பட்டையை கிளப்பும் ராம்கி, ஆர்.கே. சுரேஷ் நடித்த “வேட்டை நாய்” திரைப்படம்… வேட்டை நாய்க்கும் எஜமானுக்கும் நடக்கும் யுத்ததில் இறுதியில் வென்றது எது?

0
Follow on Google News

ராம்கி மற்றும் ஆர்.கே. சுரேஷ் நடித்த வேட்டைநாய் திரைப்படம் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியது, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆர்.கே. சுரேஷ், மருது, தாரை தப்பட்டை,மற்றும் மம்முட்டியுடன் மதுர ராஜா போன்ற பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இவருக்கு வில்லன் ரோல் மிகவும் கச்சிதமாக அமைந்துவிடும்.

சரவணன் சக்தி, ராஜ் சேதுபதி இயக்கத்தில் வெளிவந்த பில்லா பாண்டி படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர் என்பதால் அஜித் மீது பற்றுக் கொண்ட ரசிகனின் படமாக இது பில்லா பாண்டி அமைந்தது. தற்போது திரைக்கு வந்த “வேட்டை நாய்” திரைப்படத்தில் ராம்கி தாதாவாக, அவருக்கு அடியாட்களாக ஆர்.கே. சுரேஷ் நடித்துள்ளார்.

வில்லனிடம் அடியாளாக வேலை செய்வது, காதல் வலையில் விழுவது வில்லனிடம் இருந்து வெளியே வந்து திருந்தி வாழ்வது போன்ற, வழக்கம்போல உள்ள சினிமா கதை தான் என்றாலும் இந்த காலகட்டத்திற்கு ஏற்றார்போல் இயக்குனர் ஜெய் சங்கர் இயக்கியுள்ளார். அனைவரும் பார்த்து மகிழும் நல்ல குடும்ப கதையாக உள்ளதால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.