சொந்த தம்பி முதுகில் குத்திய இளையராஜா.. ஆணவத்தால் அழியும் இளையராஜாவை யார் காப்பாற்றுவது.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் இசைஞானி இளையராஜா, தமிழ் சினிமாவில் டைட்டில் கார்டில் இசை, இசைஞானி இளையராஜா என பெயர் இடம்பெற்று இருந்தாலே, அந்த படத்திற்கு ரசிகர் கூட்டம் அலைமோதியது ஒரு காலம். இளையராஜாவிடம் கதை சொல்லிவிட்டு முதலில் அவரிடம் கால் சீட் வாங்கிட்டு வாங்க, இதன் பின்பு அடுத்தகட்ட வேலைகளை பார்பபோம் என தயாரிப்பாளர்கள் இயக்குனர்களை அனுப்பிய காலம் உண்டு.

இப்படி இசையால் தமிழ் சினிமாவை கட்டி வைத்திருந்த இளையராஜா சமீபத்தில் அவர் சென்னையில் நடத்திய இசை நிகழ்ச்சிக்கு கூட்டம் சரி வர வரவில்லை. இதனால் மனமுடைந்த இளையராஜா தன்னுடைய இசை நிகழ்ச்சிக்கு எப்போதும் இல்லாமல் தற்போது மிக குறைந்த அளவே மக்கள் வந்துள்ளது குறித்து தனக்கு தானே சுய பரிசோதனை செய்ததில், காரணம் தன்னுடைய ஆணவம் தான் என்பது உணர்த்துள்ளார் இளையராஜா என கூறப்படுகிறது.

இதன் பின்பு இசை ஞானி என்று அழைக்கப்படும் இளையராஜாவுக்கு தற்பொழுது வாழ்க்கையில் ஞானம் பிறந்து தனது நடவடிக்கையை மாற்றி கொண்டுள்ளார். அந்த வகையில் ஏ.ஆர். ரகுமானை அவருடைய ஸ்டுடியோவில் நேரில் சந்தித்த இளையராஜா, நம்ம இணைந்து பணியாற்றலாம் என விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காதல் செய் படத்தின் நிகழ்ச்சி இளையராஜா ஸ்டுடியோவில் நடைபெற்றது.

அதில் மிக பவ்யமாக அனைவருக்கும் வணக்கம் வைத்தவாறு இளையராஜா மிக பணிவுடன் நடந்து கொண்டார் இதற்கு காரணம் தற்போது இளையராஜா அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதை உணர்ந்து தன்னை காப்பாற்றி கொள்வதற்காக தான் என கூறப்படுகிறது, அதே வேலையில் அவருடைய தம்பி கங்கை அமரன் முதுகில் குத்திய ஒரு சம்பவம் வெளியாகியுள்ளது, அதில் கங்கை அமரன் மிக பெரிய திறமையான இயக்குனர்.

ஆனால் தன்னை விட தனது தம்பி எந்த விதத்திலும் பெயரும், புகழும் அடைந்து விட கூடாது என்பதில் தெளிவாக இருந்துள்ளார் இளையராஜா, கடைசி வரை தனக்கு எடுபிடியாகவே கங்கை அமரன் இருக்க வேண்டும் என்றும் நினைத்துள்ளார். இந்நிலையில் கங்கை அமரன் இயக்கத்தில் மிக பெரிய ஹிட் கொடுத்த படம் கரகாட்டக்காரன், இந்த படத்தை முடித்த பின்பு நடிகர் கமல்ஹாசனை வைத்து படம் இயக்க முடிவு செய்து.

படத்தின் கதையை கமல்ஹாசனிடம் தெரிவித்துள்ளார் கங்கை அமரன், கதை ரெம்ப பிடித்து போக, ஓகே செல்லியுள்ளார் கமல்ஹாசன், இந்த தகவல் அறிந்த இளையராஜா உடனே கமல்ஹாசனை தொடர்பு கொண்டு கங்கை அமரன் படத்தில் நடிக்காதவாறு செய்து விட்டார் என்றும், இளையராஜாவை பகைத்து கொண்டால் தனது படத்துக்கு இசை அமைக்க மாட்டர் என நினைத்து கங்கை அமரன் படத்தில் நடிக்க கமல்ஹாசன் கால் சீட் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

அண்ணன் சூர்யாவுக்கு ஆதரவாக களம் இறங்கிய தம்பி கார்த்திக்…! இனிமே மிரட்டல் விடுத்தால்.. என்ன நடக்கும் தெரியுமா.?