ஒழுங்கா தொழிலார்களுக்கு சோறு போடுங்க விஜய்.. கண்ணீர் மல்க கதறும் தொழிலார்கள்.. விஜய் இப்படி செய்யலாமா.?

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அஜித் நடிக்கும் துணிவு படம் வெளியாகும் பொங்கல் அன்று நேரடியாக மோதுகிறது விஜய் நடிக்கும் வாரிசு படம். இந்த படத்தை தெலுங்கு சினிமா துறையைச் சேர்ந்த இயக்குனர் வம்சி, மற்றும் பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் வம்சி தயாரிப்பில் விஜய் நடிக்கும் வாரிசு படம் பெரும்பாலான படப்பிடிப்பு ஆந்திராவில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் விஜய் தன்னுடைய சொந்த குரலில் பாடிய பாடல் காட்சிகள் ஓன்று படமாக்கப்பட்டு வந்த வீடியோவை படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றும் நபர் மூலம் தொலைபேசியில் எடுக்கப்பட்டு, அது சமூக வலைதளத்தில் வைரலானது. இது போன்று வம்சி படத்தின் படப்பிடிப்பு வீடியோ , அடிக்கடி லீக் ஆகி வந்த நிலையில் இது வாரிசு படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் குறைய தொடங்கியது.

இதனால் நடிகர் விஜய்க்கு பட குழுவினர் மீது கடும் கோபம் ஏற்பட்டது. வீடியோ லீக்கான அடுத்த நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த விஜய், அங்கே பணியாற்றிய தொழிலாளர்கள் அனைவரையும் நேரில் அழைத்து கடுமையாக எச்சரித்து பேசினார். மேலும் படப்பிடிப்பில் பாதுகாப்புக்கு இருந்த பவுன்சர்களை உடனே மற்ற வேண்டும் உத்தரவிட்டார் விஜய்.

இந்த நிலையில் தன்னுடைய படப்பிடிப்பில் ஒரு வீடியோ லீக் ஆனதற்கு துடிதுடிக்கும் விஜய், இரவு பகல் பாராமல் கடுமையாக உழைக்கும் தொழிலாளர்களுக்கு ஒழுங்கா சோறு போடுவதில் அக்கறை காட்ட தவறிய ஒரு சம்பவம் தற்பொழுது அரங்கேறி விஜய் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். பொதுவாக சினிமா படப்பிடிப்பு தளத்தில் ஹீரோவுக்கு ஹீரோ மற்றும் இயக்குனர்களுக்கு ஒரு வகை சாப்பாடு.

முக்கிய டெக்னீசியன்களுக்கு ஒரு வகை சாப்பாடு, அதன் பின்பு லைட் மேன் மற்றும் தொழிலாளர்களுக்கு ஒரு வகை சாப்பாடு என்று படப்பிடிப்பு தளத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இதில் வாரிசு படம் தொடங்கியது முதல் தற்பொழுது வரை லைட் மேன் மற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சாப்பாடு மிக மோசமாக இருந்து வருகிறது. இருந்தும் வேறு வழியின்றி தொழிலாளர்கள் அந்த சாப்பாட்டை சாப்பிட்டு வருகிறார்கள்.

மோசமான சாப்பாட்டை தொழிலார்கள் சாப்பிடும் அதே படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் விஜய்க்கு இந்த விஷயம் தெரிந்தும் கண்டும் காணாமல் கடந்து செல்வதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. வாரிசு படம் இதுவரை சேட்டிலைட் போன்ற விற்பனையில் மட்டும் சுமார் 250 கோடி வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இத்தனை கோடிகளை அள்ளி குவிக்கும் வாரிசு படத்தின் தயாரிப்பாளர், அந்த படத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஒழுங்காக சோறு கூட போடாததும்.

மேலும், தான் நடிக்கும் படத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் மோசமான சாப்பாட்டை சாப்பிடுவது அறிந்தும் நடிகர் விஜய் கண்டும் காணாமல் இருப்பதும், அந்த மோசமான சாப்பாட்டை சாப்பிடும் தொழிலாளர்களை கண்ணீர் விட்டு கதற வைத்துள்ளது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகாந்தின் படைப்பிடிப்பு தளத்தில் மட்டும் நடிகர் என்ன விஜயகாந்த் சாப்பாடு சாப்பிடுகிறாரோ, அதே சாப்பாடு தான் கீழே இருக்கும் தொழிலாளர்களும் சாப்பிடுவார்கள்.

அந்த வகையில் பல கோடி சம்பாரிக்கும் நடிகர் விஜய் தனக்கு நல்ல சாப்பாடு கிடைத்தால் போதும் என்று இருக்காமல், விஜயகாந்தை பின்பற்றி உழைக்கும் தொழிலாளர்களுக்கு ஒழுங்கா நல்ல சோறு போடுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று, வாரிசு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் படுமோசமான சாப்பாட்டை கண்ணீர் மல்க சாப்பிடும் அந்த தொழிலாளர்களை பார்ப்பவர்கள் பரிதாபப்பட்டு தெரிவிக்கின்றனர்.