தனுஷ் விடுத்த பிளாக்மெயில் மிரட்டல்… வாலை சுருட்டிய லதா ரஜினிகாந்த்..! என்ன மிரட்டல் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் அவர்களின் கடந்த கால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து, இருவரும் ஒரு மனதாக பிரிவதாக அறிவித்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த தம்பதியினர் பிரிவதில் இருவரில் பிரிவதாக முதலில் முடிவு செய்தது ஐஸ்வர்யா தான் என்றும், இதன் பின்பு தான் இருவரும் பிரிவதாக அறிவித்துள்ளனர். ஆனால் மீண்டும் இருவரையும் இணைத்து வைக்க இரு குடும்பத்தினரின் முயற்சி தோல்வியை தழுவியது.

தனுஷ் சக நடிகைகளுடன் நெருங்கி பழகி, மனைவி ஐஸ்வர்யாவுக்கு துரோகம் செய்துவிட்டார், இதனால் தான் இருவரின் பிரிவுக்கு முக்கிய காரணம் என செம்ம கடுப்பில் இருந்து வரும் லதா ரஜினிகாந்த், மேலும் இந்த விவகாரத்தால் தங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் கடும் மன உளைச்சல் என்பதால், இந்த விவகாரத்தை சும்மா விட கூடாது என தனுஷை சினிமாவில் இருந்து துடைத்து எரியும் வேலையை லதா ரஜினிகாந்த் தொடங்கியதாக கூறப்படுகிறது.

ஐஸ்வர்யாவை விட்டு தனுஷ் பிரிந்த பின்பு, அவரின் படத்தில் பணிபுரிந்து வந்த ஒளிப்பதிவாளர் பாதியில் விலகினார், தனுஷ் நடித்த மற்றொரு படத்தின் கதையாசிரியர் பாதியிலே விலகினார். இப்படி தனுஷ் படங்களில் வேலை செய்து கொண்டிருந்த ஒவ்வொருவராக பாதியிலே வெளியேறி வந்த நிலையில், மேலும் அவருடைய புதிய படங்களில் தனுஷ் உடன் இணைந்து வேலை செய்ய, நேரடியாக தனுஷ் அழைத்தால் கூட பலர் முன்வரவில்லை.

அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் பன்னலாம் என வெற்றிமாறனை தொடர்பு கொண்டு தனுஷ் பேச, கால் சீட் இல்லை என மறுத்துவிட்டார் வெற்றிமாறன். இதற்கெல்லாம் காரணம் தனுஷ் மாமியார் லதா ரஜினிகாந்த் தான் என்று கூறப்படுகிறது. மேலும் தனுஷை வைத்து புதிய படங்கள் எடுக்க கூடாது என சினிமா பைனாசியார், மற்றும் சினிமா தயாரிப்பாளர்களுக்கு லதா ரஜினிகாந்த் தனது செல்வாக்கை பயன்படுத்தி அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் சினிமாவில் கடும் நெருக்கடியை சந்தித்து வரும் தனுஷ், கடைசியாக அவர் நடிப்பில் வெளியான மாறன் படமும் சரி வர போகவில்லை, மேலும் புதியதாக கைவசம் சொல்லும்படி ஏதும் படம் இல்லை. இப்படி இருக்கையில், அமைதியாக இருந்தால் ஏறி மிதித்து கொண்டே இருப்பார்கள் என்று உணர்ந்த தனுஷ் அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளார். மாமியார் லதா ரஜினிகாந்த்க்கு நெருக்கமானவர்களை தொடர்பு கொண்டு.

மாமியார் குடும்பத்தால் தனக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை எடுத்துரைத்துள்ளார் தனுஷ். மேலும் எதற்கும் ஒரு எல்லை உண்டு. இதற்கு மேலும் என்னை சினிமாவில் துடைத்து எறிய வேண்டும் என இடையூறு செய்தால். ஒரு பிரஸ் மீட் வைத்து மாமியார் லதா குடும்பத்தினர் தனக்கு கொடுத்து வரும் இடையூறுகள் பற்றி சொல்ல வரும், மேலும் பல உண்மையை வெளியில் சொன்னேன் என்றால் மக்களுக்கு என் மீது அனுதாபமும், மாமியார் லதா குடும்பத்தினர் மீது வெறுப்பும் ஏற்படும்.

இதனால் மாமனார் ரஜினிகாந்த் அவர்களின் இமேஜ் டேமேஜ் ஆகும். இதெல்லாம் தேவையா என்று யோசித்து, இனி என் வழியில் குறுக்கே வர வேண்டாம் என சொல்லுங்க, என்று மாமியார் லதா குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார் தனுஷ் என கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த பின்பு வாலை சுருட்டி கொண்டு தனுஷ் சினிமா விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் தலையிடுவதை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

அந்த விஷயத்தில் தனுஷை விட மோசம் ரஜினி..! மதுபோதையில் நட்சத்திர ஓட்டலில் மனைவியிடம் சிக்கிய ரஜினி..!