மாணவி ஸ்ரீநிதி மாரணம்… சமூக போராளிகள் சூர்யா – ஜோதிகா என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா.?

0
Follow on Google News

தங்களை சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களாக வெளிபடுத்தும் நட்சத்திர தம்பதியினர் சூர்யா – ஜோதிகா இருவரும், சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கொள்வார்கள். தஞ்சை பெரிய கோவிலுக்கு செலவு செய்யும் பணத்தில் மருத்துவமனைக்கும் பள்ளிகளுக்கும் செலவு செய்யலாம் என மேடை ஒன்றில் பேசி கடும் எதிப்புகளுக்கு உள்ளனார் நடிகை ஜோதிகா.

அதே போன்று கடந்த ஆட்சியில் வருடம் வருடம் நீட் தேர்வு நடைபெறும் போது, மாணவர்கள் தற்கொலை குறித்து பொங்கி எழுந்து அறிக்கை விடும் நடிகர் சூர்யா, சமீபகாலமாக நீட் தேர்வு குறித்து பேச்சு மூச்சு இல்லாமல் இருந்து வருகிறார். இரண்டு வருடத்துக்கு முன்பு நடைபெற்ற நீட் தேர்வின் போது மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு, நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கையில், நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கின்றது.

அநீதியான தேர்வு முறைகளுக்கு தங்கள் பிள்ளைகளை வாரி கொடுத்துவிட்டு வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிற பெற்றோர்களுக்கு இது வாழ்நாள் தண்டனையாக மாறுகிறது. மகாபாரத காலத்து துரோணர்கள் ஏகலைவனிடம் கட்டை விரலை மட்டுமே காணிக்கையாக கேட்டார்கள். நவீன காலத் துரோணர்கள் முன்னெச்சரிக்கையுடன் ஆறாம் வகுப்பு குழந்தை கூட தேர்வு எழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.

இதெல்லாம் கடந்து படித்து முன்னேறுகின்றவர்களை பலியிட நீட் போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள். சாதாரண குடும்பத்துப் பிள்ளைகளின் மருத்துவ கனவில் தீ வைக்கின்ற நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சமூகமாக நம் ஒன்றிணைந்து குரல் குரல் எழுப்புவோம் என நீட் தேர்வு தற்கொலைக்காக பொங்கி எழுந்தார் நடிகர் சூர்யா. இந்நிலையில் கள்ளக்குறிச்சி தற்பொழுது தனியார் பள்ளி ஒன்றில் மாணவி ஸ்ரீநிதி மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.

இவருடைய மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக மரணம் அடைந்த மனைவியின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் கலவரமாக வெடித்துள்ள நிலையில் பலர் மாணவி மரணத்திற்கு நீதி வேண்டும் என குரல் கொடுத்து வரும் நிலையில், இது வரை வாயே திறக்காமல் அமைதியாக இருந்து வரும் தங்களை சமூக போராளியாக வெளிப்படுத்தும் சூர்யா-ஜோதிகா தம்பதியினர் எங்கே என்கிற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.

தமிழ் நடிகரால் தெருவுக்கு வந்த லிங்குசாமி.. தெலுங்கு நடிகரால் தலைமிர்ந்தது எப்படி தெரியுமா.?