இசைக்கு தீடிரென குட் பை சொன்ன அனிருத்… இந்த தீடிர் முடிவுக்கு என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் அன்பு – அறிவு, இரட்டைகளான இவர்கள் நீண்ட நாட்களாக படம் இயக்க வேண்டும் என்று பல முயற்சிகளை செய்து வந்தனர். இதற்கு முன்பு நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் புதிய படம் ஒன்று இயக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. படப்பிடிப்பு தொடங்கும் சமயத்தில் பல்வேறு காரணங்களால் ராகவா லாரன்ஸ் படத்தில் இருந்து இயக்குனர்கள் அன்பு- அறிவு மாற்றப்பட்டனர்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜை சந்தித்து தாங்கள் இயக்கும் புதிய படத்திற்கு கதை திரைக்கதை எழுதி தர கேட்டுள்ளார்கள் அன்பு – அறிவு. அதற்கு லோகேஷ் கனகராஜ் கதை திரைக்கதை எழுதி கொடுத்துள்ளார், மேலும் அந்த படத்தின் காட்சிகளையும் எப்படி எடுக்க வேண்டும் என்பதை விளக்கி கூறும்போது, அதற்கு ஸ்டண்ட் மாஸ்டர் அன்பு-அறிவு எங்கள் படத்தில் நீங்களே கதாநாயகனாக நடித்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

உடனே அவர்களுடைய ஆசைக்கேற்ப இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக காமிட்டாகி உள்ளார். மேலும் இந்த படத்தில் இரண்டு ஹீரோ நடிக்க இருப்பதால் மற்றொரு ஹீரோவாக அனிருத் இந்த படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்த படம் சுமார் 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஹீரோவாக அனிருத் கமிட்டான பின்பு புதியயதாக இசை அமைக்க வரும் வாய்ப்பபை தவிர்த்து வருகிறார்.

மேலும் ஏற்கனவே கமிட்டாகி இருந்த கவின் நடிக்கும் படத்திலிருந்து தற்பொழுது விலகியுள்ளார் அனிருத், அந்த வகையில் தற்பொழுது தற்காலிகமாக இசைக்கு குட்பாய் சொல்லியுள்ள அனிருத் அன்பு- அறிவு இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடித்து முடித்த பின்பு அடுத்த புதிய படங்களில் இசை அமைப்பாளராக கமிட்டாகலாம் என்கின்ற முடிவில் இருக்கிறார் அனிருத்.