பாலா மனைவி இரண்டாவது திருமணம்… மாப்பிள்ளை யார் தெரியுமா.? குழந்தையின் நிலைமை என்ன.?

0
Follow on Google News

இயக்குனர் பாலா மற்றும் அவரது மனைவி இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் ஒருமனதாக சட்டப்படி விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பாலா – முத்துமலர் தம்பதியினருக்கு பிராத்தனா என்கிற ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை தாய் முத்துமலர் உடன் இருந்து வருகிறது. சட்டப்படி பாலா- முத்துமலர் இருவரும் சமீபத்தில் விவாகரத்து பெற்று இருந்தாலும், கடந்த நான்கு வருடங்களாக இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

முத்துமலர் பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர், இவருடைய பெற்றோர்கள் பெரியகுளத்தில் இருந்து வருகின்றனர், ஆனால் பாலாவை விட்டு பிரிந்த முத்துமலர் சொந்த ஊரான பெரியகுளத்துக்கு செல்லாமல், சென்னையிலே தனது மகளுடன் தனியாக தங்கி வருகிறார். மகள் சென்னையில் படித்து வருவதால் சென்னையிலே தங்கி உள்ளார், மேலும் சொந்த ஊருக்கு செல்லும் திட்டம் ஏதும் முத்துமலருக்கு இல்லை என்று கூறப்படுகிறது.

முத்துமலர் கல்லூரியில் படிக்கும் போது நெருங்கி பழகிய பெரியகுளம் பகுதியில் உள்ள முக்கிய அரசியல் தலைவரின் மகன் ஒருவருடன் மீண்டும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன் நெருங்கி பழகியுள்ளார், இது தான் பாலா – முத்துமலர் இடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் என கூறப்படுகிறது. இதன் பின்பு பாலாவுடன் வாழ விருப்பம் இல்லை என திட்டவட்டமாக மறுத்த முத்துமலர் தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இதன் பின்பு அந்த அரசியல் தலைவரின் மகன் உடன் அடிக்கடி வெளிநாடு செல்வது, டெல்லி செல்வது என செம்ம ஜாலியாக இருந்து வந்துள்ளார் முத்துமலர்.இந்நிலையில் தற்பொழுது முத்துமலர் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்துள்ளதால், அடுத்து அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ஒரு தகவல் வெளியானது, இது குறித்து தீவிரமாக விசாரித்ததில் தற்பொழுது முத்துமலர் பெற்றோர்கள் முத்து மலர் என்ன விருப்புகிறாரோ அதுபடியே நடக்கட்டும் என்று விட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

மகள் பிராத்தனாவுக்கு 15 வயது என கூறப்படுகிறது. இந்நிலையில் மக்களின் எதிர்காலம் கருதி இரண்டாவது திருமணம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்பதில் முத்துமலர் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் திருமண பந்தத்தில் நுழைந்து மேலும் பிரச்சனையை சந்திக்க விரும்பாத முத்துமலர் இரண்டாவதாக திருமணம் செய்வதர்க்கு வாய்ப்புகள் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.

அதே வேலையில் தற்பொழுது வரை தன்னுடன் நெருக்கமாக இருந்த அந்த அரசியல் கட்சி தலைவரின் மகனை விவாகரத்து பெற்ற பின்பு அவருடன் எதோ ஒரு வழியில் தொடர்பில் இருந்து வந்தாலும் நேரில் சந்திப்பது கிடையாது என்றாலும், பாலா – முத்துமலர் விவாகரத்து விவகாரம் அமைதியான பின்பு,அந்த அரசியல் தலைவரின் மகனுடன் மீண்டும் முத்துமலர் அடிக்கடி வெளியில் செல்லலாம் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

அண்ணன் சூர்யாவுக்கு ஆதரவாக களம் இறங்கிய தம்பி கார்த்திக்…! இனிமே மிரட்டல் விடுத்தால்.. என்ன நடக்கும் தெரியுமா.?