நடிகர் சித்தார்த்தை வளைத்து போட பார்த்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்… சிக்குனரா சித்தார்த்.?

0
Follow on Google News

தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். படம் படு மொக்கையாக இருந்தாலும் கூட, அனிருத் போட்ட பாடல்களினால் அந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இதை அடுத்து வை ராஜா வை படத்தை இயக்கி வெளியிட்டார். ஆனால் அந்த படம் படுதோல்வியை சந்தித்தது.

அதன் பிறகு ஐஸ்வர்யா இயக்கும் படத்தை யாரும் தயாரிக்க முன் வராததால், தனக்கு டைரக்ஷன் செட் ஆகவில்லை என்று எண்ணிய ஐஸ்வர்யா சில வருடங்களாக படம் எடுப்பதில் இருந்து விலகி இருந்தார்.
சமீபத்தில் தனுஷ் விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வரும் ஐஸ்வர்யா, லால் சலாம் படத்தின் மூலம் எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டும் என்று முயற்சி செய்தார்.

மேலும் மகளின் முயற்சிக்கு ஆதரவாக ஊக்கமளிக்கும் வகையில் படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதற்கு ரஜினியும் ஒப்புக் கொண்டர். கேமியோ ரோல் என்றாலும் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் படத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஸ்கிரீனில் தோன்றியிருப்பார். கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால் லால் சலாம் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் ஆவலுடன் சென்ற ரசிகர்களை லால் சலாம் திருப்தி படுத்தவில்லை. இதனால் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் லால்சலாம் படம் பெரும் அடி வாங்கியது. 30 கோடி வசூலை கூட எட்ட முடியாமல் திணறியது.படத்தின் பட்ஜெட் 70 கோடி ஆனால் வசூல் வெறும் 30 கோடி தான், இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்தது தயாரிப்பு நிறுவனம், இருந்தும் ஐஸ்வர்யா அடங்குவதாக இல்லை.அடுத்த படத்தை இயக்குவதற்கு ரெடியாகிவிட்டார்.

நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற முனைப்பில் ஐஸ்வர்யா அடுத்த படத்திற்கான கதையையும் ரெடி பண்ணி விட்டாராம். அதுமட்டுமில்லாமல் தற்போது அடுத்த படத்திற்கான ஹீரோவையும் தீவிரமாக தேடி வருவதாக சொல்லப்படுகிறது. தீவிரமாக ஹீரோவை தேடி வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒருவழியாக அலைந்து திரிந்து தனது அடுத்த படத்திற்கான ஹீரோவை பிடித்து விட்டார் என்றும் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் கையில் சிக்கி இருக்கும் ஹீரோ யார் என்று தெரிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள். அந்த ஹீரோ வேறு யாரும் இல்லை.. சமீபத்தில் சித்தா படத்தின் மூலம் ஹிட் கொடுத்த சித்தார்த்த தான் ஹீரோவாம். தனது புதிய கதையை கையோடு எடுத்துச் சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் சித்தார்த்தை சந்தித்து கதையை சொல்லி இருக்கிறார்.

கதையைக் கேட்டதும் சித்தார்த் கதை பிடித்து போய்விட்டதாகவும் பவுடர் ஸ்கிரிப்ட் கொடுங்க என்று சொல்லி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நீண்ட நாள் கழித்து சித்தா படத்தின் மூலம் ஹிட் கொடுத்த சித்தார்த், அடுத்த படத்தின் கதையை பொறுத்திருந்து தேர்வு செய்யாமல் இப்படி ஐஸ்வர்யாவிடம் மாட்டிக் கொண்டாரே என்று பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படம், அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு மிக பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல். அண்ணாத்தே படத்தின் மூலம் மிக பெரிய சரிவை சந்தித்து இருந்த ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் மூலம் மீண்டும் எழுந்தார், ஆனால், எழுந்த வேகத்தில் லால் சலாம் படத்தில் படு பாதாளத்தில் விழுந்துவிட்டார் ரஜினிகாந்த், அந்த வகையில் ரஜினிகாந்துக்கே இந்த நிலை என்றால், மற்ற நடிகர்கள் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிக்க சற்று யோசித்து முடிவு செய்யுங்கள் என பலரும் அட்வைஸ் செய்து வருகிறார்கள்.