ஐஸ்வர்யாவை வீழ்த்த மகன்களை வைத்து காய் நகர்த்தும் தனுஷ்… என்ன யுக்தி தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் தங்களின் திருமண வாழ்க்கையை முடிவு கொண்டு வந்து. தாங்கள் இருவரும் ஒரு மனதாக பிரிவதாக அறிவித்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருவரும் பிரிவதாக அறிவித்த பின்பு பிரிந்த தம்பதியினரை இரண்டு குடும்பத்தினர் இணைத்து வைக்கும் முயற்சிகள் தோல்வியை தழுவியது. இந்த தம்பதியினர் பிரிவதாக முடிவு செய்ததில் முக்கிய பங்காற்றியவர் ஐஸ்வர்யா தான் என்றும் கூறப்படுகிறது.

மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்த பின்பு கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறார் தனுஷ். ஒரு கட்டத்தில் மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்த பின்பு, இனி நிம்மதியாக இருக்கலாம் என நினைத்த தனுஷ், ஆனால் சினிமாவில் மிக பெரிய சரிவை தற்பொழுது சந்தித்து வருவதால், தனது சினிமா வாழ்க்கை காப்பாற்ற வேண்டுமானால் மீண்டும் மனைவியுடன் இணைய வேண்டும் என்கிற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் தனுஷ்.

இதனால் மீண்டும் தனுஷ் இணைய விருப்பம் தெரிவித்தாலும் ஐஸ்வர்யா திட்டவட்டமாக மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் மியூசிக் ஆல்பம் ஒன்றை வெளியிட்ட ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துக்கள் தோழி என தனுஷ் டிவீட்டரில் வாழ்த்து தெரிவிக்க பதிலுக்கு ஐஸ்வர்யா நன்றி தெரிவிக்க இருவருக்கும் இடையில் சுமூக உறவு இருக்கு விரைவில் மீண்டும் இணைந்து வாழ்வார்கள் என பலர் எதிர்பார்த்தனர்.

ஆனால் இந்த சம்பவம் நடந்த அடுத்த நாள், தனது டிவீட்டர் பக்கத்தில் தனது பெயருக்கு பின்னால் இருந்த தனுஷ் என்கிற பெயரை நீக்கி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றி, இனிமேல் தனுஷ் உடன் மீண்டும் இணைந்து வாழ்வதர்க்கு சாத்தியமே இல்லை என்பதை வெளிப்படுத்தினார் ஐஸ்வர்யா. இதன் பின்பு சமீபத்தில் இரண்டு மகன்களை அடிக்கடி வெளியில் அழைத்து சென்று மகிழ்ச்சியுடன் இருந்து வருகிறார் தனுஷ்.

தாய் ஐஸ்வர்யாவை விட தந்தை தனுஷ் மீது தான் இரண்டு மகன்களும் அதிக பாசமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதில் மூத்த மகன் யாத்ரா விவரமான பையன் என்றும், தந்தை – தாய் இருவரையும் இணைந்து வைப்பதில் தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் தனுஷ் மீண்டும் மனைவியுடன் இணைந்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க இரண்டு மகன்களிடம் விருப்ப தெரிவித்ததாக தெரிகிறது.

தனுஷ் ஆசைப்படி மீண்டும் தாய் – தந்தை இருவரையும் இணைந்தும் வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள மகன்கள், அடிக்கடி தாய் ஐஸ்வர்யாவிடம் தந்தை பெருமையை பேசி வருவதாகவும், ஆனால் மகன்கள் தனுஷ் பற்றி வாயை திறந்தாலே பேச்சை மாற்றி மகன்களை ஏமாற்றி விடுகிறார் ஐஸ்வர்யா என்றும், இருந்தும் மூத்த மகன் யாத்ரா தாய் ஐஸ்வர்யாவை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் மகன்களின் இந்த யுக்தி கை கூட வாய்ப்பு இல்லை என்றும், தனுஷ் உடன் ஐஸ்வர்யா மீண்டும் இணைந்து வாழ்வதில் துளி கூட விருப்பம் இல்லை, அவர் இரண்டு மகன்களின் மனதை மாற்றுவதற்கு தான் முயற்சிப்பர், இந்த விவகாரத்தில் குடும்ப ஒற்றுமைக்காக தவிக்கும் இரண்டு குழந்தைகள் நிலைமை தான் பரிதாபத்துக்கு உள்ளது என கூறப்படுகிறது.

டென்ஷனாகி சிறுத்தை சிவாவிடம் கொந்தளித்த அஜித்குமார்..! இருவருக்கும் என்ன பிரச்சனை தெரியுமா.?