லண்டனை சேர்த்த இலங்கை பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட விஜய், திருமணத்துக்கு முன்பு தன்னுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகைகளுடன் கிசு கிசுவில் சிக்கி வந்தாலும் திருமணத்துக்கு பின்பு எந்த ஒரு நடிகையுடன் கிசு கிசுவில் சிக்கவில்லை. திருமணத்துக்கு முன்பு தொடர்ந்து ஒரே நடிகையுடன் அடுத்தடுத்து படங்களில் நடித்த விஜய், திருமணத்துக்கு பின்பு அதுபோன்ற எந்த ஒரு நடிகையுடன் நடிக்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் இயக்குனர் தரணி இயக்கத்தில் விஜய் – திரிஷா ஜோடி சேர்ந்து நடித்த படம் கில்லி, இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் படம், மேலும் இந்த படத்தில் விஜய் – திரிஷா இருவருக்கும் இடையில் செமிஸ்டரி அருமையாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது என அப்போது பரவலாக பேசப்பட்டது. மேலும் கில்லி படத்தின் போது விஜய் – திரிஷா இருவருக்கும் நெருக்கம் அதிகரித்து ஒருவருக்கொருவர் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.

இதன் பின்பு அடுத்து விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் தனக்கு ஜோடியாக திரிஷா வேண்டும் என இயக்குனரிடம் சிபாரிசு செய்து ஜோடியாக நடித்தார். இந்த படமும் ஹிட் அடிக்க, விஜய் – திரிஷா கூட்டணி வெற்றி கூட்டணி என பரவலாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்ததை தங்களுக்கு ஜாதகமாக்கி கொண்டது இந்த ஜோடி. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து ஆதி, குருவி என திரிஷா உடன் ஜோடி சேர்ந்து நடித்தார் விஜய்.
ஆதி படத்தின் படப்பிடிப்பின் போது படத்தின் இடைவெளியில், திரிஷா – விஜய் இருவரும் தனியாக கேரவன் உள்ளே நீண்ட நேரம் இருப்பதும், பின்பு படப்பிடிப்பு தொடங்கியதும் இருவரும் ஜோடியாக வெளியில் வருவதுமாக இருந்தனர். இது சினிமா வட்டாரத்தில் பரவலாக கிசு கிசுக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து உச்சகட்டமாக வெளிநாடு கதை களம் கொண்ட குருவி படத்தில் விஜய் – திரிஷா இருவரும் ஜோடி சேர்ந்தது அந்த ஜோடிக்கு வசதியாக போனது.
வெளிநாட்டில் படப்பிடிப்பு என்பதால் இருவரும் வெளிநாட்டில் நெருக்கமாக இருக்கும் தகவல் பத்திரிகைகளுக்கு தெரியாது. மேலும் வழக்கம் போல் படப்பிடிப்பு இடைவெளியில் விஜய் – திரிஷா இருவரும் ஒரே கேரவனுக்குள் நீண்ட நேரம் உள்ளே அப்படி என்ன செய்கிறார்கள் என படப்பிடிப்பு தளத்தில் இருப்பவர்கள் குழம்பி போகும் வகையில் இருவரும் உள்ளே இருப்பது. பின்பு படப்பிடிப்பு தொடங்கியதும் இருவரும் ஜோடியாக கையை பிடித்து கொண்டு வெளியில் வருவதுமாக இருத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர்களின் நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்க, இந்த தகவல் விஜய் மனைவி சங்கீதாவுக்கு சென்றுள்ளது. இதன் பின்பு விஜய் குடும்பத்தில் பூகம்பம் வெடிக்க, கணவர் விஜய் இனி திரிஷா உடன் ஜோடி சேர்ந்து நடிக்க கூடாது என சங்கீதா கண்டிஷன் போட்டுள்ளார். இதன் பின்பு தான் திரிஷா உடன் ஜோடி சேர்ந்து விஜய் நடிப்பதில்லை என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இதன் பின்பு திரிஷா உடன் இணைந்து நடிப்பதை தவிர்த்து வந்த விஜய், நீண்ட வருடங்களுக்கு பிறகு லியோ படத்தில் திரிஷா உடன் ஜோடியாக நடித்தார், இதில் தனக்கு ஜோடியாக த்ரிஷா தான் வேண்டும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் தெரிவித்து த்ரிஷாவுடன் ஜோடி சேர்ந்து பழைய காதலை புதுப்பித்து இருக்கிறார் விஜய், இதன் பின்பே சங்கீதா – விஜய் இடையில் மோதல் ஏற்பட்டு இருக்கிறது.
ஆனால் சங்கீதாவா இல்லை திரிஷா வா என்றால் எனக்கு திரிஷா தான் முக்கியம் என விஜய் திரிஷா பக்கம் நிற்க கணவரை விட்டு பிரிந்த சங்கீதா தற்பொழுது விவாகரத்து கேட்டு நீதிமன்றம் படிக்கட்டு ஏறி இருக்கிறார்.

