சுயமரியாதை முக்கியம்… நயன்தாரா விஷயத்தில் அஜித் எடுத்த அதிரடி முடிவு…. மதிக்க கற்று கொள்வாரா நயன்தாரா.?

0
Follow on Google News

நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9ம் தேதி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்றது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான காற்று வாக்கில் இரண்டு காதல் படம் வெளியான உடனே நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து, திருமணத்தை திருப்பதியில் நடத்த அதற்கான ஏற்பாடுகளை செய்ய முதலில் திருப்பதி சென்று திருமணம் நடைபெறும் இடங்களை பார்வையிட்டனர்.

ஆனால் திருப்பதியில் நயன்தாரா திருமணம் நடைபெற கோவில் நிர்வாகம் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இருந்தும் திருப்பதியில் திருமணம் நடைபெற வேண்டும் என்பது நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரின் நீண்ட நாள் ஆசை என்பதால் திருப்பதியில் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தனர். இந்நிலையில் நயன்தாரா திருமணம் நடைபெற இருக்கும் தகவல் அறிந்து பிரபல OTT நிறுவனம் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரையும் அணுகின.

இவர்கள் திருமணத்தை தாங்கள் விலை கொடுத்து வாங்கி கொள்வதாகவும், ஆனால் திருமணம் நடைபெறும் இடம் முழுக்க முழுக்க எங்களுடைய கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என தெரிவித்தது, ஆரம்பத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் தயங்கி நின்றாலும், OTT நிறுவனம் ரூபாய் 25 கோடி வரை தருவதாக தெரிவித்ததும் உடனே ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு சம்மதம் தெரிவித்தனர், நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் மிக குறைந்த அளவு அழைப்பிதழ் மட்டுமே கொடுத்திருந்தனர்.

அதிலும் அஜித், விஜய், சிவகார்த்திகேயன் உட்பட பலர் வரவில்லை, இந்நிலையில் அஜித், விஜய் இருவரும் நயன்தாரா உடன் தொடர்ந்து படங்கள் நடித்து வருகின்றவர்கள், இவர்கள் ஏன் நயன்தாரா திருமணத்துக்கு வரவில்லை என்று விசாரித்ததில், அழைப்பிதழ் கொடுத்த அனைவர்க்கும் ஒரு தகவல் சென்றுள்ளது. அதில், திருமணம் நடைபெறும் அரங்கம் உள்ளே தொலைபேசி அனுமதியில்லை, உங்கள் தொலைபேசியை நுழைவு வாயிலில் இருக்கும் காவலர்களிடம் ஒப்படைக்கவேண்டும்.

மேலும் திருமணம் நடைபெறும் இடத்திற்கு சிறிது தூரம்திற்கு மேல் உங்கள் வாகனம் அனுமதியில்லை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பேட்டரி கார் மூலம் அங்கிருந்து திருமணம் நடைபெறும் இடத்திற்கு உங்களை அழைத்து செல்வார்கள். இப்படி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க முக்கிய கரணம், நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரின் திருமணத்தை விலைக்கு வாங்கிய பிரபல OTT நிறுவனம் தான் என்றும், உள்ளே நடக்கும் எந்த ஒரு நிகழ்வும் புகைப்படமாக கூட வெளியே வந்து விடக்கூடாது என்பதற்காக.

இந்நிலையில் சுய மரியாதை இழந்து இப்படி ஒரு திருமணத்தில், அதுவும் நாம் அந்த திருமணத்தில் கலந்து கொள்வதை வீடியோவாக எடுத்து அதை OTT தளத்தில் வெளியிட்டு தன்னுடைய ரசிகர்கள் மூலம் பணம் சம்பாரிக்க நாம் ஏன் கலந்து கொள்ள வேண்டும் என அஜித் மற்றும் விஜய் ஆகியோர் நயன்தாரா திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை, மேலும் சிவகார்த்திகேயன் கூட புறக்கணித்து விட்டார். நயன்தாரா -விக்னேஷ் சிவன் இருவரின் இந்த செயல்களால் சினிமா துறையை சேர்ந்த யாரும் டிவீட்டர் பக்கத்தில் திருமண வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபுதேவா செய்த அட்டூழியம்… நயன்தாராவுக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல்… என்ன அட்டூழியம் தெரியுமா.?