என் வாழ்க்கையே நாசமா போச்சு… கதறி அழுத முத்துமலர்..! என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் பாலா மற்றும் அவரது மனைவி முத்துமலர் இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது, அந்த குழந்தை தற்போது தாய் முத்துமலர் அரவணைப்பில் இருந்து வருகிறார். பாலா – முத்துமலர் இருவரும் திடீரெனெ விவாகரத்து பெற்று பிரிந்து அனைவருக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும், இவர்களுக்கு இடையில் ஏற்கனவே பஞ்சாயத்து நடந்து முடிந்து நான்கு வருடங்களுக்கு மேல் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

முத்துமலர் தேனி மாவட்டத்தில் முக்கிய அரசியல்கட்சியின் மாவட்ட தலைவரின் மகள், செல்லமாக வளர்ந்த பெண். முத்துமலர் பெற்றோர் இயக்குனர் பாலாவுக்கு தனது மகளை திருமணம் செய்து வைக்க வீட்டில் பேச்சுவார்த்தை நடந்த போது, பாலாவை திருமணம் செய்துகொள்ள முத்துமலர் விருப்பம் இல்லை என பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால் தொடர்ந்து அப்போது வெற்றி படங்களை கொடுத்து பாலா முன்னணியில் இருந்ததால் முத்துமலர் பெற்றோர் பாலாவை திருமணம் செய்து கொள்ள முத்துமலரை வற்புறுத்தியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் முத்துமலர் சம்மதம் தெரிவித்துள்ளார். பின் இருவரின் திருமணம் நடைபெற்றுள்ளது. சினிமா மீது மோகம் கொண்ட முத்துமலர் அடிக்கடி சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதர்க்கு விருப்பம் உள்ளவர் என்பதால், இயக்குனர் பாலா தவறாமல் தான் பங்குபெறும் அணைத்து பொது நிகழ்ச்சிகளிலும் மனைவியுடன் கலந்து கொள்வார். இதை பார்ப்பவர்கள் பாலா – முத்துமலர் தம்பதியினர் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும்.

மேலும் சினிமாவில் கொடூரமாக காட்சிகள் அமைத்து படம் எடுத்திருந்தாலும், மனைவி மீது பாசமாக இருந்து வருகிறார் பாலா என்கிற கருத்தும் நிலவியது. ஆனால் குடும்பத்தில் கணவன் – மனைவிக்கு இடையில் நடந்த விவகாரம் பற்றி சில தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் பாலா, கஞ்சா புகைப்பது, மது அருந்துவது போன்ற பழக்கம் அவருக்கு உண்டு என்று கூறப்படுகிறது, இது திருமணம் ஆன தொடக்கத்தில் இருந்தே முத்துமலருக்கு பிடிக்கவில்லை.

இருந்தாலும் கால போக்கில் சரியாகிவிடும் என்று கடந்து சென்றுள்ளார். ஆனால் பாலா திருந்துவதாக இல்லை. மது போதையில் கஞ்சா புகைத்து விட்டு பாலா செய்தும் வந்த நடவடிக்கைகள் முத்துமலருக்கு வெறுப்படைய செய்துள்ளது. இதனால் கணவன் – மனைவி இடையியே அடிக்கடி சன்டை நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் மது மற்றும் கஞ்சா புகைத்து விட்டு வீட்டுக்கு சென்றால் பிரச்சனை என்று அலுவகத்திலே பாலா தங்கி விடுவார் என்று கூறப்படுகிறது.

சில நாட்கள் கணவனை தேடி முத்துமலர் காரில் சென்று அவர் தங்கியிருக்கும் அலுவலகத்தில் மது போதையில் இருக்கும் கணவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த முத்துமலர், கணவனை முற்றிலுமாக வெறுத்து அரசியல் முக்கிய தலைவரின் ஒருவரின் மகனுடன் நெருங்கி பழக தொடக்கியவர் அவருடன் அடிக்கடி வெளிநாடு, டெல்லி என தனிமையில் மகிச்சியுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் பாலாவுக்கு தெரிய வந்ததும் இரண்டு குடும்பத்தினர் பஞ்சாயத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது, அப்போது முத்துமலர் வீட்டார் மகளை சமாதானம் செய்ய பேசியபோது, என் வாழ்க்கையே போச்சு என கதறி அழுதவர், கணவர் பாலா செய்து வந்த அட்டூழியங்களை கண்ணீருடன் தெரிவிதித்துள்ளார், இதன் பின்பு மகளின் விருப்பப்படி பாலாவிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து வாழட்டும் என முத்துமலர் முடிவுக்கு பச்சை கொடி காட்டியுள்ளனர் முத்துமலர் வீட்டார் என கூறப்படுகிறது.

சொந்த தம்பி முதுகில் குத்திய இளையராஜா.. ஆணவத்தால் அழியும் இளையராஜாவை யார் காப்பாற்றுவது.?