நான் ரெம்ப பிசி… கச்சேரியா நோ..! ஓவர் பில்டப் கொடுக்கும் ராஜலக்ஷ்மி செந்தில்..புறக்கணிக்கும் கிராம மக்கள்..

0
Follow on Google News

விஜய் டிவியில் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று கிராமிய பாடல்களை பாடி பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி தம்பதி. கிராமிய பாடல்கள் அழிந்து கொண்டிருப்பது போன்றும் அதை காக்க வந்தவர்கள் தான் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி தம்பதி என்கிற ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டதை தொடர்ந்து கிராமங்கள் தோறும் இந்த தம்பதியினருக்கு பெரும் ஆதரவு பெருகியது.

சூப்பர் சிங்கர் நிகழிச்சியில் கலந்து கொண்ட செந்தில்கணேஷ், அந்த சீசனில் டைட்டல் வின்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே இந்த தம்பதி ஏற்கனவே கோயில் கலை நிகழ்ச்சிகளில் கிராமிய பாடல்களை பாடி வந்தனர். ஆனால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு தான் இவர்கள் பிரபலமாக அறியப்பட்டனர்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இந்த தம்பதியினர் பங்கு பெறுவதற்கு முன்பு, அவர்களின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு குழுவாக கிராமகளில் நடக்கும் கச்சேரி நிகழ்ச்சியில் பங்கேற்று பாட்டு பாடி வந்தனர், ஒரு நிகழ்ச்சிக்கு சுமார் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை மொத்த அந்த குழு பெற்று வந்துள்ளனர், இதனால் இந்த தம்பதியினர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பொது அதிகம் கிராமத்தில் இருந்து ஆதரவு தெரிவித்து வந்தனர்,

இவர்கள் இதற்கு முன் நிகழ்ச்சியில் பங்கேற்று பாடிய கிராமத்தை சேர்ந்தவர்கள் , நம்ம ஊர் திருவிழாவில் பாடியவர்கள் இவர்கள் என பெருமை அடைந்தனர், இப்படி மக்களின் அமோக ஆதரவை பெற்று கிராமிய பாடல்களை பாடி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ராஜலக்ஷ்மி – செந்தில் தம்பதியினர், இறுதியில் செந்தில் அந்த போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டர். இதன் பின்பு சினிமா திரைப்படங்களில் படுவதற்கு வந்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்ட ராஜலக்ஷ்மி – செந்தில் தம்பதியினர்,

வெளிநாடுகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று கிராமிய பாடல்களை பாடி வந்தனர், இந்நிலையில் மிக பிரபலமான இந்த தம்பதியினர், கிராமத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பாட அவர்களுக்குள் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து அவர்களை கச்சேரிக்கு பாட புக்கிங் செய்ய சென்றவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்கள். பெரும்பாலும் கிராமத்தில் நடக்கும் திருவிழா நிகழ்ச்சிகளில் பாடி வரும் இவர்கள்,

தற்போது ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற்று பாடுவதற்கு கச்சேரி குழுவுக்கு கொடுக்கும் பணத்தை சேர்க்காமல் இவர்களுக்கு மட்டுமே தனியாக ஒரு லட்சம் வரை கேட்பதாக கூறப்படுகிறது, மேலும் இருவரும் சேர்ந்து மொத்தம் 10 பாடல் மட்டும் தான் பாடுவார்கள் என அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான் என்பது போன்று கண்டிஷன் போட்டுகிறார்களாம், இருந்தும் கிராம மக்கள் ஆசை படுகிறார்கள் என்பதற்க்காக இவர்களை அழைத்து பாட வைத்து வந்துள்ளார்கள்.

இந்நிலையில் தற்போது கிராமங்களில் நடக்கும் கச்சேரிகளில் பட ராஜலக்ஷ்மி – செந்தில் தம்பதியினரை புக்கிங் செய்ய தொடர்பு கொண்டால், நாங்க ரெம்ப பிசி, கச்சேரியில் பட நேரம் இல்லை என பதில் வருவதாக கூறப்படும் நிலையில், எல்லாம் நேரம் என தலையில் அடித்து கொண்ட கிராம மக்கள் உன் கச்சேரியே எங்களுக்கு தேவையில்லை என இவர்களை புறக்கணிக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.