அந்த விஷயத்தில் தனுஷை விட மோசம் ரஜினி..! மதுபோதையில் நட்சத்திர ஓட்டலில் மனைவியிடம் சிக்கிய ரஜினி..!

0
Follow on Google News

நடிகைகளுடன் தொடர்ந்து கிசு கிசுவில் சிக்கிய தனுஷ், சக நடிகைகளுடன் மது விருந்தில் கலந்து கொள்வது அவர்களுடன் தனிமையில் சொகுசு விடுதியில் தங்குவது என்று தொடர்ந்து கிசு கிசுவில் சிக்கி குடும்பத்தில் பெரும் பிரச்சனையாக வெடித்து மனைவியை விட்டு பிரிந்துள்ளார் தனுஷ். ஆனால் இந்த விஷயத்தில் மருமகன் தனுஷை விட மாமனார் ரஜினிகாந்த் படு மோசம் என்பதை நிரூபிக்கும் வகையில் ரகசிய தகவல் ஓன்று வெளியாகியுள்ளது.

டி.ராஜேந்திரன் இயக்கத்தில் அவருக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அந்த நடிகை, இவர் இயக்குனர் முத்துராமன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் ஜோடி சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறார். அந்த படத்தின் ஒரு பாடல் காட்சி காஷ்மீரில் படமாக்கப்பட்டது, காஷ்மீர் படப்பிடிப்பின் போது ரஜினிகாந்த் மற்றும் அந்த நடிகை இருவரும் நெருங்கி பழக தொடங்கியவார்கள், இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. அப்போது ரஜினிகாந்த் ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு குழந்தைக்கு அப்பாவாக இருந்துள்ளார்.

அந்த நடிகையுடன் ஜோடி சேர்ந்த ரஜினி நடித்த படத்தின் படப்பிடிப்பு முடித்தது, இதன் பின்பு தான் நடிக்கும் படத்தில் ரஜினி சிபாரிசில் மீண்டும் அந்த நடிகையுடன் ஜோடி சேர்ந்துள்ளார் ரஜினி, இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கிசு கிசுக்கள் வந்துள்ளது, அந்த நடிகையை ரஜினி தனது காரில் அடிக்கடி அழைத்து செல்வதாக கூட அப்போது பரவலாக தகவல் வெளியானது, இந்த தகவல் ரஜினி மனைவி கவனத்துக்கு சென்றுள்ளது.

இந்நிலையில் ஒரு நட்சத்திர ஓட்டலில் ரஜினி நடிக்கும் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் ரஜினியும் அடிக்கடி மது அருந்துவது, மது போதையில் பெண்களிடம் லூட்டி அடிப்பது என தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. ஒரு முறை ரஜினி அந்த நட்சத்திர ஓட்டலில் கூத்தும் கும்மாளமாக இருப்பதாக மாணவி லதாவுக்கு தகவல் சென்றுள்ளது. உடனே அந்த நடிகையாக தான் இருக்கும் என நினைத்து, கையும் களவுமாக பிடித்து விடலாம் என ரஜினி தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்றுள்ளார் மனைவி லதா.

ஓட்டலுக்கு சென்று ரஜினி தங்கியிருந்த அறை கதவை லதா தள்ளிய போது, கதவு லாக் செய்யவில்லை, அதனால் தள்ளிய உடனே திறந்துள்ளது. உள்ளே தயாரிப்பாளரும் ரஜினியும் மது அருந்தி கொண்டிருந்துள்ளார். லதா வருவதற்கு முன்பே அங்கே லூட்டி அடித்து கொண்டிருந்த பெண்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்கள் என்று கூறப்படுகிறது. மனைவியை பார்த்து ஷாக் ஆன ரஜினிகாந்த், என்ன எதற்கு இங்கெல்லாம் வருகிறாய் என கேட்டுள்ளார்.

நீங்க போதையில் மட்டையாகி விட்டதாக சொன்னார்கள் அதனால் தான் வந்தேன் என்று லதா கூறியுள்ளார். அப்படியெல்லாம் இல்லை, நான் ஸ்டெடியாக தான் இருக்கேன் நீ போ என அனுப்பியுள்ளார் ரஜினிகாந்த். இந்த சம்பவத்துக்கு பின்பு மீண்டும் அதே நடிகையுடன் மற்றொரு படத்தில் ஜோடி சேர்ந்த ரஜினிகாந்த், அந்த நடிகையுடன் அடிக்கடி சிங்கப்பூர் செல்வதாகவும், விரைவில் அந்த நடிகையை திருமணம் செய்ய போவதாக செய்திகள் வந்தது.

இது ரஜினி குடும்பத்தில் பெரும் பிரச்சனையாக வெடித்து, ஒரு வழியாக பல கட்ட பஞ்சாயத்துக்கு பின்பு அந்த நடிகையை விட்டு விலகினார் ரஜினிகாந்த் என்றும், அதன் பின்பு அந்த நடிகை ஆந்திராவை சேர்ந்த ஒரு நடிகரை திருமணம் செய்து கொண்டு ஆந்திராவில் செட்டில் ஆனார் என்பது குறிப்பிடதக்கது. இது போன்ற சம்பவங்கள் ரஜினிகாந்த் வாழ்க்கையில் பல நடந்துள்ளது என்றும், மருமகன் தனுஷை விட மாமனார் ரஜினிகாந்த் அந்த விஷயத்தில் படு மோசம் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அண்ணன் சூர்யாவுக்கு ஆதரவாக களம் இறங்கிய தம்பி கார்த்திக்…! இனிமே மிரட்டல் விடுத்தால்.. என்ன நடக்கும் தெரியுமா.?