்றியும் பெற்றுள்ளார் ஹரி என்றும், இந்த படத்தில் என் நடிக்கவில்லை என்று சூர்யா நிச்சயம் வருத்தப்படுவார் என்றும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுவது குறிப்பிடதக்கது.

அச்சரியமூட்டு நயன்தாரா வீட்டு பாத்ரூம்… என்னனென்ன சிறப்பு அம்சங்கள் தெரியுமா.?வாயை பிளக்கும் பிரபலங்கள்..

2 COMMENTS

  1. I do trust all of the ideas you have introduced in your
    post. They are really convincing and will definitely work.
    Nonetheless, the posts are too brief for starters. Could
    you please prolong them a bit from subsequent time?
    Thank you for the post.

Comments are closed.