லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் பேன் இந்தியா திரைப்படம்.. தமிழ் நடிகருக்கு வாய்ப்பில்லை.. ஏன் தெரியுமா.?

0
Follow on Google News

சென்னை : மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தனது கைதி திரைப்படத்தின் மூலம் இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்தார். அந்த திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் வேளையில் இயக்குனர் லோகேஷின் அடுத்த திட்டம் அனைவரையும் அசரவைத்துள்ளது.

மல்டி ஸ்டார் ப்ராஜெக்ட்டாக வெளிவந்து 300 கோடி வசூலை ஈட்டியுள்ள விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கைதி 2, சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் ஒரு படம் மற்றும் சூர்யாவுடன் அடுத்த படம் என பிசியாக இருக்கிறார். அதற்கடுத்ததாக டோலிவுட்டிலும் கால்பதிக்க உள்ளார். அதற்காக முன்னணி நடிகர்களை அணுகியுள்ளார்.

சமீபத்தில் நடிகர் சிரஞ்சீவியை லோகேஷ் நேரில் சென்று சந்தித்தார். அப்போது சிரஞ்சீவி லோகேஷை மிக்வும் பாராட்டியுள்ளார். அதைத்தொடர்ந்து சிரஞ்சீவியின் மகனும் முன்னணி நடிகருமான ராம் சரண் ஒரு பெரிய ஒப்பந்தத்தை லோகேஷுக்கு கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் லோகேஷ் தனது ஸ்க்ரிப்டுடன் பல நடிகர்களை சந்தித்துள்ளார்.

மிகப்பெரிய பட்ஜெட்டுடன் பான் இந்தியா திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தில் நடிக்க ஜூனியர் என்டிஆர் மற்றும் பிரபாஸ் ஆகியோரை சந்தித்துள்ளார். அவர்கள் அதற்க்கு சம்மதம் தெரிவித்தார்களா இல்லையா என்ற தகவல் வெளியாகும் முன் புஷ்பா பட ஹிட் ஹீரோவான அல்லு அர்ஜுனை லோகேஷ் சந்தித்துள்ளார்.

தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்துவரும் அல்லு அர்ஜுன் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்தவுடன் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை தமிழகத்தை சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தயாரிப்பில் பங்குதாரராக இணைய தற்போதே சிலர் தூதுவிடுவதாக செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

தமிழர்கள் வயிற்றில் அடிக்கும் ரஜினிகாந்த்.. கொந்தளிக்கும் சினிமா துறையினர்.. என்ன செய்தார் ரஜினி தெரியுமா.?=