ஆண் நண்பருடன் இரவு பார்ட்டி… செம்ம மப்பில் போலீசார் மீது வாகனத்தில் மோதிய சீரியல் நடிகை…

0
Follow on Google News

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பது எதிர்நீச்சல் சீரியல் தான். மற்ற தொலைக்காட்சிகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பெண்கள் முன்னேற்றத்தையும் பெண்ணியத்தையும் மையமாக வைத்து சீரியலின் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.

இயக்குனர் திருச்செல்வம் இயக்கம் இந்த சீரியலில் ஜனனி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை மதுமிதா. இவர் இதற்கு முன்பு கன்னடம் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்து வந்தார். தற்போது எதிர்நீச்சல் சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறார். எதிர்நீச்சல் சீரியல் எதிர்பார்க்காத அளவிற்கு மாபெரும் ஹிட் அடித்து ஓடிக்கொண்டிருப்பதால் மதுமிதா கணிசமான தொகையை சம்பளமாக வாங்கி வருகிறார்.

அது மட்டும் இன்றி, யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இப்படி ஒரு பக்கம் சீரியல் இன்னொரு பக்கம் யூட்யூப் சேனல் என்று பணம் சம்பாதித்து வரும் மதுமிதா சமீபத்தில் புதிதாக கார் ஒன்றை வாங்கியிருந்தார். இந்த வீடியோவையும் அவரது youtube சேனலில் வெளியிட்டு இருந்தார் . இப்படியான நிலையில் சமீபத்தில் இவர் காரில் சென்ற போது, எதிரே வந்த போலீசாரின் வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இச்சம்பவம் தொடர்பான வெளியான தகவல்களின்படி, நடிகை மதுமிதா சென்னை சோழிங்கநல்லூர் சாலையில் தன் ஆண் நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, காவல்துறையினரின் வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியதாகவும், இதனால் அந்த போலீஸ் அதிகாரி படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.மேலும், அந்த போலீசார் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

மேலும் மதுமிதா சாலை விதிகளை மீறி ஒரு வழி பாதையில் சென்றதும், குறிப்பாக ஆண் நண்பருடன் குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதும் இந்த சாலை விபத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில், தன் மீது தவறு இல்லை போலீசார் தான் வேகமாக வந்தார் என்றும் மதுமிதா கூறியதாக சொல்லப்படுகிறது.

இல்ல தகவல் யூட்யூப் ட்விட்டர் பேஸ்புக் என அனைத்து சோசியல் மீடியாக்களிலும் வைரலாகிய நிலையில், இந்த செய்தி குறித்து மதுமிதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதாவது இணையத்தில் பரவிக்கொண்டிருக்கும் விபத்து செய்திகள் அத்தனையும் வதந்திகள் என்றும், பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சினிமா நடிகைகள் முதல் சீரியல் நடிகைகள் வரை தொடர்ந்து மது விருந்தில் கலந்து கொண்டு, விபத்துகளை ஏற்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது. இதற்கு முன்பு கடந்த 2021ம் ஆண்டு நடிகை யாஷிகா ஆனந்த் புதுச்சேரியில் நடந்த இரவு பார்ட்டியில் நண்பர்களுடன் கலந்து கொண்டு நள்ளிரவு புதுச்சேரியில் இருந்து சென்னையை நோக்கி தோழி மற்றும் இரண்டு ஆண் நண்பர்கள் உடன் யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்த வாகனம் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகாவின் தோழியான ஹைதராபாத் பகுதியை சேர்ந்த வள்ளிச்செட்டி பவணி என்பவர் பூஞ்சேரி விபத்து சிகிச்சை மையத்தில் முதலுதவி செய்து கொண்டிருக்கும் பொழுதே பரிதாபமாக உயிரிழந்தார்.