ஒரு நிமிடம் கூட அங்க இருக்க கூடாது..தனுஷிடம் இருந்து மகன்களை பிரித்த ஐஸ்வர்யா.! என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் இருவரும் பிரிவதாக அறிவித்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருவருக்கும் இடையில் கடும் சண்டை நடைபெற்று, இருவரும் ஒருவொருக்கொருவர் வெறுத்து இருவரும் ஒரு மனதாக பிரிந்து வாழ்ந்து வந்தாலும், பொது வெளியில் ஒருவருக்கொருவர் யாரையும் குறை சொல்லாமல், தாங்கள் இருவரும் மிகவும் நாகரீகமானவர்கள் என்று காட்டி கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்த பின்பு அவர்களின் இரண்டு மகன்களின் நலன் கருதி மக்கள் மத்தியில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவருக்கும் எதிராக கடும் விமர்சனம் எழுந்துள்ளது. மேலும் இருவரும் பிரிவுக்கு பின் அவரவர் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். ஐஸ்வர்யா புதிய படம் இயக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தனுஷ் கடந்த சில தினங்களாக சென்னையில் ஃபிரியாக இருந்து வருகிறார்.

ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்த பின்பு தனுஷ் சினிமாவில் மிக பெரிய சரிவை சந்தித்து வருகிறார். சக நடிகைகளுடன் லூட்டி அடித்துக்கொண்டு ரஜினிகாந்த் மகளுக்கு துரோகம் செய்துவிட்டார் தனுஷ் என்கிற கடும் எதிர்ப்பு சினிமா ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது. இதனை தொடர்ந்து மனைவியை விட்டு பிரிந்த பின்பு ஊட்டியில் நடந்த படப்பிடிப்புக்கு தனது மகன்களை கூட அழைத்து சென்றார் தனுஷ். இந்த புகைப்படம் வைரலானது.

இதனை தொடர்ந்து சமீபத்தில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு தனது இரண்டு மகன்களையும் அழைத்து சென்று அங்கே மகிச்சியுடன் நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தார். இந்த புகைபடம் செம்ம வைரலானது. மேலும் ஐஸ்வர்யா தனது இரண்டு மகன்களையும் கண்டு கொள்வதில்லை என்றும், அவர் புதியதாக படம் இயக்க இருப்பதால், அந்த புதிய படத்துக்கான வேலையில் பிசியாக இருப்பதால், மகன்கள் இருவரிடமும் நேரம் செலவு செய்வதில்லை என்கிற தகவலும் வைரலானது.

இதனால் அப்பா தனுஷ் மீது தான் இரண்டு மகன்களும் அதிக பாசத்துடன் இருப்பதாகவும், அம்மாவை இரண்டு மகன்களும் வெறுப்பதாக தகவல் வெளியானது, இந்த தகவலால் தனுஷ் மீது சினிமா ரசிகர்கள் மற்றும் மக்கள் மீது அனுதாபம் பெருகியது, மேலும் ஐஸ்வர்யா மீது வெறுப்பு உண்டாக்கியது. இதனை தொடர்ந்து இரண்டு மகன்களும் அப்பா கூடவே இருக்க விரும்பியதால், தனுஷ் படப்பிடிப்பு தொடங்குவரை மகன்களுடன் நேரத்தை செலவு செய்ய திட்டமிட்டிருந்தார்.

ஆனால் மகன்கள் விவகாரத்தில் ஐஸ்வர்யாவுக்கு எதிராக பல செய்திகள் தொடர்ந்து வெளிவந்ததை அறிந்து, உடனே தனுஷிடம் இருக்கும் இரண்டு மகன்களை அழைத்துள்ளார் ஐஸ்வர்யா, ஆனால் மகன்கள் இருவரும், அப்பா படப்பிடிப்பு தொடங்கும் வரை இங்கே அப்பா கூடவே இருக்கிறோம் என தெரிவிக்க. அதெல்லாம் வேண்டாம் என கட்டாயப்படுத்தி இரண்டு மகன்களையும் தந்தையிடம் இருந்து பிரித்து அழைத்து வரபட்டிருக்கிறார்கள்.

தனுஷும் இரண்டு மகன்களிடம் அம்மா கூப்புடுறாங்களா போங்க, அவங்களுக்கும் உங்க கூட இருக்க ஆசையாக இருக்கும், அடுத்து அப்பா உங்கள திரும்ப அழைத்து வருகிறேன் என இரண்டு மகன்களையும் அனுப்பி வைத்துள்ளார். இதன் பின்பு தன்னிடம் வந்த இரண்டு மகன்களிடம் எப்போதும் இல்லாத அளவுக்கு அவர்களிடம் கொஞ்சி விளையாடிய தாய் ஐஸ்வர்யா, இரண்டு மகன்கள் தனக்கு முத்தம் கொடுப்பது போன்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அவர் தெரிவித்ததாவது.

அன்று கருவில் என்னை உதைத்த நீ… இன்று வளர்ந்து என்னை முத்தமிடுவதை நான் நேசிக்கிறேன். உங்களை எனக்கு மகன்களாக அளித்த கடவுளுக்கு நான் தினந்தோறும் நன்றி சொல்வேன். அந்த நன்றிக்கடனை திருப்பி செலுத்த ஒரே வழி பிரார்த்தனை தான். இதுதான் அன்பு, இதனை அளவிட முடியாது. இதனை நான் என்றென்றும் பொக்கிஷமாய் பாதுகாப்பேன் என ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனுஷிடம் இருந்து இரண்டு மகன்களையும் உடனே அழைத்து வந்து புகைப்படம் எடுத்து ஐஸ்வர்யா வெளியிட்டது மகன்கள் தன்னிடமும் பாசத்துடன் இருப்பதாக வெளிப்படுத்தி அனுதாபம் தேடும் முயற்சி தான் இது என சினிமா வட்டாரதத்தில் பேசப்படுகிறது.

கதை திருடுவதில் அட்லீயை மிஞ்சிய இயக்குனர் சங்கர்…. கையும் களவுமாக மாட்டிய பரிதாபம்..!