கேப்டனை இழந்து தமிழகமே சோகத்தில் இருக்க ஒரே ஜாலியாக ஆட்டம் போட்ட சூர்யா – ஜோதிகா…

0
Follow on Google News

விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி மரணம் அடைந்த அன்று, சினிமா துறையை சேர்ந்த பல முன்னணி நடிகர் நடிகைகள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை, குறிப்பாக தங்களை கலை குடும்பம் என்று கட்டிக்கொள்ளும் நடிகர் சிவகுமார் குடுமபத்தில் இருந்து சூர்யா, கார்த்திக், ஜோதிகா என யாரும் விஜயகாந்த் மரணத்திற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை.

விஜயகாந்த் மரணத்தின் போது வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருப்பதாக சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார், அதுவும் ஒரு இடத்தில் நின்று கூட பேசி வீடியோ வெளியிடாமல், காரில் சென்று கொண்டிருக்கும் போதே பேசி இரங்கல் வீடியோவை சூர்யா வெளியிட்டுள்ளது, மனிதநேயம் மிக்க மகத்தான ஒரு மனிதனுக்கு இப்படி காரில் சென்றவாறே அவசர அவசரமாக பேசி வீடியோ வெளியிடுவது சரியா.?

இது தான் சூர்யா விஜயகாந்துக்கு செய்யும் மரியாதையா என சூர்யா வெளியிட்ட வீடியோ கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. மேலும் வெளிநாட்டில் ஷூட்டிங். அதனால் கேப்டனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த முடியவில்லை என ஹூரோக்கள் பலர் சாக்கு போக்கு சொன்னாலும், அது பெரும்பாலும் பொய், பல சினிமா நடிகர் நடிகைகள் நியூ இயர் கொண்டாட்டத்தில் பிசியாக இருப்பதால் தான் அவர்கள் வெளிநாடுகளில் இருந்து வரவில்லை என அப்போதே பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் விஜயகாந்த் மரணத்திற்கு நேரில் வராத சூர்யா, நியூ இயர் முடிந்து சவாசகமாக விஜயகாந்த் நினைவிடத்தில் தேம்பி தேம்பி அழுத சூர்யா, அண்ணனின் பிரிவு மிகவும் கஷ்டமாக உள்ளது. அவருடன் இன்னும் நேரம் செலவழிக்க முடியவில்லையே என்ற வருத்தம் அதிகமாக இருக்கிறது. அவரைப் போல இன்னொருவர் கிடையாது. இறுதி அஞ்சலியின்போது அவருடைய முகத்தை பார்க்க முடியவில்லை என்பது எனக்கு மிகப்பெரிய இழப்பு என கண்ணீர் விட்டு கதறி சூர்யா அழுவதை பலரும் இது உலக மகா நடிப்புடா சாமி என சூர்யாவை விமர்சனம் செய்து வந்தனர்

இந்நிலையில் அதெல்லாம் உலக மகா நடிப்பு தாண்டா சாமி என்பதை உறுதி படுத்தும் விதத்தில் தற்பொழுது வீடியோ ஓன்று வெளியாகியுள்ளது. விஜய்காந்து இறந்த அடுத்த இரண்டு நாளில் 2024ம் ஆண்டு புத்தாண்டை சூர்யா கொட்டும் பனியில் தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து பின்லாந்து நாட்டில் கொண்டாடியுள்ள வீடியோவில் சூர்யா மற்றும் அவரது மனைவி இருவரும் பனிச்சறுக்கு உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி செம்ம ஜாலியாக இருந்துள்ளனர்.

கடும் பனிப்பொழிவில் குழந்தைகள் இன்றி ஜோதிகா மற்றும் சூர்யா மட்டும் கொண்டாடிய வீடியோ காட்சிகள், அதிலும் அந்த குளிரில் நடிகை ஜோதிகா நீச்சல் உடையில் குளிக்கும் காட்சி என சூர்யா தனது மனைவியுடன் பின்லாந்தில் படு ரொமான்டிக்கான நியூ இயர் இந்த ஆண்டு கொண்டாடியுள்ள வீடியோவை ஜோதிகா தற்பொழுது அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த வீடியோவை பார்த்த பலரும், அது எப்படி விஜயகாந்த் இறந்த அடுத்த இரண்டு நாளில் பின்லாந்து மனைவியுடன் ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம் என மகிழ்ச்சியாக இருந்துவிட்டு, விஜயகாந்த் சமாதியில் வந்து அய்யோ.. அண்ணே.. போய்ட்டீங்களே என்று கண்ணீர் விட்டு அழுதது எல்லாம் நடிப்பு தான என விமர்சனம் செய்து வரும் மக்கள், ஒரு வேலை பின்லாந்தில் நியூ இயர் கொண்டாட தான் அவ்வளவு அவசரமாக காரில் இருந்து கொண்டு வீடியோ வெளியிட்டு கேப்டனுக்கு இரங்கல் வீடியோ வெளியிட்டிங்களா சூர்யா என மக்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருவதை பார்க்க முடிகிறது.