மலேசியா மாமாவை கறி கடையில் வைத்து கையும் களவுமாக பிடித்த முத்து… ரோகினி இனி தப்பிக்கவே முடியாது…

0
Follow on Google News

சிறகடிக்க ஆசை சீரியலில் சமீபத்திய எபிசோடில் ரோகிணி உங்கப்பா இன்னும்மா பிளைட்ல வந்துகிட்டு இருக்காரா என விஜயா கோபத்துடன் பேச அனைவரும் இது குறித்து கேள்வி எழுப்புகிறார்கள் உடனே என்ன சொல்வது என்று புரியாமல் வாமிட் எடுப்பது போல் நடிக்கிறார் அதனால் விஜயா நான் பாட்டி ஆயிட்டேன் நீங்க தாத்தா ஆகிட்டீங்க என ரொம்ப சந்தோஷப்பட்டு இருக்கிறார் ஆனால் ரோகிணிக்கு தான் தெரியும் அது நடிப்பு என்று.

உடனே மனோஜ் ரோகிணி உன்கிட்ட பேசணும் என தனியாக அழைத்து நமக்கு இப்ப அந்த குழந்தை தேவையா? நாம ஒரு வருடம் கழித்து தானே குழந்தை பெத்துக்கலாம்னு பிளான் பண்ணி இருந்தோம் ஆனா இப்போது இது தேவையா என பேசுகிறார். அதற்கு ரோகிணி கோவப்பட்டு குழந்தை உருவாகிடுச்சுன்னு எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க ஆனா நீ மட்டும் தான் பயத்துல இருக்க உனக்கு வேலை இல்லை என்கிறதுக்காக குழந்தை பெத்துக்காம இருக்க முடியுமா?

குழந்தை பெத்துக்கறதுக்காண்டி நீ சீக்கிரம் வேலைக்கு போகணும் இப்பதான் உனக்கு அந்த விஷயம் புரியுதா. குழந்தை உருவாகிடுச்சுன்னு சந்தோஷ படமா இப்படி ஒரு பயத்துல இருக்கியே சீக்கிரம் நீ வேலையை தேடிக்கணும், நீ ஒழுங்கா இன்டர்வியூ போ அட்டென்ட் பண்ணு, நானும் வித்தியாவும் போய் டாக்டரை பார்த்துட்டு வரோம் என கூறுகிறார்.

இன்னொரு காட்சியில் விஜயா ரோகிணி கர்ப்பமாக இருப்பதாக நினைத்த அண்ணாமலை இடம் ஓவராக சீன் போட்டுக் கொண்டிருக்கிறார், ரோகிணி வந்து உட்கார வைத்து விஜயா ஓவராக பேசிக் கொண்டிருக்கிறார், உடனே ரோகிணி நான் கர்ப்பமாக இல்லை என்பதை கூறுகிறார். விஜயா அதிர்ச்சி அடைந்து உறைந்து போய் நிற்கிறார்.

ஆனால் மனோஜ் சந்தோஷத்தில் மிதக்கிறார். உடனே முத்து அவன பாருங்க இங்க எல்லாம் அதிர்ச்சியில் இருக்கும் அவன் மட்டும் எவ்வளவு ஜாலியா சந்தோசமா இருக்கான்னு என முத்து மனோஜ் காட்டுகிறார். அப்பொழுது மனோஜ் ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார் ரோகிணி உள்ளே அழைத்து செல்கிறார்.

இப்படி ஒரு பக்கம் செல்ல மறு பக்கம், அடுத்தடுத்து வரும் நாட்களில் ரோகிணியின் மலேசியா மாமாவா வந்து நடித்த கறிக்கடை காரர் வெச்சுருக்கும் கறி கடை பக்கம் செல்கிறார் ரோகினி, அப்போது ரோகிணியை பார்த்த கறிக்கடை காரர் எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு தர வேண்டும். இல்லை என்றால் எனக்கு பண உதவி செய்ய வேண்டும் என வழிமரித்து பேசிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் எதார்த்தமாக அந்த வழியாக வந்து கொண்டிருக்கும் முத்து அவர்கள் இருவரும் பேசி கொண்டிருப்பதை பார்த்து விடுகிறார், என்னடா மலேசியா மாமா பனியன் உடன் ரோட்டில் நின்று கொண்டிருக்கிறார் என முத்து பார்க்க, உடன் தன்னுடை தொலைபேசியில் மூலமா அதை வீடியோவாக மறைந்து நின்று எடுக்கிறார் முத்து, மேலும் ரோகிணியும் டுபாக்கூர் மலேசியா மாமாவும் என்ன பேசுகிறார் என்பதை மிக உன்னிப்பாக கேட்கிறார் முத்து.

இந்நிலையில் வழிமறித்த டுபாக்கூர் மலேசியா மாமாவிடம் இருந்து தப்பிப்பதற்காக, உங்களுக்கு நிச்சயம் சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருகிறேன், ஆனால் கடைசியாக நீங்கள் நடிப்பில் சொதப்பிடிங்க, அதனால தான் உங்களுக்கு சான்ஸ் கிடைக்கல, மீண்டும் ஒரு முறை மலேசியா மாமாவாக நான் கூப்பிடும் போது நடிக்க வேண்டும், இந்த முறை சரியாக நடித்து விட்டால் உங்களுக்கு சினிமா சான்ஸ் உறுதி என ரோகிணி தெரிவித்துவிட்டு அங்கிருந்து செல்கிறார்.

இந்நிலையில் மீண்டும் ஒரு முறை ரோகிணி தன்னுடைய அப்பா மலேசியாவில் இருந்து வர முடியல, மாமா வருகிறார் என மீண்டும் கறிக்கடை கடை காரரை மலேசியா மாமாவாக செட்டப் செய்து வர வைக்கிறார், அப்போது முத்துவுக்கு செய்கிற அட்ராசிட்டி என்ன என்பது இனி வரும் நாட்களில் சிறகடிக்க ஆசை சீரியலில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாக இருக்கிறது.