கமல்ஹாசன் பார்முலாவை கையில் எடுத்த தனுஷ்..! டார்ச்சர் தாங்க முடியாமல் ஐஸ்வர்யா எடுத்த அதிரடி முடிவு..

0
Follow on Google News

கடந்த ஜனவரி 17ம் தேதி நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக அறிவித்தனர், இவர்கள் பிரிவு விவாகரத்து வரை சென்று இருவரும் அவரவர் மறு திருமணம் செய்து கொள்வார்கள் என பரவலாக கூறப்பட்ட நிலையில், இரண்டு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இருவருக்கும் நெருக்கமானவர்கள், தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினரை மீண்டும் இணைக்கும் முயற்சியில் இருவரிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.

நடந்த பேச்சுவார்த்தையில் ஐஸ்வர்யா மீண்டும் இணைய சம்மதம் தெரிவித்தாலும் தனுஷ் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தனுஷின் வயது 38 என்பது மிக குறைந்த வயது என்பதால், மீண்டும் அவர் இரண்டாவது திருமணம் செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கு, அதற்காக தான் ஐஸ்வர்யாவுடன் மீண்டும் இணைய திட்டவட்டமாக மறுத்து வருவதாக கூறப்படும் நிலையில், அவர் இரண்டாவது திருமணம் செய்ய இருக்கும் அந்த பெண் யார் என்கிற பேச்சு பரவலாக இருந்தது.

ஆனால் தனுஷ் ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்த பின்பு அவர் நடிகர் கமல்ஹாசன் பார்முலாவை பின்பற்ற இருப்பதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் எப்படி மனைவி சரிதாவை விட்டு பிரிந்த பின்பு, நடிகைகள் சிம்ரன்,கவுதமி, பூஜா குமார் ஆகியோருடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து, பின் ஒரு கட்டத்தில் பிரிந்து கொண்டார்கள், அதே போன்ற வாழ்க்கையை தனக்கு பிடித்தவர்களுடன் மகிழ்ச்சியுடன் வாழ தனுஷ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினரை இனைந்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி தோல்வியை தழுவிய நிலையில், ஹைதராபாத்தில் தனது சினிமா பணிகளை முடித்து விட்டு சென்னை திரும்பிய ஐஸ்வர்யா, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தனக்கு நெருக்கமானவர்கள், மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தனுஷ் உடனான பிரிவுக்கு பின் தொடர்ந்து ஐஸ்வர்யாவை தொடர்பு கொண்டு அறிவுரை வழங்கி வந்துள்ளனர்.

இவர்களின் டார்ச்சரை சமாளிக்க முடியாமல், ஐயோ ..சென்னை சென்றால் இவர்கள் நேரில் வந்து அறிவுரை கூறுகிறேன் என டார்ச்சர் செய்வார்கள், என்ன செய்வது என குழம்பி போய் இருந்த ஐஸ்வர்யா தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, இது பெரிதாக ஓன்று பாதிப்பு வராது, வீட்டிலே ஓய்வு எடுக்கலாம் என மருத்துவர் ஆலோசனை தெரிவித்துள்ளனர், ஆனால் வீட்டுக்கு சென்றால் நண்பர்கள், உறவினர் அட்வைஸ் டார்ச்சர் தாங்க முடியாது என்பதால்.

அவர்களிடம் இருந்து தப்பிக்க மருத்துவனையில் அனுமதித்து கொண்டாராம் ஐஸ்வர்யா. இதனை தொடர்ந்து ஐஸ்வர்யாவும் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார் மேலும், 2022 கொண்டு வந்துள்ளது. இன்னும் என்னவெல்லாம் எனக்காக வைத்திருக்கிறது என பார்ப்போம் என்று ஐஸ்வர்யா குறிப்பிட்டுள்ளார்.

வேதனையில் கண்ணீர் விட்டு அழுத நடிகர் ரஜினிகாந்த்..! யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது….