கறிக்கடையில் வைத்து மலேசியா மாமாவை பிடித்த முத்து… ரோகினி ஒரு டுபாக்கூர் என போட்டு கொடுத்த மலேசியா மாமா..

0
Follow on Google News

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், பொங்கலை கொண்டாடுவதற்காக விஜயா குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் பாட்டியின் கிராமத்திற்கு போயிருக்கிறார்கள். அங்கே ரோகிணியின் பணக்கார மாமாவை வைத்து ஒரு டிராமா போய்க் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் ரோகிணி மீது முத்துவிற்கு ஒரு சந்தேகம் அதற்கு துருப்ச்சிட்டாக பிரவுன் மணி கொத்தாக மாட்டி இருக்கிறார்.

இந்த நிலையில் மலேசிய மாமாவை தனியாக அழைத்துச் செல்லும் முத்து மற்றும் அவரது நண்பர் செல்வம் ஆகியோருடன் மனோஜும் செல்கிறார். ஒரு கட்டத்தில் அனைவரும் சரக்கு அடிக்க ஆரம்பித்தனர். இதனால் தர்ம சங்கடத்திற்கு மனோஜ் உள்ளாகிய நிலையில் மலேசிய மாமா மாப்பிள்ளை மனோஜை வலுக்கட்டாயமாக குடிக்க வைக்கிறார். போதையில் வீட்டிற்கு வரும் மனோஜ், விஜயா, பாட்டி, ரோகினி அனைவரையும் கட்டிப்பிடிக்கிறார்.

ரோகினி மனோஜை ரூமுக்குள் அழைத்துச் சென்று அடிக்கிறார். பின் முத்து தனது நண்பருடன் பேசிக்கொண்டு இருக்கும் போது, மலேசியா மாமா, மனோஜிக்கு சரக்கு ஊத்தி விட்டது குறித்து கூறிக்கொண்டிருக்கிறார். இந்த மலேசிய மாமா ஊத்தி கொடுத்துவிட்டு என் மேல் பழி போடுகிறார், அது கூட பரவாயில்லை, இப்போது எனக்கு மிகப்பெரிய சந்தேகம் இவன் உண்மையிலேயே மலேசியா மாமா இல்லை என்பது மட்டுமல்ல, இவன் ரோகினி மாமாவே இல்லை’ என்று கூறுகிறார். இதை சீக்கிரம் நான் நிரூபிக்கிறேன்’ என்று கூற அதைக் ஒட்டு கேட்டு ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.

மலேசியா மாமாவிடம் சென்று நாளைக்கு காலையிலே முதல்ல இங்க இருந்து கிளம்புங்க என கூறுகிறார். அதற்கு ப்ரெளன் மணி உங்க அத்தை வேற எனக்கு பிடிச்சதெல்லாம் சமைச்சி தர்றேன்னு சொல்லி இருக்காங்க என கூறுகிறார். இந்த நிலையில் மலேசியா மாமாவை திட்டும் ரோகிணி ’நாளை காலையில் நீ இந்த இடத்தை விட்டு கிளம்பி விட வேண்டும்’ என்று கூறுகிறார்.

இந்நிலையில் மலேசியா மாமா ஊரை விட்டு கிளம்பியதும் மேலும் முத்துவுக்கு சந்தேகம் வலுக்கிறது. இந்நிலையில் இனி வரும் நாட்களில் முத்து குடும்பத்தினருடன் சென்னை திரும்பியதும், தொடர்ந்து மலேசியா மாமா குறித்த புலனாய்வை தொடங்குகிறார், மேலும் ரோகிணியின் அடுத்தடுத்து நடவடிக்கைகள் முத்துவுக்கும் மேலும் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் ரோகினி மலேசியா மாமாவுக்காக சிட்டியிடம் கடன் வாங்கிய விவரம் மீனா தம்பி மூலம் முத்துவுக்கு தெரிய வருகிறது.

பெரிய கோடீஸ்வரர் வீட்டு பொண்ணு எதற்கு கடன் வாங்கணும் என முத்துவுக்கு சந்தேகம் வருகிறது. மேலும் ஒரு கட்டத்தில் ரோகினி நடந்தும் பார்லர் அவருக்கு சொந்தமானது இல்லை அதில் வேலை தான் செய்கிறார் என்பது தெரிய வந்தாலும், ஆதாரத்துடன் முத்து கண்டுபிடிக்க முடியாமல் பெரும் குழப்பத்தில் இருக்கிறார். இப்படி சிட்டியிடம் வட்டிக்கு கடன் வாங்கியது, பார்லர் அவருக்கு சொந்தம் இல்லை என போன்ற விஷயங்களால் இது என்னடா மனோஜை விட இந்த பார்லர் அம்மா பெரிய பிராடா இருக்கும் போலயே என முடிவுக்கு வருகிறார் முத்து.

இப்படி ஒரு சூழலில் தான் மலேசியா மாமா கறிக்கடையில் கரி வெட்டுவதை பார்த்துவிடுகிறார் அவருடைய நண்பர் செல்வம், உடனே முத்துவுக்கு போன் செய்து டேய் முத்து, நம்ம சந்தேகப்பட்டது உண்மை தான், ரோகிணி மாமா மலேசியா மாமா இல்லடா, கறிக்கடை மாமாடானு சொல்ல, உடனே என்னடா சொல்லுற என கேட்க, ஆமாம் இந்த ஏரியால தான் கறிக்கடை போட்டுருக்கிறார் என செல்வம் தெரிவிக்க . உடனே அந்த இடத்திற்கு வந்து இது மலேசியா மாமா இல்லை கறிக்கடை காரர் என்பதை கையும் களவுமாக முத்து பிடித்து விடுகிறார் என்பது அடுத்தடுத்து வரும் நாட்களில் சிறகடிக்க ஆசையில் அரங்கேற இருப்பதாக கூறப்படுகிறது.