அனிரூத் எடுத்த முயற்சி… தனுஷ் – ஐஸ்வர்யா மீண்டும் இணைகிறார்கள்… என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

கடந்த ஜனவரி மாதம் நடிகர் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் பிரிவதாக அதிரடியாக அறிவித்து சுமார் 5 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பிரிவதாக அறிவித்த பின்பு, இரண்டு குடும்பத்தை சேர்ந்தவர்களும் மீண்டும் இவர்களை இணைத்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர், ஆனால் இருவருமே மீண்டும் இணைந்து வாழ்வதற்கு விருப்பம் இல்லை என திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.

ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்த பின்பு சுதந்திரமாக இருக்கலாம் என எதிர்பார்த்து இருவரும் பிரிந்தனர், இதில் குறிப்பாக கடந்த சில வருடங்களாக அடிக்கடி தனுஷ் – ஐஸ்வர்யா இருவருக்கும் இடையில் கடுமையான சண்டை நடைபெற்று வந்த நிலையில், ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்துவிட்டால் தன்னுடைய விருப்பம் போல் இருக்கலாம் என நினைத்து, மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிவதில் உறுதியாக இருந்தார் தனுஷ்.

ஆனால் தனுஷ் எதிர்பார்த்ததற்கு எதிர்மறையாக அவருக்கு நடந்தது. மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்த பின்பு சினிமாவில் மிக பெரிய சரிவை சந்தித்து, சினிமாவில் தன்னுடைய மார்க்கெட்டை பெருமளவில் இழந்தார். மேலும் புதியதாக பட வாய்ப்புகள் இல்லை, தனக்கு நெருக்கமாக இருந்த சினிமா துறையினர் பலர் தனுஷை விட்டு விலகி சென்றனர், இது தொடர்ந்தால் தனுஷ் சினிமா வாழ்க்கை விரைவில் முடிவுக்கு வந்து விடும் என சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் மருமகன் என்கிற அடையாளம் இல்லை என்றால் நாம் சினிமாவில் செல்லா காசு தான் என்பதை உணர்ந்து, மீண்டும் ரஜினிகாந்த் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மனைவி ஐஸ்வர்யாவுடன் இணைந்து விட வேண்டும் என கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் ரஜினிகாந்த் குடும்பத்தினர் விட்டு பிடிப்போம் என தனுஷை யாரும் கண்டுகொள்ளவில்லை.

இதனை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் திருசிற்றம்பலம் படத்தின் இசை அமைக்கும் பனி நடந்து வருகிறது, இந்த படத்தில் தனுஷ் ஒரு பாடல் எழுத, அதற்கு படத்தின் இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்கிறார். அப்போது தனுஷ் மற்றும் அனிரூத் இருவரும் மனம் விட்டு பேசியுள்ளனர், தனுஷ் மீண்டும் மனைவியுடன் இணைந்து வாழவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார், மேலும் மாமனார் ரஜினிகாந்தை நேரில் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் குடும்பத்தின் நெருக்கிய உறவு பையன் அநிருத் என்பதால் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா உடன் நெருக்கி பழக கூடியவர் அந்த வகையில் உங்களை இனைத்து வைப்பது எனது பொறுப்பு என தனுஷ்க்கு அனிரூத் உறுதியளித்துள்ளார். இதன் பின்பு ஐஸ்வர்யா உடன் அனிரூத் இது குறித்து பேசி வருவதாகவும், விரைவில் ஐஸ்வர்யா ஓகே சொல்லிவிடுவார் என்றும், தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

பிரபுதேவா செய்த அட்டூழியம்… நயன்தாராவுக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல்… என்ன அட்டூழியம் தெரியுமா.?