கீர்த்தி சுரேஷுக்கு கல்தா கொடுத்து கழட்டிவிட்ட அனிரூத்.. பிரபல பாடகியுடன் அஜால் குஜால்.. யார் தெரியுமா.?

0
Follow on Google News

பொதுவாக தமிழ் சினிமாவில் உள்ள இசையமைப்பாளர்கள் சக நடிகைகளுடன் கிசுகிசுக்களில் சிக்க மாட்டார்கள். ஆனால் இதற்கு விதிவிலக்காக இசையமைப்பாளர் அனிருத் பல நடிகைகளுடன் கிசுகிசுவில் தொடர்ந்து சிக்கி வரக்கூடியவர். நடிகைகள் எமி ஜாக்சன், ஆண்ட்ரியா, தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி என பல நடிகைகளுடன் தொடர்ந்து கிசு கிசுவில் சிக்கி இரவு பார்ட்டி மது விருந்து என செம்ம ஜாலியாக வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகின்றவர் அனிருத்.

அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் நெருங்கிய பழகி வந்தார் அனிருத். ஒரு கட்டத்தில் இவர்களின் நெருக்கம் அதிகரிக்க அடிக்கடி இருவரும் ஜோடியாக இரவு பார்ட்டிகளில் கலந்து கொள்வது பார்ட்டி முடிந்ததும் இவர்கள் இருவரும் ஒரே காரில் அங்கிருந்து ஜோடியாக புறப்பட்டு செல்வது என்கிற தகவல்கள் வெளியானது. கீர்த்தி சுரேஷ் மற்றும் அனிருத் இருவரும் இரவில் நடக்கும் மது விருந்து பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் கூட சமூக வலைதளத்தில் வைரலானது.

இதனை தொடர்ந்து அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் காதலித்து வருவதாகவும் கீர்த்தி சுரேஷ் கைவசம் இருக்கும் படங்களை முடித்த பின்பு, அனிருத் – கீர்த்திசுரேஷ் திருமணம் நடைபெறும் என கூறப்பட்டது. ஆனால் கீர்த்தி சுரேஷ் மற்றும் அனிருத் இருவரின் வீட்டிலும் அவர்களின் பெற்றோர்கள் திருமணத்திற்கு வரன் பார்த்து வந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் இருவரின் வீட்டார் கவனத்துக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் ஒரு சினிமா நடிகையை அனிருத் திருமணம் செய்து கொள்வதற்கு அனிருத் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்னனர், அதே போல் கீர்த்தி சுரேஷ் தாய் மற்றும் தந்தை இருவரும் சினிமா துறையை சேர்ந்தவர்கள் என்பதால், அனிருத் பல நடிகைகளுடன் கிசு கிசுவில் சிக்கி வந்த தகவல் அறிந்து அநிருத் உடன் கீர்த்தி சுரேஷ் பழகுவதை கடுமையாக எதிர்த்து வந்துள்ளார்கள்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் உடன் நெருங்கி பழகுவதற்கு முன்பு பல நடிகைகளுடன் அனிருத் கிசுகிசுகளில் சிக்கி இருந்தாலும், தன்னுடன் பழகிய பின்பு தனக்கு நேர்மையாக இருப்பார் அனிரூத் என கீர்த்தி சுரேஷ் உறுதியாக நம்பி வந்துள்ளார். இந்த நிலையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷை கல்தா கொடுத்து கழட்டி விட்டு, பின்னணி பாடகி ஜோனித்தா காந்தியிடம் அஜால் குஜாலாக அனிருத் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

கனடா நாட்டை சேர்ந்த பிரபல பின்னணி பாடகியான ஜோனிதா காந்தி தமிழ் சினிமாவில் சில பாடல்களை பாடியுள்ளார். அதில் அநிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் ஒரு பாடலை ஜோனிதா காந்தி பாடியிருந்தார். அப்போது அனிருத்துடன் நெருங்கி பழகிய ஜோனிதா நாளடைவில் இவர்கள் நெருக்கம் அதிகமாகி அடிக்கடி மும்பை மற்றும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றி வர தொடங்கினார்கள்.

மேலும் இரவு பார்ட்டிகளிலும் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டுள்ள புகைப்படம் வெளியானது. அப்போது நிகழ்ச்சி ஒன்றில் ஜோனித்தா காந்தி பேசுகையில் அனிருத்தை திருமணம் செய்வேன் என்று பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் கீர்த்தி சுரேஷ் உடன் நெருங்கி பழகத் தொடங்கிய அனிருத் இடையில் ஜோனிதா காந்தியுடன் பழகுவதை நிறுத்திக் கொண்டார்.

இந்நிலையில் தற்பொழுது கீர்த்தி சுரேஷுக்கு கல்தா கொடுத்து கழட்டிவிட்ட பின்பு தற்பொழுது மீண்டும் ஜோனிதா காந்தியுடன் ஒன்றாக அனிருத் சுற்றி வருவதாக தகவல் வெளியாகிறது. தற்பொழுது இந்த தகவல் கீர்த்தி சுரேஷுக்கு மிகப்பெரிய வருத்தம் அடையச் செய்துள்ளதாகவும், என்னை அனிருத் ஏமாற்றி விட்டார் என்று சக தோழிகளிடம் கீர்த்தி சுரேஷ் புலம்பி வருவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.