மதுவுக்கு அடிமையான ஸ்ரீ திவ்யா… தண்ணியை போட்டு என்ன செய்து கொண்டிருக்கிறார் ஸ்ரீதிவ்யா தெரியுமா.?

0
Follow on Google News

ஆந்திராவை பூர்விகமாக கொண்டவர் நடிகை ஸ்ரீ திவ்யா, தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சதிரமாக பல படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சதிரமாக புகழ் பெற்றவர். தெலுங்கு சினிமாவில் சிம்ரன், சினேகா ஆகியோர் கதாநாயகியாக நடித்த தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஸ்ரீ திவ்யா, அதே போன்று அர்ஜுன் , மகேஷ் பாபு ஆகியோர் நடித்த தெலுங்கு படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஸ்ரீ திவ்யா.

தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமானார், இவர் தமிழுக்கு வருவதற்கு முன்பே தெலுங்கில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் தெலுங்கு சினிமாவில் இவருக்கு கதாநாயகியாக வரவேற்பு இல்லை. இருந்தும் தமிழில் ஸ்ரீ திவ்யா நடித்த முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ஐயா படத்தில் நயன்தாரா அறிமுகமான போது கிடைத்த அதே எதிர்பார்ப்பு ஸ்ரீ திவ்யா மீதும் தமிழ் சினிமாவில் இருந்தது.

ஆனால் அடுத்தடுத்து ஸ்ரீ திவ்யா நடித்த படங்கள் அனைத்தும் தொடர் தோல்வியை சந்தித்தது, இதற்க்கு காரணம் பட வாய்ப்பு கிடைத்தால் போதும் என தவறான கதை தேர்வு தான் என்பது குறிப்பிடதக்கது. ஐயா படத்தில் கிராமத்து கதைக்களம் குடும்ப பாங்கான பெண்ணான நயன்தாரா நடித்திருந்தாலும் அடுத்து அவர் நடித்த கஜினி, வல்லவன் போன்ற படத்தில் கிளாமராக நடித்திருப்பார். இது தான் நயன்தாராவை அடுத்தடுத்து முன்னனி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்தது.

ஆனால் நடிகை ஸ்ரீதிவ்யா தொடர்ந்து கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களில் மட்டும் நடித்து வந்ததால், அவர் அந்த கதைக்கு தான் செட் ஆவர், அதுவும் சென்டிமென்ட காட்சிகளுக்கு செட் ஆகமாட்டார் என்பதால் பெரிதாக அவருக்கும் வாய்ப்புகள் ஏதும் வரவில்லை, இருந்தும் நடிகர் விஷால் உடன் ஜோடி சேர்ந்து ஸ்ரீதிவ்யா நடித்த மருது படம் வெற்றி பெற்றாலும், அவருடைய கதாபாத்திரம் பெரிதாக பேசும்படி இல்லை.

இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு மட்டும் ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியான 5படங்களில் மருது தவிர்த்து அனைத்தும் தோல்வியை தழுவியதால் அடுத்து பட வாய்ப்புகள் அவருக்கு கிடக்கவில்லை, சுமார் 5 வருடங்களாக படவாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் ஸ்ரீ திவ்யா அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகள் தேடி வருகிறார். மேலும் தொடர்ந்து இரவு பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் ஸ்ரீ திவ்யா.

அங்கே சினிமா துறையை சேர்ந்தவர்களுடன் மது விருந்தில் கலந்து கொண்டு படவாய்ப்புகள் தேடி வருகிறார். இருந்தும் மது விருந்தில் ஸ்ரீ திவ்யா உடன் ஜாலியாக பேசி பழகும் சினிமா துறையினர், பார்ட்டி முடிந்ததும் ஸ்ரீ திவ்யாவை கண்டு கொள்வதில்லை என கூறப்படுகிறது. இதனால் பட வாய்ப்பு கிடைக்காத விரக்தில் வீட்டிலே இருக்கும் ஸ்ரீ திவ்யா மது போதைக்கு அடிமையாகி மது பழக்கத்தை கைவிடமுடியாமல், பகலிலும் மது அருந்திவிட்டு, போதையில் தனக்கு நெருக்கமான நடிகர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பட வாய்ப்பு கேட்டு நச்சரிப்பதால், பலர் ஸ்ரீதிவ்யா கால் செய்தால் எடுப்பதே இல்லை என கூறப்படுகிறது.

பிரபுதேவா செய்த அட்டூழியம்… நயன்தாராவுக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல்… என்ன அட்டூழியம் தெரியுமா.?