ஆசை காட்டி மோசம் செய்த வெற்றிமாறன்… பல கோடி இழந்த சூரி..! பாவம் என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

மதுரையில் சிறிய கிராமத்தில் பிறந்த நடிகர் சூரி சினிமா மீது கொண்ட மோகத்தினால் தனது 20 வயதில் சென்னைக்கு வந்து சினிமாவில் வாய்ப்பு தேட தொடங்கினர். 1997ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை படத்தில் சிறிய வேடத்தில் நடிக்க தொடங்கிய சூரி, ரெட், சங்கமம், வின்னர், காதல், பீமா என 18 படங்கள் வரை சிறு சிறு வேடங்களில் நடித்து சுமார் 10 வருடங்களாக சினிமா வாய்ப்புக்காக கடுமையாக போராடியவர் சூரி.

2008ம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபாடி குழு படத்தில் சூரி நடித்திருந்த புரோட்டா காமெடி காட்சி மிக பிரபலமானதை தொடர்ந்து சினிமா ரசிகர்களால் புரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டு பிரபலமானார். இதன் பின்பு காமெடி காட்சிகளில் நடிக்க இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. அடுத்த இரண்டு வருடத்தில் முன்னனி காமெடி நடிகராக உருவெடுத்த நடிகர் சூரி பிசி நடிகரானார். வருடத்துக்கு சுமார் 10 படங்கள் வரை இவரின் நடிப்பில் வெளியாகி வந்தது.

தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த நடிகர் சூரியின் சம்பளமும் கிடு கிடுவென உயர தொடங்கியது. சினிமாவில் சம்பாரிக்கும் தொகையை, அம்மா உணவகம் என்கிற பெயரில் மதுரை மாவட்டத்தில் பல முக்கிய இடங்களில் ஓட்டல் தொழிலை தொடங்கிய நடிகர் சூரி, அதை அவரின் சகோதரர்களின் பொறுப்பில் விட்டுவிட்டு தொடர்ந்து சினிமாவில் பிசியாக நடித்து வந்தார்.

நடிகர் சூரியின் கால்சீட் கிடைக்காமல் இயக்குனர்கள் தவித்து கொண்டிருக்கையில், நடிகர் சூரியை ஹீரோவாக நடிக்க வைக்க கதை ஒன்றை தயார் செய்த வெற்றிமாறன், அந்த படத்தில் சூரியை நடிக்க வைக்க நேரில் அணுகியுள்ளார். தற்போது பிசியாக வருடத்துக்கு பத்து படங்கள் வரை நடித்து வருகிறேன், இந்த நேரத்தில் ஹீரோவாக நடித்தால் மற்ற படங்களில் நடிக்க முடியாது, மேலும் தனக்கு ஹீரோ செட் ஆகாது என மறுத்துள்ளார் சூரி.

ஆனால் வெற்றிமாறன் இந்த படம் வெளியான பின்பு உங்களுக்கு ஹீரோ வாய்ப்புகள் குவியும்,பத்து படத்தில் நடிக்கும் சம்பளத்தை விட அதிகமாக ஒரே படத்தில் பெற்றுவிடலாம் என ஆசையை தூண்டி தனது படத்தில் சூரியை ஹீரோவாக்கியுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன் என கூறப்படுகிறது. சூரியும் சினிமாவில் அடுத்தகட்டத்துக்கு செல்வோம் என முடிவு செய்து விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்தார். படப்பிடிப்பு பல்வேறு பிரச்சனை காரணமாக சுமார் இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்துள்ளது. மேலும் தற்பொழுது படம் திரைக்கு வரவேண்டிய நேரத்தில்.

தயாரிப்பு நிறுவனம் ஒரு பிரச்சனையில் மாட்டிகொள்ள படம் வெளியாகுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து விடுதலை படத்தை அப்படியே போட்டுவிட்டு, நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் வெற்றிமாறன். இந்நிலையில் வருடத்துக்கு சுமார் 10 படங்கள் வரை நடித்து வந்த நடிகர் சூரி விடுதலை படத்தில் நடித்ததில் காரணமாக கடந்து மூன்று வருடத்தில் அவர் நடிப்பில் பத்து படங்கள் கூட வெளியாகவில்லை.

இதனால் கோடிகணக்கில் அவருக்கு இழப்பு என்று கூறப்படுகிறது. மேலும் சூரி ஹீரோவாக நடிப்பதால் கால்சீட் பிரச்சனை வரும் என பல இயக்குனர்கள் வரை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய தயக்கம் காட்டி வந்ததால் தற்போது சூரி கைவசம் இரன்டு அல்லது மூன்று படங்கள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஹீரோ வேசத்துக்கு ஆசை பட்டு மோசம்போகி விட்டமோ என நடிகர் சூரி வருத்தத்தில் இருப்பதாக கூறப்டுகிறது.

கதை திருடுவதில் அட்லீயை மிஞ்சிய இயக்குனர் சங்கர்…. கையும் களவுமாக மாட்டிய பரிதாபம்..!