தமிழ்நாட்டை காலி செய்யும் தமிழ் நடிகர்கள்… ஆந்திராவில் குடியேற என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

தென் இந்திய சினிமாக்களின் தலைநகரமாக ஒரு காலத்தில் விலகியது சென்னை. ஏவிஎம் ஸ்டூடியோ, ஜெமினி ஸ்டூடியோ, பிரசாத் ஸ்டூடியோ, என தமிழ் , தெலுங்கு, மலையாளம், கனடா படங்கள் அனைத்தும் சென்னையில் படமாக்கப்பட்டது வந்தது, தமிழகத்தை சேர்ந்த சினிமா துறையில் டான்சர்ஸ், டெக்னீசியன், சண்டை பயிற்சியாளர் என அனைவர்க்கும் வேலை வாய்ப்பு கிடைத்து வந்தது.

ஆனால் தென் இந்திய சினிமாவை இயக்குனர் ராஜமௌலிக்கு முன், ராஜமௌலிக்கு பின் என்று தான் பிரித்து பார்க்க வேண்டும், ராஜமௌலி தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும், அவர் இயக்கிய பாகுபலி படம் ஒட்டு மொத்த தென் இந்திய சினிமாவை புரட்டி போட்டது, அதுவரை தெலுங்கு படங்களை கேலி, கிண்டல் செய்து வந்த தமிழ் திரைப்பட ரசிகர்கள் பாகுபலிக்கு பின்பு தெலுங்கு சினிமாக்களின் ரசிகர்களானார்கள்.

மேலும் ஒரு பக்கம் தமிழ் சினிமாக்கள் தோல்வியை தழுவிய நிலையில் தெலுங்கு நடிகர்கள், தெலுங்கு இயக்குனர்கள் படங்களுக்கு தமிழில் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு காலத்தில் சென்னையில் கொடி கட்டி பறந்த ஏவிஎம் ஸ்டுடியோ உட்பட பல சினிமா படப்பிடிப்பு தளங்கள் செயல் இழந்து போனது. ஆனால் ஆந்திராவில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள படப்பிடிப்பு தளங்கள் ஹாலிவுட் சினிமா தரத்துக்கு உள்ளது.

அந்த வகையில் ஆந்திராவில் ஐதராபாத்திலிருந்து 25 கிலோ மீட்டடர் தொலைவிலுள்ள ராமோஜி திரைப்படம் நகர் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிலிம் சிட்டி ஹாலிவுட் சிட்டியை விட சிறப்பான வசதி கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. பெரிய தோட்டங்கள், படம் எடுக்கும் அரங்குகள், உணவகம், கடைகள், மேலும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நடிகர் நடிகைகள் தங்கும் வகையில் நட்சத்திர ஓட்டல் என ஒரே இடத்தில் அமைத்துள்ளது.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களான அஜித்,விஜய், ரஜினி போன்ற நடிகர்கள் தற்பொழுது நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. மேலும் சென்னையில் தற்பொழுது சூழலுக்கு ஏற்ற நவீன வசதி இல்லாததால் தென் இந்திய சினிமாக்கள் பெரும்பாலும் ஆந்திராவில் உள்ள இராமோஜி பிலிம் சிட்டி மற்றும் ஹைதெராபாத்தில் செட் அமைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் ஒரு காலத்தில் சென்னையில் குடிபெயர்ந்த மலையாளம், கன்னடம், தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் தற்பொழுது இராமோஜி பிலிம் சிட்டி அருகில் புதியதாக வீடு கட்டி குடி பெயர்ந்து வருகின்றனர், மேலும் நடிகைகளும் சென்னையில் இருப்பதை விட ஹைதெராபாத்தில் தங்கினால் படவாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என்பதால் ஹைதெராபாத்தில் செட்டிலாகி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களான, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்திக் ஜெயம் ரவி, விஷால் போன்ற நடிகர்கள் இராமோஜி பிலிம் சிட்டி அருகில் புதியதாக வீடு கட்டி குடியேறும் திட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இனி வரும் எதிர்காலத்தில் அணைத்து மொழிகளிலும் படம் ஓடினால் தான் வசூலில் வெற்றி பெற முடியும் என்பதால் தான், தெலுங்கு பட இயக்குனர் படத்தில் தற்பொழுது வாரிசு படத்தில் விஜய் நடிக்கிறார்,

அதே போன்று தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் இயக்குனர் ஷங்கர். சமீபத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொதினி நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தி வாரியர், விரைவில் ஜூனியர் NTR ரை வைத்து வெற்றி மாறன் படம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் ஆந்திராவை நோக்கி தமிழ் சினிமா துறையினர் நகர்ந்து வருவது குறிப்பிடதக்கது.

தமிழ் நடிகரால் தெருவுக்கு வந்த லிங்குசாமி.. தெலுங்கு நடிகரால் தலைமிர்ந்தது எப்படி தெரியுமா.?