வெற்றிமாறன் பெயரை கேட்டதும் தெறித்து ஓடும் விஜய்… பிண்ணனி கரணம் இது தான்…

0
Follow on Google News

இயக்குனர் வெற்றிமாறன் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூலிலும் தனி முத்திரை பதித்து வரக்கூடியது. தற்போது விடுதலை 2ம் பாகம் இயக்கி வரும் வெற்றிமாறன், விரைவில் சூர்யாவின் வாடிவாசல் படப்பிடிப்பை தொடங்குவார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். அதேநேரம் விஜய்யின் தளபதி 69 இயக்குநர் லிஸ்ட்டிலும் வெற்றிமாறனின் பெயர் தான் முன்னணியில் உள்ளது.

இந்நிலையில் தற்போது இணையத்தில் புதிய தகவல் உலாவி வருகிறது. ‘விடுதலை 2’ படத்தை முடித்ததும் வாடிவாசலை துவங்க போவதாக பல பேட்டிகளில் வெற்றிமாறன் கூறி வந்தார். இந்நிலையில் இப்படம் குறித்து அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றினை பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு பகிர்ந்துள்ளார். அதாவது ‘வாடிவாசல்’ படத்திலிருந்து வெளியேறும் முடிவில் சூர்யா இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதற்கேற்றார் போல் தற்போது ‘கங்குவா’ படத்தினை முடித்துள்ள சூர்யா, அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்திலும் பாலிவுட்டில் மகாபாரத கதையை தழுவி உருவாகும் ‘கர்ணா’ படத்திலும் நடிக்க தயார் ஆகி வருகிறார். இதனால் ‘வாடிவாசல்’ படத்திலிருந்து சூர்யா வெளியேறுவார் என கூறப்படுகிறது.

மேலும், சூர்யா விலகியதை தொடர்ந்து ‘வாடிவாசல்’ படத்தினை தனுஷை வைத்து இயக்க வெற்றிமாறன் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. மறுபக்கம் கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய், இனி அரசியல் தலைவராக வலம் வரவுள்ளார். அதன்படி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், அரசியலுக்காக சினிமாவில் இருந்தும் விலகுகிறார். இதனையடுத்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் தவிர மேலும் ஒரேயொரு படத்தில் மட்டும் நடிக்க முடிவு செய்துள்ளாராம் விஜய்.

இந்தப் படம் குறித்த தகவல்கள் வெளியாகி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. அதன்படி தளபதி 69 படத்தின் இயக்குநர்கள் லிஸ்ட்டில் பலரது பெயர்கள் அடிப்பட்டன. இறுதியாக இதில் வெற்றிமாறன் தான் தளபதி 69 படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. கோட்டா நீலிமா என்பவர் எழுதிய நாவல் ‘ஷூஸ் ஆஃப் தி டெட்.’ அரசியல் நாவலான இது உண்மைக் கதையை தழுவி எழுதப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த கதையில் கோவிந்த், கோபிநாத் என்ற இரண்டு சகோதர்கள், மஹாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களில் கோவிந்த் டெல்லியில் பிரபலமான வழக்கறிஞராக பணிபுரிகிறார். கோபிநாத் சொந்த ஊரிலேயே விவசாயம் செய்து பிழைப்பு நடத்துகிறார். இவர்களில் கோபிநாத் விவசாயம் செய்ய முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறார்.

இதனையடுத்து தனது சகோதரனின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்துகிறார் கோவிந்த். அரசியல், ஊழல், லஞ்சம், விவசாயத்துக்கு எதிரான அரசின் அலட்சியங்கள் என சீன் பை சீன் பக்கா பொலிட்டிக்கல் ஜானர் கதையில் தளபதி 69 உருவாகவுள்ளதாகவெல்லாம் கூறப்பட்டது. இந்நிலையில் இப்படம் குறித்தும் ஒரு அதிர்ச்சிகரமான தகவலினை பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு பகிர்ந்துள்ளார்.

அதாவது தளபதி 69 படத்தை வெற்றிமாறன் இயக்கி விடலாம் என நினைத்த நிலையில், திராவிட அரசியலில் வெற்றிமாறன் ஊறிக் கிடப்பதை பார்த்த விஜய் இப்போதைக்கு அவருடன் இணைந்தால் தனது அரசியல் நுழைவுக்கு அது பெரிய சிக்கலாகி விடும் என நினைத்து வெற்றிமாறனை தளபதி 69 படத்துக்கு டிக் செய்ய வேண்டாம் என முடிவெடுத்து விட்டதாக செய்யாறு பாலு சமீபத்திய வீடியோவில் கூறியுள்ளார்.