நக்மாவை நம்பி நடு தெருவுக்கு வந்த சரத்குமார்..! வாழ்கை கொடுத்த ராதிகா போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் சரத்குமார் 90களில் உச்ச நடிகராக வலம் வந்தவர், சாயா என்கிற பெண்ணை மணந்து இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனான சரத்குமார், தன் மனைவியுடன் பிரிந்து வாழ்ந்து வந்த சரத்குமார் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் அதிகம் கிசு கிசுக்க பட்டார், நடிகை ஹீரா உடன் கிசு கிசுக்க பட்ட நடிகர் சரத் குமார் அவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து நடிகை ஹீராவை வற்புறுத்த ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் சரத்குமாரை திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.

இதனை தொடர்ந்து நடிகை நக்மா உடன் கிசு கிசுக்கப்பட்ட நடிகர் சரத்குமார், இருவரும் காதலித்து வருவதாக அப்போது செய்திகள் வெளியானது, மேலும் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டு கெதர் வாழ்கை வாழ்ந்து வந்ததாக கூறப்பட்டது. நடிகை நக்மாவை காதலித்த போது தான் அதிக பணத்தை நடிகர் சரத்குமார் இழந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் சரத்குமார் – நக்மா காதல் குறித்து சினிமா பிரபலம் ஒருவர் யூ டுயூப்பில் பேசியுள்ளார் .

அதில் நக்மாவை சரத்குமார் காதலித்த போது ஒரு விலை உயர்ந்த வீடு ஓன்று சரத்குமார் வாங்கி தந்ததாகவும், நடிகை நக்மாவுக்காக வெளிநாடுகளில் சென்று படம் எடுத்ததாக தெரிவித்து , இதற்கு முன் நடிகை நக்மாவால் தான் சரத்குமார் தனது பணம் அனைத்தையும் இழந்து நடு தெருவுக்கு வந்ததாக கூறப்பட்டு வந்ததை உறுதி படுத்துவது போன்று அமைந்துள்ளது அந்த சினிமா பிரபலம் பேசியிருப்பது. இதனை தொடர்ந்து நக்மா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த சரத்குமார்.

இதன் பின்பு நடிகை தேவையானியை காதலித்து வந்துள்ளார், அப்போது தொடர்ந்து நடிகை தேவையானியுடன் பல படங்களில் ஜோடியாக நடித்து வந்த சரத்குமார் ஒரு கட்டத்தில் தனது காதலை சரத்குமார் வெளிப்படுத்தியுள்ளார், ஆனால் இதற்கு தேவையானி சம்மதம் தெரிவிக்கவில்லை, உடனே தேவையானி தாயாரை நேரில் சந்தித்து பெண் கேட்டுள்ளார் சரத்குமார், ஆனால் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனான ஒருவருக்கு என் மகளை திருமணம் செய்து வைக்க முடியாது என தெரிவித்துள்ளார் தேவையானி தாயார்.

இதனை தொடர்ந்து பணத்தை இழந்து கடும் நெருக்கடியில் இருந்து வந்த சரத்குமாருக்கு வாழ்க்கை கொடுக்கும் விதத்தில் அமைந்தது சரத்குமார் – ராதிகா திருமணம், இந்த திருமணத்துக்கு பின்பு தான் பொருளாதார ரீதியில் மீண்டும் பலம் பெற்று வந்தார் சரத்குமார், அதே போன்று நடிகை ராதிகாவை திருமணம் செய்வதற்கு முன்பு பல்வேறு நடிகைகளுடன் கிசு கிசுக்க பட்ட சரத்குமார், ராதிகாவை திருமணம் செய்த பின்பு அவரின் முழு கட்டுப்பாட்டுகளுக்குள் கொண்டு வரப்பட்டு கடும் கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்து வருகிறார் சரத்குமார் என்பது குறிப்பிடதக்கது.