பேச்சுவார்த்தை தோல்வி… தனுஷ் திட்டவட்டமாக சொன்ன பதில் இது தான்.? கதறும் ஐஸ்வர்யா….அடுத்தது என்ன.?

0
Follow on Google News

பள்ளி பருவத்திலே சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் தனுஷ் தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை கொடுத்து முன்னனி நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்து. தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து சூப்பர் ஸ்டார் மருமகனாக வலம் வந்தவர் நடிகர் தனுஷ். இந்நிலையில் இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர்களான தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் கடந்த ஜனவரி 17ம் தேதி பிரிவதாக அறிவித்தனர்.

இவர்கள் பிரிவு கடும் விவாத பொருளாக மாறிய நிலையில், எந்த காரணத்துக்காக இவர்கள் பிரிந்தார்கள் என இருவர் மீதும் பல குற்றசாட்டுகள் மற்றும் கிசு கிசு தொடர்ந்து வந்த நிலையில். இருவரின் குடும்பத்தினர், மற்றும் இரண்டு தரப்பு நண்பர்களும் பிரிந்த தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடியை மீண்டும் இணைத்து வைக்கும் முயற்சியில் இறங்கினார்கள். தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா , ஹைதராபாத்தில் இருக்கும் மகன் தனுஷ் மற்றும் மருமகள் ஐஸ்வர்யா இருவரிடம் பேசி சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.

ஆனால் இரண்டு தரப்பில் உறுதியான தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து தனது குடும்ப உறுப்பினர்கள் மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறார் ரஜினிகாந்த். மேலும் இரண்டு குழந்தைகளும் தாய் -தந்தை பிரிவால் பெரும் குழப்பத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில், தவறு செய்து விட்டோம் என உணர தொடங்கியுள்ளார் ஐஸ்வர்யா.

இந்நிலையில் ஆரம்பத்தில் இந்த ஜோடியை மீண்டும் இணைந்து வைப்பதற்காக சமாதான முயற்சியில் ஈடுபட்டவர்களை தொடர்பு கொண்டு இந்த விவகாரம் பற்றி பேசிய ஐஸ்வர்யா மீண்டும் தனுஷ் உடன் இணைவதர்க்கு விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் இதே பதில் தனுஷ் தரப்பில் இருந்து வரும் என மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த ஐஸ்வர்யாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஐஸ்வர்யா விருப்பத்தை தனுஷிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கு தனுஷ், பிரிந்தது பிரிந்ததாகவே , ஆனால் இந்த விவகாரத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டாம், அதாவது விவாகரத்து வரை கொண்டு செல்ல வேண்டாம் என தெரிவித்த தனுஷ். மீண்டும் இனைந்து வாழ வேண்டுமா.? என முடிவு எடுக்க எனக்கு சில காலம் தேவை படுகிறது. மனைவி ஐஸ்வர்யா அவருடைய வேலையை அவர் சுதந்திரமாக பார்க்கட்டும் என்னுடைய வேலையை நான் பார்க்கிறேன் என தெரிவித்த தனுஷ்.

இப்போதைக்கு இணைந்து மீண்டும் வாழ விருப்பம் இல்லை என திட்டவட்டமாக தனது நிலைப்பாட்டை தனுஷ் தெரிவித்துள்ளதால். பிரிந்த இந்த ஜோடியை மீண்டும் இனைந்து வைக்கும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது என கூறபடுகிறது. இந்நிலையில் மீண்டும் தனுஷ் உடன் இணைந்து ஜோடியாக சென்று அப்பா முன் நின்று தன் மீது கோபத்தில் இருக்கும் அப்பாவை சமாதானம் செய்து விடலாம் என நினைத்த ஐஸ்வர்யாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியதால் கண்ணீர் விட்டு கதறி பேச்சுவார்த்தை நடத்தியவர்களிடம் ஐஸ்வர்யா அழுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கெட் லாஸ்ட்….. என் முகத்திலே முழிக்காத…மனைவி லதா மீது உச்சகட்ட கோபத்தில் ரஜினிகாந்த்.! எதற்கு தெரியுமா.? அரக்க குணம் கொண்ட லதாவின் உண்மை முகம் உங்களுக்கு தெரியுமா.? தம்பி ரஜினியை நினைத்து உருகும் அண்ணன் சத்யநாராயண ராவ்..