குடும்ப நண்பரா.? தொழில் அதிபரா.? இரண்டாவது திருமணம் சர்ச்சை குறித்து நடிகை மீனா விளக்கம்..

0
Follow on Google News

நடிகை மீனா கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இளம் வயதிலே கணவரை இழந்துள்ள நடிகை மீனா மற்றும் தந்தையை இழந்துள்ளார் மீனா மகள் இருவரின் சோகத்தில் ஒட்டுமொத்த திரையுலகம் பங்கேற்று தற்பொழுது வரை அவர்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள். மேலும் நடிகை மீனாவை சோகத்தில் இருந்து மீட்டெடுத்து அவரது வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்து திரைதுறையினர் உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில், அந்த வகையில் நடிகை மீனா தமிழ் சினிமாவுக்கு வந்து 40 வருடங்கள் நிறைவு அடைந்ததை தொடர்ந்து, மீனா 40 என்கிற விழா நடைபெற்றது, இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் உட்பட தென்னிந்திய சினிமா பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை மீனா இந்த தருணத்தில் தனது கணவரை ரொம்பவே மிஸ் பண்ணுவதாக கண்கள் கலங்கினார்.

மேலும் நடிகர் ரஜினிகாந்த் உட்பட விழாவிற்கு வந்த சினிமா பிரபலங்கள் மீனாவுக்கு இப்படி நடந்திருக்க கூடாது என வருத்தப்பட்டு பேசினார்கள். . இந்நிலையில் நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போவாக கடந்த சில மாதங்களாக தகவல் பரவி வருகிறது. மீனா இரண்டாவது திருமணம் செய்ய இருக்கின்றவர் அவரின் குடும்ப நண்பர், தொழில் அதிபர் என தொடர்ந்து மீனா குறித்து வதந்தி பரவியது.

இந்நிலையில், மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்து வாழும் தனுஷ் நடிகை மீனாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பயில்வான் ரங்கநாதன். மேலும் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நடிகர் தனுஷ் கணவரை இழந்து மகள் நைனிகாவுடன் வாழ்ந்து வரும் நடிகை மீனாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன என்றும்.

ரஜினியுடன் ஜோடிப் போட்டு நடித்தாலும் நடிகை மீனா அவருக்கு மகள் போலத்தான் இத்தனை வருடங்களாக பழகி வருகிறார். அதனால், கண்டிப்பாக தனுஷை மீனா திருமணம் செய்து கொண்டு தனது பெயரை கெடுத்துக் கொள்ள மாட்டார் என்று பயில்வான் ரங்கநாதன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது . சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பயில்வனுக்கு எதிராக கடும் கண்டன குரல் எழுந்தது.

இந்த நிலையில் மீனா இரண்டாவது திருமணம் குறித்து சர்ச்சைக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் நடிகை மீனா பேட்டி ஒன்றில் பேசியதாக தகவல் ஓன்று வெளியாகியுள்ளது. அதில் தனது கணவர் இல்லை என்பதையே தன்னால் இன்னும் நம்ப முடியவில் என்றும் அதற்குள் இந்த விஷயங்கள் எல்லாம் எப்படி பரவுகிறது என்றே தெரியவில்லை என்றும் வேதனையுடன் மீனா கூறியுள்ளார். மேலும் தற்போது தனது மகளின் எதிர்காலம் பற்றியும் தனது படங்களை தேர்வு செய்வதில் மட்டுமே தனது கவனம் இருப்பதாகவும் மீனா வேதனையுடன் விளக்கம் கொடுத்துள்ளது தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை மீனா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பயில்வான் ரங்கநாதன் பேசுவது இது முதல் முறை கிடையாது, ஏற்கனவே மீனா கணவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் பயில்வான் பேசியது அப்போது பலரின் எதிர்ப்புக்கு உள்ளானார் பயில்வான். மீனா கணவர் மரணம் குறித்து பயில்வான் பேசியதற்கு அப்போதே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பயில்வானை கடுமையாக பேசிய பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன்.

டேய் மருத்துவச் சான்றிதழ் வெளியிட்டால் என்ன.? வெளியிடவில்லை என்றால் உனக்கு என்னடா.? நடிகை மீனா ஒரு அடக்கமான சகோதரி, அவருடைய கணவருக்கு குறைந்த வயது, இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கு, மீனாவின் இடைக்கால வாழ்க்கை இன்னும் தொடர வேண்டியது இருக்கின்றது, அது மட்டுமல்ல அந்தக் குழந்தைக்கு ஒரு தந்தை இல்லை, மீனாவுக்கு ஒரு கணவர் இல்லை, கலை உலகமே அழுகின்றது.

ஆனால் ஒருத்தன் மட்டும் இதை வைத்து வியாபாரம் செய்கின்றார், அடங்க மாட்ட… நீ.. பணம் வேண்டும் என்பதற்காக அடுத்தவர்கள் இறப்பில் பிண வியாபாரம் செய்யாதே, எச்சரிக்கையாக சொல்கிறேன் பிளடி ராஸ்கல், நடிகைகளை பெண்களை அடுத்த வீட்டுப் பெண்களை தொடர்ந்து இப்படி இழிவாக பேசிக் கொண்டிருப்பவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவன் பேசிக் கொண்டே தான் இருப்பான் பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவான். எவனாக இருந்தாலும் சரி தாய்மார்களையும் நல்லவர்களையும் புண்படுத்தினால் மிக பெரிய கஷ்டத்தை சந்திக்க நேரிடும் என மிக கடுமையாக பயில்வான் ரங்கநாதனை ஏற்கனவே தயாரிப்பாளர் கே.ராஜன் கடுமையாக எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.