குழந்தைகளை தனுஷிடம் பிரிக்க லதா போட்ட திட்டம்..! குழந்தைகள் என்ன சொன்னார்கள் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் ஒரு மனதாக பிரிந்து இருவரும் தனி தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர், இவர்கள் மீண்டும் இணைந்து வாழ வாய்ப்புகள் இல்லை என்பது உறுதியாகி உள்ளது. இதனிடையே தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினரின் இரண்டு மகன்களும் தாய் மற்றும் தந்தை இருவருக்கு நடந்த பிரச்சனைக்கு இடையில் சிக்கி சின்னாபின்னமாக பாசத்துக்கு ஏங்கி தவித்து வருவதை அறிந்தவர்கள் மனதை உருக்கும் வகையில் அமைத்துள்ளது.

யாத்ரா, லிங்கா இருவரும் தாய் ஐஸ்வர்யாவை விட தந்தை தனுஷிடம் தான் அதிக பாசத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் பிரிவதற்கு முன்பு கூட ஐஸ்வர்யா அவரின் தோழிகளிடம் வெளிநாடு சென்று ஷாப்பிங் செய்வது, பார்ட்டிகளில் கலந்து கொள்வது என குடும்பத்துடன் செல்வதை ஐஸ்வர்யா விரும்ப மாட்டார் என்றும், ஆனால் படப்பிடிப்பு இல்லாத நேரம் தனது இரண்டு மகன்களுடன் அதிக நேரம் செலவு செய்கின்றவர் தனுஷ் என கூறப்படுகிறது.

இப்படி இருக்கையில், தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவுக்கு பின்பு தாய் மற்றும் தந்தை இருவரும் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் பாட்டி லதா ரஜினிகாந்த் உடன் போயஸ் கார்டன் வீட்டில் இருந்து வருகின்றனர் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் யாத்ரா மற்றும் லிங்கா இருவரையும் வெளியில் அழைத்து சென்று மகன்களுடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார் தனுஷ். மறுபக்கம் ஐஸ்வர்யா சினிமாவில் பிசியாக இருக்கிறார்.

சமீபத்தில் இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தனுஷ் உடன் சென்ற இரண்டு மகன்களும் அப்பா கூடவே இருக்க விரும்பியதாக கூறப்படுகிறது. தனுஷ் படப்பிடிப்பு தொடங்கும் வரை மகன்கள் விருப்பத்துக்கு ஏற்ப அவர்களிடம் நேரத்தை செலவு செய்ய முடிவு செய்துள்ளார். ஆனால் தாய் ஐஸ்வர்யாவிடம் இருந்து மகன்களுக்கு அழைப்பு வந்துள்ளது, ஆனால் இரண்டு மகன்களும் அப்பா தனுஷ் உடன் இன்னும் சில நாட்கள் இருக்க வேண்டும் என அடம் பிடித்துள்ளனர்.

ஐஸ்வர்யா பிடிவாதமாக தனுஷிடம் இருந்து இரண்டு மகன்களையும் பிரித்து அழைத்து வரபட்டிருக்கிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னை விட தனுஷிடம் இரண்டு மகன்களும் அதிக பாசத்துடன் இருப்பதை நினைத்து தாய் லதாவிடம் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா, அதற்கு தாய் லதா சில நாட்களுக்கு சினிமா வேலைகளை ஒரு ஓரமாக வைத்துவிட்டு இரண்டு மகன்களுடன் நேரத்தை செலவு செய் என அறிவுறுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து இரண்டு மகன்களுடன் தற்பொழுது நேரத்தை செலவு செய்து வருகிறார் ஐஸ்வர்யா, அதே நேரத்தில் தாய் உடன் இருந்தாலும் யாத்ரா, லிங்கா இருவரும் தந்தை தனுஷ் நினைப்பில் தான் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு குழந்தைகளின் மனநிலையை புரிந்து கொண்ட லதா ரஜினிகாந்த் இரண்டு பேரன் பிள்ளைகளிடம் தாய் ஐஸ்வர்யா பற்றி நல்ல விதமாக எடுத்து சொல்லி குழந்தைகள் மனதில் தாய் ஐஸ்வர்யா மீது அதிக பாசம் வரும் அளவுக்கு பேசியுள்ளார்.

இப்படி தாய் ஐஸ்வர்யா தான் உங்களுக்கு எல்லாம் என யாத்ரா, லிங்கா இருவரிடமும் லதா ரஜினிகாந்த் பாடம் எடுக்க, பாட்டி போர் அடிக்குது எங்களை விடுங்க என யாத்ரா, லிங்கா இருவரும் எக்ஸ்கேப் ஆகியுள்ளனர். இதன் பின்பு மகள் ஐஸ்வர்யாவை அழைத்து உன்னுடைய இரண்டு மகன்களும் அவங்க தந்தையை விட உன் மேல் பாசமாக இருக்க வேண்டும் என்றால் , அது அந்த குழந்தைகளிடம் நீ நடந்து கொள்வதை பொறுத்து தான் என மகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் லதா என கூறப்படுகிறது.

பிச்சைக்காரனுடன் இணைந்து பாலா இப்படி செய்யலாமா.? மனைவி கள்ளகாதலனிடம் லூட்டி அடிக்க இதான் காரணம்..