சரிகாவுக்காக ஒரு மாதம் தூங்காமல் விமானத்தில் பயணம் செய்த கமல்ஹாசன்..! எதற்காக தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் கமல்ஹாசன் வாழ்க்கையில் வந்து சென்ற நடிகைகள் கணக்கிட்டால் பட்டியலிட முடியாது, அந்த வகையில் வாணி கணபதி தொடங்கி, பூஜா குமார் வரை கமல்ஹாசன் இதயத்தில் குடி இருந்தவர்களை கணக்கிட முடியாது. பல நடிகையுடன் கமல்ஹாசன் கிசுகிசுவில் சிக்கியிருந்தாலும், அதை பெரிதாக பொருட்படுத்தாமல், நான் அப்படி தான் என வெளிப்படையாக ஒளிவு மறைவு இன்றி வாழ கூடியவர் கமல்ஹாசன்.

அவருடன் வாழ்ந்த நடிகைகளில் வாணி கணபதி தவிர்த்து மற்ற அனைவரும் அவர்களாவே கமல்ஹாசனை விட்டு விலகி சென்றார்கள் தவிர யாரிடமும் கமல்ஹாசன் சண்டையிட்டு பிரியவில்லை, மேலும் தன்னுடன் வாழ்ந்த அணைத்து பெண்களிடமும் மிகவும் அன்புடன் மிக கனிவாக நடந்து கொண்டார் கமல்ஹாசன் எனபதற்கு பல சம்பவங்கள் சாட்சி. கவுதமி புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த போது, அவருக்கு உறுதுணையாக இருந்து உதவி செய்தவர் கமல்ஹாசன்.

அதே போன்று நடிகை சிம்ரனை காதலித்த கமல்ஹாசன், இவர்கள் காதல் திருமணம் வரை சென்று நின்றதற்கு காரணம், சிம்ரன் தான் அவரை வேண்டாம் என தூக்கி எறிந்துள்ளார், ஆனால் கமல்ஹாசன் காதலி சிம்ரன் தன்னை விட்டு பிரிந்து சென்ற போது சோகத்தில் கவிதை வெளியிட்டது, அவர் எந்த அளவுக்கு சிம்ரனை காதலித்து வந்துள்ளார் என்பது வெளிப்பட்டது. இந்நிலையில் சரிகா – கமல்ஹாசன் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவம் ஓன்று வெளியாகியுள்ளது.

ஆளவந்தான் படப்பிடிப்பில் கமல்ஹாசன் ஊட்டியில் இருந்துள்ளார், அந்த நேரத்தில் மும்பையில் இருந்த அவரது மனைவி சரிகாவுக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அறிந்த கமல்ஹாசன், உடனே படப்பிடிப்பில் இருந்து பாதியிலே சென்றால், தயாரிப்பாளருக்கு மிக பெரிய நஷ்டம் ஏற்படும் என்பதை அறிந்து, பகலில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஊட்டியில் இருந்து கோவைக்கு வந்த கமல்ஹாசன்.

கோவையில் இருந்து விமானம் மூலம் மும்பை சென்று அங்கே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மனைவி சரிகாவுடம் சுமார் இரண்டு மணிநேரம் செலவு செய்துவிட்டு, பின்பு மும்பையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்து, அங்கிருந்து ஊட்டிக்கு படப்பிடிப்பு நடக்கு இடத்திற்கு காலையில் சரியான நேரத்தில் ஆஜராகி பகல் முழுவதும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் கமல்ஹாசன் மீண்டும் படப்பிடிப்பு முடித்த உடன் மும்பைக்கு சென்று விடுவார்.

இப்படி சுமார் ஒரு மாதம் மனைவி குணமாகும் வரை சென்று வந்த கமல்ஹாசன் ஒரு நாளைக்கு மிக குறைந்த நேரம் மட்டுமே அதுவும் விமானத்தில் பயணம் செய்யும் நேரம் மட்டுமே துங்கியுள்ளார். இப்படி தன்னுடைய மனைவி மீது அளவு கடந்த அன்பும், பாசமும் வைத்திருந்த கமல்ஹாசனை விட்டு சரிகா ஏன் பிரிந்தார் என்பது குறித்து இதுவரை இருவர் தரப்பில் இருந்தும் எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

தமிழ் நடிகரால் தெருவுக்கு வந்த லிங்குசாமி.. தெலுங்கு நடிகரால் தலைமிர்ந்தது எப்படி தெரியுமா.?