பாலா கொடுத்த உச்சக்கட்ட டார்ச்சர்… தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி வந்த நடிகை…

0
Follow on Google News

சூரியா – பாலா இருவருக்கும் இடையில் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது முதலே சூர்யா மற்றும் பாலா இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. நந்தா படத்தில் சூர்யாவை எப்படி கையாண்டாரோ அதேபோன்றுதான் வணங்கான் படத்திலும் கையாண்டு உள்ளார் பாலா. ஆனால் சூர்யா நந்தா படத்தில் இருந்ததை விட தற்போது பல மடங்கு உயரத்துக்கு சென்றுள்ளதால் பாலாவின் நடவடிக்கை மீது சூர்யாவுக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் அடிக்கடி உரசல் ஏற்பட்டு வந்த வந்துள்ளது.

பாலா மீது தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்த முடியாத சூர்யா, பல நேரங்களில் படப்பிடிப்பு தளத்தில் உதவி இயக்குனரை மிக கடுமையாக வும், அநாகரீகமாகவும் திட்டி தீர்த்து உள்ளார் சூர்யா. இது பாலாவை ஜாடை மாடையாக சூர்யா திட்டுவது படப் படிப்பில் இருந்த அனைவரும் நன்கு அறிந்துள்ளனர். மேலும் உதவி இயக்குனரை சூர்யா திட்டுவதை பலமுறை கவனித்த பாலா அதைக் கண்டும் காணாமலும் சென்றுள்ளார். ஆனால் பாலா நம்மைத்தான் ஜாடை மாலையாக சூர்யா திட்டுகிறார் என்று நன்கு அறிந்துள்ளார்.

இந்நிலையில் சூர்யாவை திட்டமிட்டு வெச்சு செய்யும் நோக்கில் படப்பிடிப்பில் தளத்தில் உச்சி வெயிலில் சூர்யா ஓடும் காட்சியை மீண்டும் மீண்டும் ரீ டேக் எடுத்துள்ளார் பாலா, ஒரு கட்டத்தில் இதுக்கு மேல ஓட முடியாமல், படப்பிடிப்பு தளத்தில் இருந்தே சூர்யா ஓடிவிட்டார், இதன் பின்பு வணங்கான் படம் கைவிடப்பட்டது. இதன் பின்பு நடிகர் அருண் விஜயை வைத்து வணங்கான் படத்தை எடுத்து முடித்துள்ளார் பாலா.

பாலாவின் படங்கள் என்றாலே நடிகர்கள் ஒட்டுமொத்த உழைப்பையும் கொட்டி அவரை திருப்திப்படுத்தும் அளவிற்கு நடிக்க வேண்டும். மேலும் அவர் எதிர்பார்த்த அளவிற்கு நடிக்கவில்லை என்றால் ஆத்திரத்தில் நடிகர்களை கண்டபடி திட்டுவார் என்றும், சில சமயங்களில் கை ஓங்குவார் என்றும் பலர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம்.

படத்தின் காட்சிகள் தான் எதிர்பார்த்த மாதிரியே நல்லா வரணும் என்பதற்காக சில இயக்குனர்கள் நடிகர்களை திட்டியபடியே வேலை வாங்குவது வழக்கம் என்றாலும், இயக்குனர் பாலா சில சமயங்களில் எல்லை மீறி கோபத்தில் நடிகர்களை அடித்து விடுவார். இது குறித்து அவரிடம் வேலை பார்த்த நடிகர்கள் பல பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

இப்படியான நிலையில், நடிகை மமீதா பாலா குறித்து கூறியிருப்பதாவது: “வணங்கான் படத்தில் முதலில் நான் நடித்திருந்தேன். படத்தில் வில்லுப்பாட்டு காட்சி ஒன்றுக்காக நான் தாளம் போட்டுக் கொண்டே பாட வேண்டி இருந்தது. பயிற்சியாளர் எனக்கு அதை அப்போது ஒரு முறை தான் கற்றுக் கொடுத்திருந்தார். உடனடியாக பாலா அதை செய்து காட்டும்படி கூறினார். ஆனால் நான் அதை ஒருமுறை தான் கற்று இருந்தேன் என்பதால் மூன்று முறைக்கு மேல் டேக் சென்றுவிட்டது.

இதனால் கோபமடைந்த பாலா என்னை அசிங்கமாக திட்டியபடியே முதுகில் அடித்தார். இது எனக்கு புதிதாக இருந்தது அதனால் படத்தில் இருந்து விலகி விட்டேன்” என்று குற்றம் சாட்டியுள்ளார். இவரது குற்றச்சாட்டுக்கு பாலாவின் ரசிகர்கள் பலரும், பாலாவின் கையால் அடி வாங்கினால் தேசிய விருது நிச்சயம், பள்ளி என்றால் ஆசிரியர் அடிக்கத்தான் செய்வார் அதற்காக படிக்காமல் ஓடி விடுவீர்களா என்று கமெண்ட் செய்து வருகின்றனர். அதேசமயம் மற்றொரு தரப்பினர் பாலா இப்படித்தான் ஒரு சைக்கோ என்று அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.