சமந்தா அருகிலே குடியேறிய நாக சைந்தய்யா .. மீண்டும் மலரும் காதலா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வந்த நடிகை சமந்தா, தன்னுடைய சினிமா மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் பொழுது தெலுங்கு நடிகர் நாகார்ஜுன் மகன் நாகசைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு தான் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருவேன், என்னுடைய சுதந்திரத்தில் நீங்கள் தலையிடக்கூடாது என்கின்ற கண்டிஷனுடன் தான் நாகசைதன்யாவை திருமணம் செய்ய சம்மதித்தார் சமந்தா.

திருமணம் முடிந்தும் சமந்தாவுக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது, தொடர்ந்து சினிமாவில் பிசியாக இருந்து வந்த நடிகை சமந்தா சினிமாவில் நடிப்பதற்கு நாகசைதன்யாவை குடும்பத்தினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த சுழலில் மனைவிக்கு ஆதரவாக இருக்க வேண்டிய கணவர் நாகசைதன்யா தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுடன் ஓன்று சேர்ந்து சமந்தா சினிமாவில் நடிப்பதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் அடிக்கடி சமந்தா மற்றும் நாகசைதன்யாவை இருவருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. முடிந்தளவு கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் நீங்களும் சினிமா துறையில் இருந்து வந்தவர்கள் தான் என பேசி புரிய வைப்பதற்கு சமந்தா கடும் முயற்சி செய்து வந்துள்ளார், ஆனால் சமந்தா சினிமாவில் நடிக்க கூடாது என்பதில் நாகசைதன்யா மற்றும் அவரது குடும்பத்தினர் பிடிவாதமாக இருந்துள்ளனர்.

நாளுக்கு நாள் பிரச்சனை அதிகரிக்க சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் ஒருவருக்கொருவர் பேசி ஒருமனதாக பிரிவதாக அறிவித்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கணவர் நாகசைதன்யாவை விட்டு பிரிவதாக அறிவித்த பின்பு சினிமா வாய்ப்புகள் சமந்தாவுக்கு அதிகரிக்க தொடங்கியது, ,மேலும் அவருடைய சம்பளமும் கிடு கிடுவென உயர்ந்தது, தமிழ் தெலுங்கு ஹிந்தி என அணைத்து மொழிகளிலும் பிசியானார் சமந்தா.

கடந்த சில மாதங்களாக புதிய வகை நோய் பாதிப்பு ஏற்பட்டு உடல் நல குறைவால், உடல் ரீதியாக கடும் பிரச்சனைகளை சந்தித்து வந்த சமந்தா. தற்பொழுது பூரண குணம் அடைந்து பழைய நிலைக்கு திரும்பி வந்துள்ளார் சமந்தா. மேலும் சமந்தா உடல் நிலை சரியில்லாத போது மருத்துவமனையில் சென்று உடல் நலம் குறித்து விசாரித்து வந்தார் நாக சைதையா. இந்நிலையில் தற்பொழுது சமந்தா குடியிருக்கும் வீட்டின் அருகிலே புதியதாக 15 கோடிக்கு வீடு வாங்கியுள்ள நாக சைந்தய்யா தற்பொழுது சமந்தா வீட்டின் அருகிலே குடியேறியுள்ளதாக கூறப்படுகிறது.