ஒரே ஓட்டலில் ஐஸ்வர்யா – தனுஷ் இருவருக்கும் மதுபோதையில் நடந்த உச்சக்கட்ட மோதல்.! பின் நடந்த சம்பவம் என்ன தெரியுமா.?

0
Follow on Google News

தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் ஹைதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் உள்ள சித்தாரா ஓட்டலில் தங்கியுள்ளனர், இந்த ஸ்டுடியோவில் உள்ள சிதாரா ஓட்டலில் படப்பிடிப்பு நடத்தும் நட்சத்திரங்கள் தங்குவது வழக்கம், அந்த வகையில் தனுஷ் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் கடந்த சில நாட்களாக அங்கு தங்கி தனித்தனியே படப்பிடிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். தனுஷ் விரைவில் வெளியாக இருக்கும் படம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

அதே நேரத்தில் டிப்ஸ் மற்றும் பிரேர்னா அரோராவுக்காக ஒரு காதல் பாடலை இயக்க ஐஸ்வர்யா தயாராகி வருகிறார். இந்நிலையில் கடந்த ஜனவரி 17ம் தேதி திங்கள் கிழமை இரவு 11 மணியளவில் தனது மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிவதாக தனுஷ் தனது டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்த அடுத்த சில மணி நேரங்களில் ஐஸ்வர்யாவும் தனுஷை விட்டு பிரிவதாக தனது இஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார்.

ஜனவரி 17ம் தேதி இந்த அறிவிப்பை வெளியிடும் போது இருவரும் ஒரே ஓட்டலில் இருந்து கொண்டு தான் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு முந்தைய நாள் ஜனவரி 16ம் தேதி ஞாயிற்று கிழமையும் இவர்கள் ஹைதராபாதில் உள்ள சித்தாரா ஓட்டலில் தான் இருந்துள்ளனர் ஆனால், இவர்கள் ஹைதராபாத் வருவதர்க்கு முன்பே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டதால். அந்த ஓட்டலில் தனி தனி அறையில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஜனவரி 16ம் தேதி ஞாயிற்று கிழமை சினிமா தொடர்பான வேலைகளுக்கு விடுமுறை எனபதால். அன்று மாலை இரவு பார்ட்டி ஒன்றில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் தனி தனியாக கலந்து கொண்டுள்ளனர். இருவரும் இரவு பார்ட்டியில் மது விருந்தில் கலந்து கொண்டதாக கூறப்படும் நிலையில், திரையுலகை சேர்ந்த ஒருவர் ஐஸ்வர்யா – தனுஷ் இருவரையும் இந்த பார்ட்டி முடிந்தது சேர்ந்து வைத்து விட வேண்டும் என்ற நோக்கில் இரவு பார்ட்டி முடிந்ததும் சேர்ந்து சாப்பிடும் படி ஏற்பாடு செய்துள்ளதாக கூறபடுகிறது.

இதனை தொடர்ந்து இரவு உணவு விருந்தின் போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவகாரம் பேச்சை தொடங்கியதில் இருந்தே தனுஷ் – ஐஸ்வர்யா இடையே வாக்குவாதம் உச்சகட்டத்தை அடைந்தது என கூறப்பட்ட நிலையில், சரி ஏதும் பேச வேண்டாம், காலையில் பேசி கொள்ளலாம் என ஒரே ஓட்டலின் இருக்கும் அவரவர் தனி அறைக்கு சென்றவர்கள். ஐஸ்வர்யா தொலைபேசி மூலம் தனுஷை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது இருவருக்கும் மதுபோதையில் இருந்ததால் தொலைபேசியில் உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டதாக கூறபடுகிறது. போதையிலே இருவரும் பிரிந்து கொள்வோம் என முடிவெடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாவே இருவருக்கும் நடந்து வந்த கருத்து வேறுபாடு உச்சக்கட்டம் அடைந்ததை தொடர்ந்து. அடுத்த நாள் ஜனவரி 17ம் தேதி ஐஸ்வர்யாவை தொடர்பு கொண்ட தனுஷ் இருவரும் நேற்று பேசியது போன்று பிரிவதில் உனக்கு பிரச்சனை இல்லையே என கேட்க.

அதற்கு, அதெல்லாம் ஒன்றுமில்லை, இதற்கு மேல் சேர்ந்து வாழ ஓன்றுமில்லை என ஐஸ்வர்யா தெரிவித்ததாக கூறப்படும் நிலையில், அன்று இரவு சுமார் 11 மணியளவில் தனது டிவீட்டர் பக்கத்தில், ஐஸ்வர்யா உடனான தனது 18 வருட திருமண வாழ்க்கையை முடித்து கொண்டு பிரிவதாக தனுஷ் அறிவிக்க, அடுத்த சில மணி நேரங்களில் ஐஸ்வர்யாவும் தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இவர்கள் பிரிவுக்கும் முதல் நாள் இவர்கள் உச்சகட்ட போதையில் சட்டையிட்டது தான் என்றும். இல்லையென்றால் அவர்களே சில நாட்களில் அவர்களின் பிரச்சனையை சரி செய்திருப்பார்கள் என கூறப்படுகிறது குறிப்பிடதக்கது.

கெட் லாஸ்ட்….. என் முகத்திலே முழிக்காத…மனைவி லதா மீது உச்சகட்ட கோபத்தில் ரஜினிகாந்த்.! எதற்கு தெரியுமா.? அரக்க குணம் கொண்ட லதாவின் உண்மை முகம் உங்களுக்கு தெரியுமா.? தம்பி ரஜினியை நினைத்து உருகும் அண்ணன் சத்யநாராயண ராவ்..