நிஜ வாழ்க்கையிலும் பல அவமானங்கள்… சிறகடிக்க ஆசை மீனா பற்றிய யாருக்கும் தெரியாத நிகழ்வு..

0
Follow on Google News

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் சிறகடிக்க ஆசை ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன், வெற்றி வசந்த், கோமதி பிரியா ஆகியோர் நடித்துவரும் இந்த தொடருக்கு யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த சீரியலின் நாயகன் வெற்றி வசந்த் தனது யதார்த்தமான நடிப்பில் மூலம் மக்களை கவர நாயகி கோமதி தனது இயல்பான தோற்றம் இயல்பான நடிப்பில் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். மீனா-முத்து இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை ஈர்த்து வருகிறது. நடிகை கோமதி பிரியா மீனா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். மதுரையில் நடுத்தர குடும்பத்தை சார்ந்த கோமதி பிரியா விற்கு ஒரு தம்பி ஒரு தங்கச்சி உள்ளது.

அம்மா, அப்பா, தம்பி, தங்கச்சியோடு சாதாரண குடும்பத்தில் வளர்ந்து வந்த கோமதி பிரியா ஸ்கூல் படிக்கும்போதே முதல் மதிப்பெண் பெற்று சிறந்த மனைவியாக திகழ்ந்துள்ளார். இன்ஜினியரிங் முடித்துவிட்டு 10 மாதங்கள் சென்னையில் துறை சார்ந்த வேலை பார்த்து வந்த கோமதி பிரியா.அதன்பிறகு நடிப்பு மீது ஆர்வம் இருந்ததால் ஒரு ரியாலிட்டி ஷோவில் கெஸ்டாக என்ட்ரி கொடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு கலர்ஸ் தமிழ் டிவியின் ஓவியா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த தொடர் மூலம் ரசிகர்களிடம் நல்ல ரீச் ஆனார். அதனைத் தொடர்ந்து விஜய்டிவியின் வேலைக்காரன் சீரியலில் நடித்து வந்த கோமதி ப்ரியா தெலுங்கிலும் ஹிட்லர் கேரி பெல்லம் என்ற தொடரிலும் நடித்தார்.வேலைக்காரன் சீரியல் முடிந்துவிட்ட நிலையில், விஜய் டிவியின் புதிதாக தொடங்கப்பட்ட சிறகடிக்க ஆசை என்ற தொடரில் கோமதி ப்ரியா லீடு ரோலில் நடித்து வருகிறார்.

மேலும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட கோமதி பிரியா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், எனக்கு சினிமாவில் நுழைய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அந்த நேரத்தில் மாடலிங் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. மாடலிங் செய்து கொண்டு சினிமா வாய்ப்பை தேடி கொண்டு இருந்தேன். ஒரே சமயத்தில் இரண்டையும் பார்த்துக்கொள்ள முடியவில்லை.

அதனால் முழு நேரம் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். ஆடிஷன் செல்லும் போது என்னை பார்த்து, இந்த பொண்ணு பார்க்க பாவமா இருக்கு..எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிப்பாரா என்று எல்லாரும் யோசிப்பாங்க.. பல இடங்களில் அவமானம் சந்தித்து இருக்கிறேன். அதனால் சோர்ந்து விடக்கூடாது எனக்கு நானே சொல்லிப்பேன் என்று தெரிவித்த கோமதி பிரியா.

மேலும், சீரியலில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கும் கோமதி பிரியாவிற்கு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “அசுரன்” திரைப்படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்ததாம். அதுவும் அம்மு அபிராமி நடித்த கேரக்டர் முதலில் இவருக்கு தான் வந்ததாம். அந்த நேரத்தில் சீரியலுக்கு தேதி ஒதுக்கி இருந்ததால் என்னால் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆனால் அது குறித்து பெரிய வருத்தம் இப்போதும் எனக்கு உண்டு என்று கூறியிருக்கிறார். சின்னத்திரையில் பலருடைய மனதை கவர்ந்த இவரை இனி வெள்ளித்திரையில் விரைவாக பார்க்கலாம் என்று தெரிகிறது. அதே நேரத்தில் இவருக்கு சின்னத்திரையில் வரவேற்பு அதிகமாக இருப்பதால் வெள்ளி திரையில் சீக்கிரமாக வரவேண்டும் என்று ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.