கடனால் கஷ்டப்படுகிறோம்… பாவம் செந்தில் – ராஜலக்ஷ்மி தம்பதியினருக்கு இப்படி ஒரு நிலைமையா.?

0
Follow on Google News

விஜய் டிவியில் நடந்த சூப்பர் சிங்கர் பாட்டு போட்டி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் சீசன் 6இல் கிராமிய பாடல்களை பாடி பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி தம்பதி. இதில் செந்தில்கணேஷ், அந்த சீசனில் டைட்டல் வின்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே இந்த தம்பதி ஏற்கனவே கோயில் கலை நிகழ்ச்சிகளில் கிராமிய பாடல்களை பாடி வந்தாலும் கூட, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு தான் இவர்கள் பிரபலமாக அறியப்பட்டனர்.

மேலும் கிராமிய பாடல்கள் அழிந்து கொண்டிருப்பது போன்றும் அதை காக்க வந்தவர்கள் தான் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி தம்பதி என்கிற ஒரு மாயையை உருவாக்கிய விஜய் டிவி இவர்களை வைத்து தனது TRP ரேட்டிங்கை ஏற்றி கொண்டது, மேலும் கிராமிய பாடல்களுக்கு விஜய் டிவி தான் அங்கீகாரம் கொடுப்பது போன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தம்பட்டம் அடித்து கொண்டது விஜய் டிவி.

இருந்தாலும் செந்தில் – ராஜலக்ஷ்மி இருவருக்கும் திறமை இல்லை என்று மறுக்க முடியாது, இவர்களை வைத்து விஜய் டிவி TRP ரேட்டிங்கை ஏற்றி கொண்டது போன்று, விஜய் டிவியை வைத்து செந்தில் – ராஜலக்ஷ்மி தம்பதியினர் பிரபலம் அடைந்து கொண்டனர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின்பு பின்பு சினிமா திரைப்படங்களில் படுவதற்கு வந்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்ட ராஜலக்ஷ்மி – செந்தில் தம்பதியினர்.

மேலும் வெளிநாடுகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று கிராமிய பாடல்களை பாடி வந்தனர். குறிப்பாக செந்தில் – ராஜலக்ஷ்மி பாடிய என்ன மச்சான், சொல்லு புள்ள என்ற பாடல். பெரியவர் முதல் சிறியவர் வரை பட்டிதொட்டி என்று எங்கும் இந்த பாடல் பிரபலம். இந்த பாடலின் வெற்றிக்கு பிறகு இவர்களுக்கு உள்நாடு முதல் வெளிநாடு வரை கச்சேரி வாய்ப்புகள் குவிந்தன. இந்த நிலையில் அவர்கள் புதுக்கோட்டையில் பிரம்மாண்டமான வீடு ஒன்றை கட்டி புதுமனை புகுவிழாவும் நடத்தினார்கள்.

கிராமத்தில் புதிய வீடு கட்டியிருந்தாலும், சென்னையிலேயே சொந்தமாக வீடு, கார் எல்லாம் வாங்கி சென்னையில் செட்டில் ஆகிவிட்டனர் செந்தில் – ராஜலக்ஷ்மி தம்பதியினர். இவர்கள் சினிமாவில் பாட்டு பாடுவதை தவிர்த்து, செந்தில் கணேஷ் ஹீரோவாக கரிமுகன் எனும் படத்தில் நடித்திருந்தார் சமீபத்தில் அவரது மனைவி ராஜலட்சுமி லைசன்ஸ் எனும் படத்தில் ஹீரோயினாகி உள்ளார்.

இதுதவிர செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி இருவரும் இணைந்து இருளி எனும் படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜலட்சுமி அளித்த பேட்டியில், ”சினிமாவில் நாங்கள் சாதித்து பல கோடி சொத்து வைத்திருப்பதாக பலரும் கருதுகின்றனர். ஆனால் வீடு, கார் எல்லாமே கடனில் வாங்கியது, எங்களுக்கு நிறைய கடன் இருக்கு, அதுவும் கொரோனா காலத்துல ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைக்காததால் ரொம்பவே கடனில் கஷ்டப்படுகிறோம்” என தெரிவித்த ராஜலக்ஷ்மி.

மேலும், கடன் பற்றி தானும் தனது கணவரும் பேசும் போது, நான் என் கணவரிடம் ​​ஒரு வேளை பேங்கக்காரங்க வந்து வீட்டை பிடிங்கிட்டு போயிட்டா என்ன பண்றது என கேட்டேன் அதற்கு, அப்படியே சொந்த ஊரு பக்கமா போயிட வேண்டியது தான் என்று கணவர் செந்தில் கணேஷ் சொன்னதாக ராஜலட்சுமி மிக உருக்கமாக பேசியுள்ளார்.