பலமுறை தனுஷ் கண்டித்தும் அடிக்கடி வெளிநாடு செல்லும் ஐஸ்வர்யா..எதற்கு தெரியுமா.? பிரிவுக்கு இது தான் காரணமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் ஒரு மனதாக பிரிவதாக இருவரும் ஹைதராபாதில் உள்ள ஒரே ஓட்டலில் தனி தனி அறையில் இருந்து கடந்த ஜனவரி 17ம் தேதி அறிவித்து. தங்களின் 18 வருட திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். சினிமா துறையை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டாலே அது விரைவில் விவகாரத்தில் தான் முடியும் என்கிற கருத்து பரவலாக நிலவி வரும் நிலையில். அதே போன்று ஐஸ்வர்யா – தனுஷ் பிரிவதாக அறிவித்ததை சாதரணமாக கடந்து செல்லாமல் இன்று அது மிக பெரிய விவாதமாக உருவெடுத்துள்ளது.

நடிகை குஸ்பு – சுந்தர் சி தம்பதியினர், இயக்குனர் பாக்யராஜ்- பூர்ணிமா தம்பதியினர், அஜித் -ஷாலினி தம்பதியினர், நடிகர் ராம்கி – நிரோஷா இது போன்ற சினிமா பிரபலங்கள் குடும்ப வாழக்கையில் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து சினிமா துறையில் இருக்கும் பலருக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவுக்கு ஆரம்பமே ஐஸ்வர்யா தான் என கூறப்படுகிறது.

நடிகர் தனுஷ் ஆரம்ப கட்டத்தில் எந்த ஒரு நடிகைகளுடன் கிசு கிசுவில் சிக்கவில்லை, ஆடுகளம் படத்துக்கு பின்பு தான் கிசு கிசுவில் சிக்கி வந்தார். தனது மனைவி அடிக்கடி வெளிநாடு செல்வதை வழக்கமாக கடைபிடித்து வந்துள்ளார். உள்நாட்டில் ஷாப்பிங் செய்வதை விரும்பாத ஐஸ்வர்யா பெரும்பாலும் ஷாப்பிங் செய்ய வெளிநாடு பறந்து விடுவார். அங்கே இருக்கும் இவருடைய தோழிகளிடம் இணைந்து மது அருந்தும் பழக்கமும் ஐஸ்வர்யாவுக்கு உண்டு என கூறப்படுகிறது.

இந்நிலையில் அடிக்கடி ஷாப்பிங் என மனைவி ஐஸ்வர்யா குடும்பத்தின் மீது அக்கறை இல்லாமல், இரண்டு குழந்தைகளையும் தாய் லதா பொறுப்பில் விட்டுவிட்டு வெளிநாடு பறப்பதை பலமுறை தனுஷ் கண்டித்துள்ளார். ஆனால் ஐஸ்வர்யா அதை கண்டுகொள்ள வில்லை. தான் பலமுறை எச்சரித்தும் அடிக்கடி மனைவி நெளிநாடு செல்வதால் அவர் மீது வெறுப்படைந்து தனக்கென புதிய பாதையை தேர்தெடுத்து தனுஷ் தொடர்ந்து நடிகைகளுடன் கிசு கிசுவில் சிக்கி வந்துள்ளார்.

மனைவி நெளிநாடு சென்று விட்டால் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் நடிகைகளை தனது வீட்டுக்கே அழைத்து வந்து விடுவாராம் தனுஷ். இப்படி மனைவி பொறுப்பு இல்லாமல் ஒரு பக்கம் செல்ல அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தனுஷ் ஒரு பக்கம் செல்ல ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் கட்டு பாடுகளை விதிக்க இருவருக்கும் ஏற்பட்ட உச்சகட்ட கருத்து வேறுபாடு இன்று 18 வருட திருமண வாழ்க்கைக்கு முடிவு ஏற்பட்டுள்ளது என்றால், இதற்கு முக்கிய காரணம் ஐஸ்வர்யா பொறுப்பான குடும்ப பெண்ணாக நடந்து கொள்ளாதது தான் என கூறப்படுகிறது.

வேதனையில் கண்ணீர் விட்டு அழுத நடிகர் ரஜினிகாந்த்..! யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது…. நீ யாருடனும் கும்மாளம் போடு….. ப்ளீஸ் என்னை ஏற்று கொள்..கதறும் ஐஸ்வர்யா..