இளையராஜாவின் ஈன புத்தி… ஒருமையில் விளாசிய ஜேம்ஸ் வசந்த்..

0
Follow on Google News

இயக்குனர் சசிகுமார் நடித்து இயக்கிய சுபராமணியபுரம் படத்தின் இசை அமைத்ததின் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த், சுப்ரமணியபுரம் படத்தின் இசை அமைப்பாளராக வாய்ப்பு கிடைக்கும் முன் கிருஸ்துவ மதம் சார்ந்த ஆல்பம் தயாரித்து வெளியிட்டு வந்தவர் சுமார் இது போன்று 400க்கு மேற்பட்ட ஆல்பம் வெளியிட்டுள்ளார், இசை கற்று கொடுக்கும் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

சும்பரமணியபுரம் படத்திற்கு பின்பு அவர் இசையில் வெளியான படங்களில் அமைந்த பாடல்கள் ஏதும் சொல்லும்படி இல்லை,இதனால் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வேலையை செய்து வருகிறார், மேலும் தொடர்ந்து அரசியல் விமர்சனங்களை தெரிவித்து சர்ச்சையில் சிக்கி வருகின்றவர் ஜேம்ஸ் வசந்த், யு டுயூப் சேனல் ஒன்றில், இளையராஜா குறித்து மிக கடுமையாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

ஜேம்ஸ் வசந்த் பேசுகையில், இளையராஜா மாதிரி ஒரு மட்டமான ஆளை பார்க்கவே முடியாது, இளையராஜா ஒரு மனிதனாக மிகவும் மட்டமான ஒரு நபர், ஏனென்றால் கொஞ்சம் கூட முதிர்ச்சி இல்லாமல். ஒரு சாதாரண ஆளாக இருந்தால் நாம் இந்த அளவுக்கு அவரை விமர்சனம் செய்ய தேவையில்லை. சினிமா துறையில் பலர் அவரை சாமி என்று அழைப்பார்கள், நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் சாமி சாமி என்று தான் இளையராஜாவை அழைப்பார்.

ஏனென்றால் அந்த அளவுக்கு இளையராஜா ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர். ஆனால் ஆன்மீகத்தின் அதிக ஈடுபாடு கொண்டிருந்தாலும் வெளியில் மிகவும் அசிங்கமாக கூடியவர். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கிறிஸ்துவ மதத்தை பற்றி தவறாக பேசி அவர்களின் நம்பிக்கையை அசிங்கப்படுத்துவது போல் இளையராஜா பேசியிருந்தார். இவர் முட்டாள் போன்று அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் ஏசு கிறிஸ்து வாழ்ந்தாரா.? வந்தாரா.? உயிர்த்தெழுந்தார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.

இது அவருக்கு தேவையா.? என்ன சொல்ல வருகிறாராம், ரமண மகரிஷி ஒருத்தர் தான் செத்து உயிர்த்தெழுந்தார, கொஞ்சமாவது ஆன்மீக புரிதல் உள்ளவன் முதிர்ச்சி உள்ளவன் இப்படி பேசுவானா, ஒரு பண்பு உள்ளவன் எவனாவது இப்படி பேசுவானா, கோடிக்கணக்கான மக்கள் இயேசு கிறிஸ்துவை நம்புகிறார்கள், அப்படியானால் அத்தனை நபர்களையும் நாம் காயப்படுத்த வேண்டுமா.?

ஏனென்றால் இளையராஜா ஒன்றும் வரலாற்று ஆசிரியர் கிடையாது அத்தனை பெயரையும் கேவலப்படுத்த ஒரு ஈன புத்தி இருக்கே.? அதாவது நீங்கள் எல்லாம் தப்பு, நான் தான் சரி என்று என்று நினைக்கிற அந்த எண்ணம் இருக்கு இல்ல, அதனால தான் அவரை மட்டமான ஆட்கள் என்று சொல்கிறோம் என ஜேம்ஸ் வசந்த் ஒருமையில் இளையராஜாவை மிக கடுமையாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.