இவள் லேடி சூப்பர் ஸ்டாரா.? நயன்தாராவை வெளுத்து வாங்கிய திரிஷா.. எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

துணை நடிகையாக இருந்து படி படியாக உயர்ந்து மௌனம் பேசியதே படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை திரிஷா.மூன்றாவது படமான சாமி படத்தில் மிக பெரிய ஹிட் கொடுத்து ரசிகர்களால் மாமி என்று அழைக்கப்பட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய திரிஷா, இதன் பின்பு பிசியான நடிகையானார், தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து தமிழ் சினிமா நடிகைகளின் பட்டியலில் முதல் இடத்தில் நீண்ட வருடமாக தக்கவைத்து கொண்டவர் திரிஷா.

ஆனால் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இழந்து சினிமா வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலே முடங்கியுள்ளார். இந்நிலையில் தனக்கு பின்னால் சினிமாவில் நடிக்க வந்தவர் நயன்தாரா, அவருக்கு முன்பே இந்தி படங்களின் நடித்தவள் நான்.ஆனால் நான் கூட எனது பெயருக்கு முன்னால் எந்த பட்டமும் போடவில்லை, நயன்தாரா தனது பெயருக்கு முன்னால் லேடி சூப்பர் ஸ்டார் என்று போட்டுக்கொண்டது குறித்து திரிஷா தனது கோபத்தை சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

நயன்தாரா காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காற்று வாக்கில் இரண்டு காதல் என்கிற படத்தில் சமந்தாவுக்கு பதில் முதலில் நடிகை திரிஷா தான் நடிக்க இருந்துள்ளார். நயன்தாரா வலியுறுத்தலின் பேரில் நடிகை திரிஷாவை நேரில் சந்தித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் படத்தின் கதையை தெரிவித்து, இந்த படம் உங்களுக்கு சினிமாவில் ரீ என்ட்ரி யாக அமையும் என்று தெரிவித்தவர். இந்த கதைக்கு நீங்க தான் பொருத்தமானவர் என்று நயன்தாரா தான் சிபாரிசு செய்தார் என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் முக்கியத்துவம் இருக்காது, அதனால் தான் நயன்தாரா தன்னை நடிக்க வைக்க ஏற்பாடு செய்துள்ளார் என்பதை அறிந்து, கதை சொல்ல வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனிடம், இந்த படத்தில் நடிக்க விருப்பம் இல்லை என நேரடியாகவோ தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்பு தான் காற்று வாக்கில் இரண்டு காதல் படத்தில் நடிக்க சமந்தவை தேர்வு செய்துள்ளார் விக்னேஷ் சிவன்.

இந்நிலையில் மற்ற ஒரு படத்துக்காக கதை சொல்ல வந்த இயக்குனரிடம், கதையை கேட்காமல் நயன்தாரா மீது உள்ள கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் திரிஷா. எனக்கு வாய்ப்பு கொடுக்க அவருடைய காதலனை என்னிடம் கதை சொல்ல அனுப்பி வைத்துள்ளார் நயன்தாரா, இவள் நடித்த பாதி படத்துக்கு மேல் பிளாப், இவளுக்கு இவளே லேடி சூப்பர் ஸ்டார் என்று பெயருக்கு முன்னால் போட்டுகொண்டு, எனக்கு பட வாய்ப்பு தருகிறாளாம்.

நான் கேட்டேனா இவளிடம் எனக்கு பட வாய்ப்பு வேண்டும் என படத்தின் கதை சொல்ல வந்த இயக்குனரிடம் கதையை கேட்காமல் நயன்தாரா மீது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் திரிஷா என்று கூறப்படுகிறது. மேலும் இதற்கு முன்பு கதை கேட்பது, சம்பளம் பேசுவது, ஷூட்டிங் அனுப்புவது என அனைத்தும் திரிஷா அம்மா தான் செய்து வந்த நிலையில், தற்பொழுது திரிஷாவே கதை கேட்டு வருவது குறிப்பிடதக்கது.

சொந்த தம்பி முதுகில் குத்திய இளையராஜா.. ஆணவத்தால் அழியும் இளையராஜாவை யார் காப்பாற்றுவது.?