தமிழால் உனக்கு பெருமை…உன்னால் தமிழுக்கு அவமானம்..! அசிங்கத்தை தின்னும் நாஞ்சில் சம்பத்.. பேராசிரியர் பதிலடி..

0
Follow on Google News

மதிமுக, அதிமுக, அமமுக, தற்பொழுது திமுக என குரங்குகள் மரத்திற்கு மரம் தாவுவது போன்று பல கட்சிகள் தாவி தற்பொழுது திமுகவில் பயணித்து கொண்டிருக்கிறார் நாஞ்சில் சம்பத்.இவர் கீழ்தரமாக விமர்சனம் செய்த அரசியல் தலைவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, கருணாநிதி, முக ஸ்டாலின், வைகோ, சீமான், கனிமொழி, ஆ ராசா என்று தற்பொழுது பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை வரை ஒருமையில் கீழ்த்தரமாக விமர்சனம் செய்ய கூடிய நபர் நாஞ்சில் சம்பத்.

தமிழகத்தை சேர்ந்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு ஆளுனராக ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ளும் விதத்தில் உயரிய பதிவியில் இருக்கும் ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் அவர்களை சமீபத்தில் நாஞ்சில் சம்பத் ஒருமையில் மிக கீழ்தரமாக விமர்சனம் செய்திருந்தது குறிப்பாக தமிழக தாய்மார்கள் கடும் எதிப்பு கிளம்பியது.

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தமிழக பாஜக தலைவராக இருந்த போது எதிர் கருத்து கொண்டவர்கள் கூட அக்கா என்றும் அழைக்கும் வகையில், தமிழிசை அரசியல் தலைவராக இருந்த போது பண்பான அரசியல் செய்து வந்தவர். இந்நிலையில் தன்னை ஒருவர் அநாகரிகமாக ஒருமையில் பேசியதை வேதனையுடன், என்னை திட்டுவதாக இருந்தால் கூட “மரியாதையான தமிழில் என்னை திட்டுங்கள்’ என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆளுநர் தமிழிசையின் இந்த வேண்டுகோள் குறித்து கருத்து தெரிவித்திருந்த நாஞ்சில் சம்பத் தான் பேசியதில் எந்த தவறும் இல்லை என்று, ஒருமையில் அநாகரிகமாக ஆளுநர் தமிழிசை அவர்கள் பற்றி பேசியதை நியப்படுத்தி பேசியிருந்தார். இதற்கு நாஞ்சில் சம்பத்துக்கு புரியும் பாஷையில் தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் கண்டனம் தெரிவித்திருந்தார், அதில் தமிழால் உனக்கு பெருமை, ஆனால் உன்னால் தமிழுக்கு அவமானம் என்று நாஞ்சில் சம்பத் அநாகரிகமாக பேசியதை சுட்டி காட்டியவர்.

மேலும், மேதகு ஆளுநர் டாக்டர் தமிழிசை அவர்கள் ஒரு தேனீ… தேனீக்கள் மலர்களில் மாத்திரமே அமரும்.. அப்படி தாமரை மலரில் தன்னை அர்ப்பணித்து வாழ்பவர் டாக்டர் தமிழிசை… ஆனால் சிலர் ஈ போன்றவர்கள்… ஈக்கள் எதில் வேண்டுமானாலும் அமரும்.. எந்த அசிங்கத்தையும் தின்னும்…. என்று தமிழிசை அவர்கள் ஒரே கட்சியில் இருந்துவந்ததை குறிப்பிட்டு அவர் தேனீ என்றும். பல காட்சிகள் தாவி வந்த நாஞ்சில் சம்பத்தை அசிங்கத்தை தின்னும் ஈ என்றும் குறிப்பிட்ட பேராசிரியர்.

மேலும், சிங்கப் பெண்ணாக கம்பீரமாக பவனிவரும் மேதகு ஆளுநர் எங்கே?? முகத்தில் துப்பினால் துடைத்து கொண்டு ஓசி இன்னோவா காரில் ஊர்சுற்றிப் பிழைக்கும் இவர்கள் எங்கே?? என்று பேட்டி ஒன்றில் என் முகத்தில் காரி துப்பினால் துடைத்து கொள்வேன் என வெட்கமே இல்லாமல் நாஞ்சில் சம்பத்த பேசியதை மறைமுகமாக சுட்டி காட்டி தக்க பதிலடி கொடுத்துள்ளார் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன்.

குஷ்புவை பார்த்து திருந்துவார்களா சூர்யா குடும்பத்தினர்..! சத்தமில்லாமல் என்ன செய்து வருகிறார் குஷ்பு தெரியுமா.?